Monday, March 15, 2021

23. சக்தி இல்லையேல் சிவம் இல்லை

 கவனிக்க: நம்மூரைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் 'அமரர்' B.ராமமூர்த்தி அவர்கள் குழந்தை காயத்ரியைப் பற்றிக் குறிப்பிடும்போது 'மூளையில் உள்ள கெமிக்கல்கள்' அதாவது 'திரவங்கள்' தான் அவளின் அதீத அறிவிற்குக் காரணம் என்று  குறிப்பிட்டார் என்பதை முன்பே சொல்லியிருந்தேன்.

ஆனால் டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் திடப் பொருளான மூளையின் அமைப்பு வித்தியாசமாக அமைவதைப் பற்றி மட்டுமே தான் சொல்லுகிறார். திரவத்தைப் பற்றி எங்கும் சொல்லவில்லை. 

எனது ஆய்வை நான் தொடர்ந்து மேற்கொண்டதில் கிடைத்த விடை 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்பதே! 

அப்படி மூளையில் என்ன தான் நடக்கிறது?

உச்சிக் குழி 1 மற்றும் 2ல் (ventricle 1 & 2) சுரக்கும் வாலை (எ) உச்சி நீர் (பிளாஸ்மா வகையைச் சேர்ந்த திரவம் என்பதால் இதற்கு நிறம் கிடையாது), மூன்றாவது உச்சிக்குழியை வந்தடைந்து பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பயனியல் (ஆனந்த்) சுரப்பி வெளியிடும் ஹார்மோன்களுடன் சேர்ந்து கலக்கிறது.மூன்றாவது உச்சிக் குழி மற்றும் மேற்குறிப்பிட்ட சுரப்பிகள் சேர்ந்த அமைப்பைத் தான்  மூன்றாவது கண், கண்ணாடி மாளிகை, கடவுள் வாழும் இடம் என்கிறோம்.பண்டைய எகிப்தியர்கள் 'வல்லூரின் கண்' (Horus eye) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.இறுதியாக நான்காவது உச்சிக்குழியை வந்தடைந்தபின்பு, ஒரு பகுதி முதுகுத்தண்டிற்கும் மற்றோருபகுதி மீண்டும் மூளையின் மேல்பகுதிக்கும் திருப்பி விடப்படுகிறது.

 ('உச்சி நீர் '    மேலேயுள்ள  படத்தில் நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ளது.இதை இப்படியும் புரிந்துகொள்ளலாம்: பூமியின் மேற்பரப்பிலும் உள்ளேயும் நீர் உள்ளது (இங்கே நீர்: வாலை (எ) உச்சி நீர்[cerebrospinal fluid], நிலம்:மூளை )

பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பயனியல் (ஆனந்த்)சுரப்பி


'வல்லூரின் கண்' (Horus eye)


எனது கருத்து:

ஒரு ஜீவநதியானது தலையின் உச்சி குழியில் நீர் (வாலை) சுரப்பது போல் மலையில் உண்டாகி, அருவியாகி, வரும் வழியில் காட்டாற்றுடனும் வேறு கிளை நதிகளுடனும் (பிட்யூட்டரி மற்றும் பயனியல் சுரப்பிகள் வெளியிடும் ஹார்மோன்களுடன் சேர்வது போல்) சங்கமிப்பதால் அதன் பண்பு மாறுகிறது. அப்படி நம் மூளையின் மூன்றாவது உச்சிக்குழி(3rd ventricle) போல் பூமியில் நீர் சங்கமிக்கும் இடங்களெல்லாம் புனித இடங்களாகக் கருதப்படுகின்றன.

       திரிவேணி சங்கமம்
                                         
அப்படியானால் அனைத்து நதிகளுமே தண்ணீர்தான் என்னும்போது அவற்றின் பண்பு தனித்துவமாக அமைவதற்குக் காரணம் பூமியாகிய மண்தான். வெவ்வேறு வழித்தடங்களில் வரும் நீர் வண்டல் மண்ணுடன் கலப்பதாலும், மலை உச்சியில் இருந்து கூழாங்கற்களால் வடிகட்டப்பட்டு வரும் தெளிந்த நீர் மூலிகை போன்ற செடிகளில் பட்டு வருவதாலும், ஒவ்வொரு நீரின் பண்பும் வேறுபடும். ஆனால் அவை சங்கமித்த பின் அவற்றின் மொத்த பண்பும் மாறிவிடும். எனவே நதிதான் 'சக்தி' என்றால் 'சிவம்' என்பது நமது உடல்தான். 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை'என்று சொல்லப்பட்டதும் இதுவே என்று உணர்கிறேன். எனவே மூளையில் உள்ள திரவமான நீரே 'சக்தி' (dynamic energy) மற்றும் திடப் பொருளான மூளை தான் சிவம் (static energy).

இப்பொழுது புரிகிறதா நதிகள் தோன்றுமிடம், பாயுமிடம், சங்கமிக்கும் இடங்களெல்லாம் ஏன் புனிதமாகக் கருதப்படுகிறதென்று? இந்துக்களுக்கு காசி,திரிவேணி சங்கமம், தலைக் காவேரி, ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கப்பட்டினம்,பவானி போன்ற இடங்கள். கிறிஸ்தவர்களுக்கு இயேசு ஜோர்டான் நதியில் ஞான ஸ்நானம் எடுத்த இடம் (இஸ்ரேல் புனிதப் பயணம் செல்பவர்கள் அங்கே இன்றும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்) மற்றும் நாசரேத்திலுள்ள மேரி கிணறு. இஸ்லாமியருக்கு மெக்காவிலுள்ள ஜம்ஜம் கிணறும் புனித இடங்களாகக் கருதப்படுகின்றன.


ஜோர்டான் நதியில் ஞான ஸ்நானம்


ஜம்ஜம் கிணறு
                                                  

                                       
                                                                  தலைக் காவேரி




No comments:

Post a Comment