Monday, March 29, 2021

26. யோகம் உடலுக்கு! தியானம் மனதுக்கு!

அஹம் பிரும்மாஸ்மி: எனது பிளாகின் இந்தப் பக்கத்தில் நான் மிக விரிவாக விளக்கப் போவது, எப்படி தியானமும் யோகமும் பயிற்சி செய்தால் நமது உடலில் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு நமது சிந்தையில் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைப் பற்றியே. இந்த மாற்றங்களின் இறுதி வடிவம்தான் நம்முள்ளே இறைவனைக்  காண்பது. இதுவே 'அஹம் பிரும்மாஸ்மி'. இதற்கு  சற்று நேரம் ஒதுக்கி ஆழப்படித்தால் நாம் யார், கடவுள் யார் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். முழுவதும் படிக்கப் பொறுமை இல்லாதவர்கள் அடுத்த பகுதிக்குச் செல்லலாம். ஆனால் இந்தப் பகுதியைத் தான் எனது பிளாக்கின் உயிர் நாடி என்பேன். இதை புரிந்துகொண்டால் யோகா, தியானத்திற்கும் சவாண்ட் சின்ரோமிற்கும் உள்ள தொடர்பை நான் எவ்வாறு நிறுவினேன் என்பதைப் பின்னர்வரும் பகுதிகளில் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

பிரும்மம் ஒக்கடே: இனி எப்படி யோகமும் (உடலையும்) தியானமும் (மனதையும்) ஒரு மனிதனை பண்படுத்த உதவும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். இதில் நான் கொடுத்துள்ள விளக்கங்கள் தூரகிழக்கு நாடுகளைச் சேர்ந்த 'சீகோங்' மற்றும் 'டாய் சீ' போன்ற பயிற்சிகளைக் கற்பிக்கும் குருமார்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தழுவி நான் எழுதியது. இதே விதத்தில் தான் நமது யோகக் கலையும், தியானமும் செயல்படுகிறது என அறிகிறேன். எனவே நாம் கற்கும் யோகம் எந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பினும் சரி அதன் இறுதி நிலை ஒன்றே. அதாவது அனைத்தின் பலனும் ஒன்றுதான். இதே தான் நமது மதங்களின் நோக்கமும்! நாம் பின்பற்றும் மார்க்கம் வேறு வேறாக இருப்பினும் இறைவன் என்பது ஒரே 'பரம்பொருள்' (பிரும்மம் ஒன்றுதான்) தான்! அதை அடைவதும் ஒரு நிலைதான்! பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்த்த அன்னமாச்சார்யார் பாடிய "பிரும்மம் ஒக்கடே" என்ற பாடலின் பொருளும் இதுவே!

 சக்கரங்கள் (நாளமில்லா சுரப்பிகள்- Endocrine system): பயனியல் சுரப்பி, ஹைபோதாலமஸ், தைராய்டு, பாராதைராய்டு, அட்ரீனல், பாங்கிரியாஸ், பெண்களுக்கு ஓவரீஸ் ஆண்களுக்கு டெஸ்டிஸ் என்று நிறைய இருக்கின்றன. இவை வெளியிடும் ஹார்மோன்கள் செய்திகளை கொண்டு செல்ல உதவும் கெமிக்கல் தூதர்கள் என்று சொல்லலாம். அதே வேளையில் நமது நரம்பு மண்டலத்தை மின் அதிர்வுகளை கடத்தும் தூதர்கள் எனலாம். இவை இரண்டும் நடத்தும் ஜாலங்களை இனி சற்றே விரிவாகக் காண்போம். 


தெய்வீக அனுபவங்கள்: இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக ஹைலுப்போதலாமஸ், பயனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளைச் சொல்லலாம். இவை மூன்றாவது உச்சிக்குழி (3rd ventricle) இருக்கும் இடத்தில் இருப்பதால் இவை அனைத்தையும் சேர்த்துதான் 'கண்ணாடி மாளிகை', கடவுள் இருக்கும் இடம், 'ஆக்ஞசக்கரம்' என்றெல்லாம் சொல்கிறோம். நமது நரம்பு மண்டலத்தையும், நாளமில்லா சுரப்பிகளையும், லிம்பிக் தொகுதி (உணர்ச்சிகள்/பாவங்களை வெளிப்படுத்தும் பகுதி) என்று அழைக்கப்படும் பகுதிகளையும் ஒருசேர தொடர்புகொள்ள முடிந்த காரணத்தால் 'ஹைபோதாலமஸ்' அதி முக்கியத்துவம் பெறுகிறது. 



 ஹைபோதாலமஸ்: ஒரு பாதாம் பருப்பின் அளவில் இருக்கும் இந்த சுரப்பி நமது கண்களின் நரம்புகள் குறுக்கும் நெடுக்குமாக மூளையில் பின்னிச் செல்லும் இடத்திற்குப் பின்னால் அமைந்துள்ளது. இது மேலும் சில ஹார்மோன்களைச் சுரந்து பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி அதன்மூலம் பயனில் சுரப்பியையும் விழிப்படையச் செய்கிறது.                                                 

 பிட்யூட்டரி சுரப்பி: ஹைபோதலமஸிற்குக் கிழே ஒரு பட்டாணி அளவில் அமைந்திருக்கும் இந்த சுரப்பி 'செல்லா டூர்ஸிக்கா' என்னுமிடத்தில் 'ஸ்பீநாய்டு' எலும்பின் மேல் அமைந்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வாயின் மேல் அண்ணத்திற்கு மேலே தான் இச்சுரப்பி அமைந்துள்ளது. நீங்கள் நாக்கை உள்மடக்கி மேல் அண்ணத்தைத் (upper palate) தொடமுடிந்தால் (இதுவே 'கேசரி முத்திரை') நீங்கள் பிட்யூட்டரி சுரப்பியின் அடிப்பகுதியைத் தூண்டுகிறீர்கள் என்று பொருள். இந்த எலும்பு மிகவும் நுட்பமானது.எனவே சிறு அசைவும், இதன் நிலையில் உண்டாகும் நுட்பமான மாற்றமும் ஹார்மோன் அளவுகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்கலாம்.

 பிட்யூட்டரி சுரப்பியும் ஹைப்போத்தலாமஸ்ஸும் செய்யும் விந்தைகள்: இவை இரண்டும் சேர்ந்து இயங்கும்போது மூளையின் பிற பகுதிகளையும், உடலின் மற்ற உறுப்புகளையும், மனித உணர்ச்சிகளையும் கட்டுப்படுப்படுத்துகின்றன. மாற்றங்களை உண்டாக்குகின்றன. எப்படி? 

இவை இரண்டும் சேர்ந்து தான் உடல் உஷ்ணம், பசி, தாகம், சோர்வு, வளர்ச்சி உறக்கம், எடை, இச்சை, வலி தாங்குதல், இரத்த அழுத்தம், உடல் கடிகாரம் (circadian rhythm), வினை, எதிர்வினை என அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன. 'தலையாய சுரப்பி' என்று நாம் பிட்யூட்டரி சுரப்பியை சொன்னாலும், ஹைபோதலமஸ் தான் அதற்குத் தேவையான தகவல்களை உடலின் பல பாகங்களிலிருந்தும் பெற்று வந்து நரம்பில் சுரக்கும் சில ஹார்மோன்களின் மூலம் பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி வேலை செய்ய வைக்கிறது. இதைத்தவிர பயனியல்(ஆனந்த) சுரப்பியையும் இயங்க வைப்பது ஹைபோதாலமஸ் தான்.

பிட்யூட்டரி சுரப்பியின் முன்பக்கமானது 7 முக்கியமான ஹார்மோன்கள் சுரக்கக் காரணமாகிறது. இதனால் தான் பால் சுரப்பி, விதைகள், தைராய்டு மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. 

பிட்யூட்டரியின் பின்பக்கத்தில் எந்த ஹார்மோனும் சுரப்பதில்லை என்றாலும் மூளையில் சுரக்கும் ஆக்சிடோசின், வாசோப்பிரசின் என்ற இரண்டு முக்கிய ஹார்மோன்களை தேக்கி வைத்து தேவைப்படும்போது வெளியேற்றுகிறது.

சிற்றின்ப எண்ணங்கள் ஏற்படக் காரணமான ஆக்சிடோசின்: இது தான் பொருளாசை, பற்றுதல் நம்பிக்கை, இச்சை போன்ற 'சிற்றின்ப எண்ணங்கள்' ஏற்படக் காரணமாக அமைகிறது. கைலாயம் தான் 'மூன்றாவது உச்சிக்குழி' என்றால்  ராட்சஸ ஏரியை  நான் ' ஆக்சிடோசின்' னுடன்  ஒப்பிடுகிறேன்.


பேரின்ப எண்ணங்கள் ஏற்படக் காரணமான வாசோப்பிரசின்: கைலாயம்தான் 'மூன்றாவது உச்சிக்குழி' என்றால்  மானசரோவர்  ஏரியை  நான் ' வாசோபிரிஸின்'னுடன்  ஒப்பிடுகிறேன்.உடல் கடிகாரம், உடல் நீர் ரத்தத்தில் கலப்பது, தாய்மை உணர்வு ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது. பேரின்ப எண்ணங்களைத் தூண்டுகிறது. 

பயனியல்(ஆனந்த) சுரப்பி: நமது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணமாக அமைவது பிட்டியூட்டரி சுரப்பியே. மேலும் இது பயனியல் (ஆனந்த) சுரப்பியையும் தூண்டிவிடுகிறது. பிட்யூட்டரி சுரப்பியும் பயனியல்(ஆனந்த) சுரப்பியும் கைகோர்த்து ஓர் அலைவரிசையில் வேலை செய்தால் நாம் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் புதுப்பிக்கப்படுகிறோம்.  இது வெளியிடும் பீனோலின், டிஎம்டி போன்ற ஹார்மோன்கள் உடலிலும் மனதிலும் மாற்றத்தை உண்டாக்கக் கூடியவை.

அதிக 'டிஎம்டி' சுரப்பது அமானுஷ்ய மற்றும் பரவச நிலையைக் கொடுக்கும். சில தாவரங்களிலும் இது சுரக்கிறது. இவற்றிலிருந்து கிடைக்கும் போதைப் பொருட்களை உட்கொள்ளும்போது டிஎம்டி சுரப்பதை அதிகப்படுத்தி தன்நிலையை மறக்கச் செய்யுமென முன்பே பார்த்திருந்தோம். 

                     

 பயனியல் (ஆனந்த) சுரப்பி-எங்கு அமைந்துள்ளது? நடு மூளையில் பிட்யூட்டரி சுரப்பிக்குப் பின்னால் சற்று மேலாக அமைந்துள்ளது. இது முழுவதுமாக வாலை நீரால் (CSF-Cerebro Spinal Fluid) குளிப்பாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் கியூபிக் கொள்ளளவில் உடலிலேயே அதிக ரத்தம் பாய்வதும் இங்குதான். இதை உடலின் சக்தி மிகுந்த இடமெனலாம். இதுவே தூக்கத்தைக் கொடுக்கும் 'மெலட்டோனின்' என்ற ஹார்மோன் அதிகளவில் சுரக்கக் காரணமாகிறது. மெலட்டோனின் இருட்டில் அதிகம் சுரக்கிறது, வெளிச்சத்தில் குறையத் தொடங்குகிறது. அப்படி உற்பத்தியாகும் மெலட்டோனின் வாலை நீரில் கலந்து (CSF-Cerebro Spinal Fluid) மூளை முழுவதும் வியாபிக்கிறது. மெலடோனின் அளவு தடைபடுவதே எண்ண ஓட்ட மாறுதல்கள், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது.மேலும் வயதைக் குறைத்துக் காட்டும் கார்டிசாலைக் கட்டுப்படுத்துவது, குறிப்பிட்ட பருவங்களில் வரும் நோய்கள் முதலியவற்றிற்கும் மெலடோனின் அளவே காரணமாக அமைகிறது. 

 மெலடோனினைத் தாண்டி ஒரு யோகியால் தியானத்தின் மூலம் பண்படுத்தப்பட்ட பயனியல் (ஆனந்த) சுரப்பியானது வளர்ச்சிதை மாற்றங்களை செல் அளவில் உண்டாக்கி உடலையும் மனதையும் கட்டுப்படுத்தக்கூடிய சில முக்கிய ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள 'செரட்டோனின்' என்ற வேதிப்பொருள். இதுவே பினோலின் மற்றும் டிஎம்டி சுரக்க மூல காரணமாக அமைகிறது. இவ்விரண்டு ஹார்மோன்களும் உடலையும் மனதையும் இணைக்கவல்லது.

 பயனியல்(ஆனந்த) சுரப்பியின் ஆன்மீகத் தொடர்பு: மேலே குறிப்பிட்டது போல் ஒரு யோகியால் தியானத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட பயனியல்(ஆனந்த) சுரப்பி அவரை ஆன்மீகத்துடன் இணைக்கிறது. பைன் மரக் கூம்பு போல் காட்சியளிக்கும் இச்சுரப்பி பண்டைய நாகரீகங்களைக் குறிக்கும் படங்களிலும், சிலைகளிலும் காணப்படுகிறது. இது ஞானத்தையும், சாகாவரத்தையும் குறிப்பால் உணர்த்துகிறது. பண்டைய எகிப்தியர்கள் மன்னர்களும், முக்கியஸ்தர்களும் இறந்த பின்பு அவர்களின் உடலைப் பதனிடும்போது இப்பகுதியை வாயின் மேல் அண்ணததிலிருந்து துளையிட்டு தனியாக வெட்டியெடுத்து விடுவார்கள்.

பயனியல் (ஆனந்த) சுரப்பி- மூன்றாவது கண்ணைத் திறக்க உதவும் திறவுகோல்: மனக் கண்ணால் பார்ப்பது, ஞானம் அடைவது போன்றவற்றிற்கு பயனியல் (ஆனந்த)சுரப்பிக்கும் கண்களின் ரெட்டினா பகுதிக்கும் உள்ள தொடர்பு காரணமாக அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் பல உயிரினங்களையும் ஆய்வு செய்ததன் மூலம் உணர்த் தொடங்கியுள்ளார்கள். இது இப்பொழுது தொடங்கிய வினையல்ல, உயிரினங்கள் உருவான காலத்திலிருந்தே தொடங்கி மனித இனம் உருவான காலம்வரை முக்கிய பங்காற்றியுள்ளது. மனிதக் கண்களின் ரெட்டினாவில் உள்ள செல்களும் பயனியல்(ஆனந்த) சுரப்பியில் உள்ள செல்களும் அவற்றின் அமைப்பும், புரோட்டீன்களும் ஒன்றுபோல் அமைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

மனிதனைத் தவிர 'டாட்டரா' என்ற ஓணான் வகையிலும்,'லாம்ப்ரீஸ்' வகை ஜெல்லி மீன்கள், மேலும் சில தவளை வகைகளிலும் கூட ஒளியை உணரும் தன்மையானது பயனியல் சுரப்பிகளில் காணப்படுகிறது. மனிதர்களின் மூன்றாவது கண் திறக்க ஒளி உணரும் பயனியல்(ஆனந்த) சுரப்பியின் தன்மை முக்கிய பங்காற்றுகிறது.

மெலடோனின் என்ற ஆன்ம மூலக்கூறு (spirit molecule):
ஆன்மீகத் தேடலில் உள்ளவரின் உடலில் சுரக்கும் அதிகப்படியான மெலடோனின் முதலில் உடலையும் மனதையும்  அமைதியாக்குகிறது. ஒரு யோகியின் பயனியல்(ஆனந்த) சுரப்பி வெளியிடும் டிஎம்டி மற்றும் பீனோலின் அவரின்  உணரும் தன்மை, விழிப்புணர்வு, மனநிலை, அறிவாற்றல், பழக்கவழக்கம் அகியவற்றில் மாறுதல்களை உண்டாக்குகிறது. இதில் பீனோலின் அவர் விழித்திருக்கும்போதே கற்பனை உலகில் சஞ்சாரிக்கவும், ஞானக்கண் கொண்டு பார்க்கவும் உதவுகிறது. இது போன்ற பரவச நிலையை பண்டைய எகிப்தியர்கள் மற்றும் ஜோராஷ்ட்ரியன்கள் வழிபாட்டின்போது (நம்மூரில் சாமியாடுவதுபோல்) பயன்படுத்தியுள்ளார்கள்.மேலும் பீனோலின் டிஎன்ஏவை பிரதியெடுக்கவும், உடலின் நாடியுடன் சேர்ந்து நொடிக்கு எட்டு சுழற்சிகள் என்ற விதத்தில் வேலை செய்யவும் உதவுகிறது.

டிஎம்டி: இது பயனியல்(ஆனந்த) சுரப்பியினால் ஆழ்நிலை தியானத்தின் போதும், பிறப்பின் போதும், அதிக மன அழுத்தத்தின் போதும், உறவுகொள்கையில் உச்சநிலையை அடையும் போதும், மரணத்தின் வாயிலை நெருங்கும்போதும் அதிகமாக சுரக்கிறது. அதேபோல் ஆழ்ந்த உறக்கத்தின்போது இது ரத்தத்தில் கலப்பதால் கண்கள் துடிக்கக் காரணமாகி கனவைக் கலைத்து விழிப்பைத் தருகிறது. டிஎம்டியே உடலையும் ஆன்மாவையும் 'ஞானக் கண்' கொண்டு காண அதீத விழிப்புணர்வால்  இணைக்கிறது.

பயனியல்(ஆனந்த) சுரப்பியும் அதிர்வும்: விழிப்படைந்த
பயனியல்(ஆனந்த) சுரப்பி நமது உணர்வுகளை அதிர்வுகளின் மூலம் மாற்றவல்லது. ஒர் அலைவரிசையில் ‌ஒருங்கே அமைந்த அதிர்வானது (மணியோசை) நமது மனநிலை, உணர்வு, உடல் நிலை போன்றவற்றை மாற்றி அமைக்கிறது. உதாரணத்திற்கு இசையை சொல்லலாம். எண்பதுகளில் இசைக்கலைஞர் ஃபேபியன் மேமன் செல்களில் இசையின் அதிர்வால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இசையால் கேன்சர் செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இதை நாம் முன்பே பார்த்ததுபோல் இஸ்ரேல் போன்ற நாடுகளில் கர்ப்பிணிப் பெண்கள் நல்ல இசையை கேட்டு தங்களையும் வயிற்றில் உள்ள சிசுவையும் நல்ல முறையில் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

ஹைப்போதலமஸ்ஸும், பிட்யூட்டரி சுரப்பியும் ஒருசேர பயனில்(ஆனந்த) சுரப்பியுடன் சேர்ந்து செயலாற்றினால், நமது முழு உடலும் சேர்ந்திசையில் ஆடும்.

பண்டைய சீன வான்சாஸ்திர வல்லுநர்கள், முதல் அதிர்வானது சப்தரிஷி மண்டலத்திலுள்ள (Ursae Minoris) அதிக ஒளியை உமிழும் துருவ நட்சத்திரத்திலிருந்து (North Star @ Polaris) உருவானதாகச் சொல்கிறார்கள். எனவேதான் பூமியும் சூரியனை நோக்கி திரும்பாமல் சப்தரிஷி மண்டலத்தை பார்த்தபடி வடக்கு நோக்கி சாய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால்தான் உயிர்களும் தாவரங்களும் பூமியில் தழைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். மேலும் சீனர்களின்  சீகோங் யோகப் பயிற்சிகளும் வடதிசையை நோக்கியே இருப்பதாக சொல்கிறார்கள்.அதாவது இந்த குறிப்பிட்ட நட்சத்திரம் வெளியிடும் அதிர்வானது‌ நேரடியாக நமது பயனியல் (ஆனந்த) சுரப்பியை வந்தடைந்து விழிப்படையச் செய்கிறது என்கிறார்கள். இந்த அதிர்வின் போது கிடைக்கும் அண்டத்தில் இருந்து வரும் செய்தியானது பயனியல்(ஆனந்த) சுரப்பியுடன் சேர்ந்தே அசையும் ஹைபோதலமஸ்‌ மற்றும் பிட்யூட்டரி சுரப்பியையும் சென்று சேர்கிறது. பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து தகவல் இதயத்திற்கும் ஏனைய உறுப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது. 

காந்த விசைக்கும் பயனியல்(ஆனந்த) சுரப்பிக்கும் உள்ள தொடர்பு:
ஒலி, அதிர்வு, இவற்றுடன் காந்தவிசையையும் அறியக்கூடியது பயனியல் (ஆனந்த) சுரப்பி. இதுவே விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் திசைகாட்டியாக விளங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பயனியல் (ஆனந்த) சுரப்பி விழிப்படைந்த காரணத்தினால்தான் மீனாட்சிக்கும் போன்ற சவான்ட்களுக்கு திசைகள் தெரிகிறது என்று நம்புகிறேன். 

இதே காந்தவிசையின் காரணமாகவே சுற்றுப்புற சூழலின் அழுத்தம் மற்றும் புவியில் ஏற்படும் காந்தப்புயல் போன்றவை நமது  உடலின் பயனியல்(ஆனந்த) சுரப்பியை பாதிப்பதன் மூலம் நம் உடலின் கடிகாரம், மெலடோனின் சுரப்பதை மாற்றுவதன் மூலம் நம் முழு உடலையும் பாதிக்கிறது.

அதேபோல் சவான்ட் சிண்ட்ரோம்‌ குறித்து ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் தலையில் காந்தப் புலத்தை (transcranial magnetic stimulation) உருவாக்கியபோது அவர்களின் மூளையின் லெஃ ப்ட் ஆன்டீரியர் டெம்போரல் லோப்(left anterior temporal lobe) தற்காலிகமாக செயலிழந்ததாகவும், அதன்மூலம் சாதாரண மனிதர்களாலும் அசாதாரணமாக சவான்ட்களைப்போல் தற்காலிகமாக சிந்திக்க முடிந்ததாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
                                                லெஃ ப்ட் ஆன்டீரியர் டெம்போரல் லோப்


அன்பே சிவம்: இது 'தான்', 'தன்னுடையது' என்ற நிலையைத் தாண்டி வாழும் ஞானப் பாதையை நோக்கி செல்பவர்களுக்கான வழிமுறை!

நமது இதயமானது மின்காந்தப் புலத்தை உருவாக்கக்கூடியது. 'நல்லதை நினை நல்லதே செய்' என்ற சித்தர்களின் வாக்கிற்கேற்ப நாம் அன்பும் கருணையும் கொண்டு வாழ்ந்தால் இந்த காந்தப் புலம் இதயத்திலிருந்து விரிவடைந்து பயனியல்(ஆனந்த)சுரப்பியை சென்றடைகிறது,இவ்விரு  உறுப்புகளும் ஓர் அலைவரிசையில் இயங்கும் போது நமது மூன்றாவது கண் மேலும் விரிவடைகிறது. இதுதவிர பயனியல்(ஆனந்த) சுரப்பிக்கும் இடஞ்சார்ந்த நோக்கு நிலைக்கும்(spatial orientation) உள்ள தொடர்பால் உடல் கடிகாரத்தின் இயங்கும் முறை மாறி காலமும் இடமும் நகர்ந்து உள்ளுக்குள் மாற்றங்களை நிகழ்த்துகிறது (இதுவே முக்காலத்தையும் அறியும் தன்மையைக் கொடுக்கிறது என்று நினைக்கிறேன்).

கண்ணாடி மாளிகையில் ஒளி: நாம் முன்பே பார்த்ததுபோல் பிட்யூட்டரி சுரப்பி, ஹைபோதாலமஸ்,பயனில்(ஆனந்த)சுரப்பி ஆகிய மூன்றும் சேர்ந்ததே 'கண்ணாடி மாளிகை'. 2002 ஆண்டிற்கு முன்புவரை விஞ்ஞானிகள் கண்களின் ஒளி அறியும் தன்மைக்குக் காரணம் கண்களில் உள்ள கூம்புகள் (cones) மற்றும் குச்சிகளே (rods) காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் மூன்றாவதாக  மெலனோஸ்பின் (Melanopsin) என்ற புதிய செல்களையும் கண்டுபிடித்தார்கள். இவை ஹைபோதலமஸ்ஸிலுள்ள SCN என்ற பகுதிக்கு நேரடியாக செய்திகளை கொண்டு செலுத்துகின்றது. இதுவே நமது விழிப்பு, ஹார்மோன்கள் சுரப்பு, உடல் உஷ்ணம், செரிமான செயல்பாடு, உடல் கடிகாரம், தூக்கம் எனஅனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.

ஹைபோதலமஸ்ஸிற்கு ஒளியா இருளா என்ற தகவல் சென்று சேரும்போது, அது கிடைக்கும் தகவலுக்கேற்ப பயனியல் சுரப்பியை வேலை செய்யவோ அல்லது நிறுத்தவோ தூண்டுகிறது. இது நேரடியாக மெலடோனின் மற்றும் கார்டிசால் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெலட்டோனின் அளவு மாறும்போது அது SCN, பிட்டியூட்டரி மற்றும் ரெட்டினாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் தொடர் மாற்றங்களை உண்டாக்குகிறது. பிட்டியூட்டரி சுரப்பியும் ஒளியின் தன்மைக்கேற்ப வசோபிரசினை வெளியிடுகிறது.இது SCNல் மாறுதலை உண்டாக்கி உடல் கடிகாரத்தின் இயக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கண்களைத் தாண்டி நமது முழு உடலுமே ஒளியின் தாக்கத்தை உணரக் கூடியதென்பதால்,  இதுவும் SCN மற்றும் பயனில் சுரப்பிக்குத் தகவல் அனுப்பி மெலட்டோனின் சுரப்பை நிறுத்துகிறது. இன்று அதிக ஒளி உமிழும் விளக்குகள் பெரும்பாலான இடங்களில் இருப்பதால் தான், தூங்கும்போதும் தியானம் செய்யும்போதும் அதிக ஒளி இருக்காத வண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள்.

இனி யோகப் பயிற்சியின் மூலம் எவ்வாறு பயனியல்(ஆனந்த) சுரப்பியும், கண்ணாடி மாளிகையும்  செரிவூட்டப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்:

மூச்சுப்பயிற்சி: பலவகை மூச்சுப் பயிற்சிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தும்போது  பிட்யூட்டரிபயனியல் (ஆனந்த)
 சுரப்பிகள் எழுச்சி அடைவதோடு வாலை நீரும் (CSF-Cerebrospinal Fluid) அயனியாக்கம் (ionisation) செய்யப்படுகிறது.

நெற்றிப் பொட்டைத் தட்டுவது: நெற்றிப் பொட்டை லேசாகத் தட்டுவது பயனியல்(ஆனந்த) சுரப்பியையும், கண்ணாடி மாளிகையையும் விழிக்கச் செய்கிறது. நெற்றியிலிருந்து கிளம்பும் அதிர்வானது நேரடியாக பயனியல்(ஆனந்த) சுரப்பியைச் சென்றடைகிறது. இதே அதிர்வானது ஸ்பீனாய்டு எலும்பின் வழியாகச் சென்று  'செல்லா டூர்ஸிக்கா'வைத் தூண்டி பிட்டியூட்டரி சுரப்பியை எழுப்புகிறது. பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் அதிர்வானது ஹைபோதாலமஸ்சையும் தூண்டுகிறது.


மந்திர உச்சாடனம்: சில மந்திரங்களை உச்சரிப்பது நேரடியாக கண்ணாடி மாளிகைக்கு செல்கிறது.பிட்யூட்டரி, பயனியல் (ஆனந்த) சுரப்பிகள் எழுச்சி அடைவதோடு, வாலை நீரும் (CSF-Cerebrospinal Fluid) அயனியாக்கம் (ionisation) செய்யப்படுகிறது. இதைத்  தான் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர்.ஜேம்ஸ் ஹர்ட்ஸ்ல்  'சமிஸ்க்ருத விளைவு' என்று தனது சமீபத்திய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சமிஸ்க்ருதம்  வேண்டாதவர்கள் "ஓம்" என்ற ஓம்காரத்தை மட்டுமே சொல்லி வந்தால் போதுமென்பது அடியேனின் கருத்து.

கேசரி முத்திரை: உங்கள் நாக்கை மடக்கி மேல்அண்ணத்தைத் தொடும் போது  கண்ணாடி மாளிகை எழுச்சி அடைகிறது.

சுருக்குவது: கண்களையும், பிஷ்ட சதைகளையும் சுருக்கி அங்கே உள்ள தசைகளுக்கு வலுவேற்றும் பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம் முதுகுத்தண்டிற்க்கும், அங்கிருந்து நேரடியாக மண்டைக்கும் அதிர்வுகள் சென்று சேர்கின்றன. இது கண்ணாடி மாளிகையை வலுவேற்றுகிறது.

அரைவட்ட வடிவில் மேற்கொள்ளும் சில உடற் பயிற்சிகள் மூலம் மின்காந்தப் புலத்தை உண்டாக்குவது, வாலை நீரை அயனியாக்கம் (ionisation) செய்து இருதயத்தில் உள்ள மின்காந்தப் புலத்தைத் தூண்டி அதன்மூலம் பயனியல்(ஆனந்த) மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளை விழிப்படையச் செய்கிறது.

இருட்டால் கிடைக்கும் நன்மைகள்: இருள் சூழ்ந்த இடத்தில் தியானம் செய்வது மெலடோனினை அதிகம்  சுரக்கச் செய்து, அதனால் பீனோலின் மற்றும் டிஎம்டி சுரப்பதும் அதிகரித்து இறுதியில் மூன்றாவது கண் திறக்கிறது.

(இதனால்தான் யாரும் இல்லாத அமைதியான குகைகளில் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதைப்பற்றி இன்னும் விரிவாக பௌதீக ரீதியாக பிறகு பார்ப்போம்!)

புன்முறுவலும் சிரிப்பும்: சிரிப்பது இதயத்திற்கு இதமளிப்பதோடு மற்ற உறுப்புகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும். மேலும் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி ஊட்டுகிறது. மேலும் சத்தமாகச் சிரிப்பது என்டோர்ஸ்பின்னை வெளியிட்டு ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும். அமைதியான மனது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கண்ணாடி மாளிகையில் உள்ள ஹார்மோன்களை அதிகம் சுரக்கச் செய்கிறது.

மனதை ஒருமுகப்படுத்துதல்:மனதை ஒருமுகப்படுத்துவது சக்தியை அதிகரிக்கும். கண்ணாடி மாளிகையை நோக்கி மனதை செலுத்துவது அதனை விழிப்படையச் செய்யும்.

உணவே மருந்து: உடலும் மனமும் மேன்மை அடைய உணவும் நீரும் முக்கியம். அதிலும் கண்ணாடி மாளிகை விழிப்படைய உடலில் போதுமான அளவு  நீர் இருப்பது மிக அவசியம். அதேபோல் சத்தான உணவில் ட்ரிப்டோபான் (tryptophan) அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது உடலின் வேதிப்பொருட்களுக்கு மிக அவசியம். இச்சத்து சாக்லேட், பாதாம் பருப்பு,வாழைப்பழம், எள், பேரிச்சை, கடலை மற்றும் கொண்டைக்கடலை முதலியவற்றில் அதிகமிருக்கிறது.

தண்டுவட மூச்சு (vestibular breathing exercises)-சிறப்பு யோகப் பயிற்சிகள்!
வாசி யோகத்தில் உள்ள குயில், மயில், நெமிலி, மலை, சர்ப்பம் போன்ற நிலைகள் தண்டுவட மூச்சுப் பயிற்சிகளே. ஆனால் முறையாக குருவின் துணையின்றி ஆன்லைனில் பார்த்து அல்லது படித்து இவற்றைப் பயிற்சி செய்வது உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். 

இதுபோன்ற யோகப் பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளும்போது முதுகுத்தண்டில் ஏற்படும் ஒருங்கிணைந்த அதிர்வானது அங்கே காந்தப் புலத்தை உண்டாக்கி, வாலை நீரை (csf- cerebro spinal fluid) செரிவூட்டுகிறது. இதனால் பயனியல் (ஆனந்த) சுரப்பியையும் தூண்டப்படுகிறது. இதனால் உடலின் எலக்ட்ரோலைட்களின் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி நமது உடலையே ஒரு 'மின்கடத்தி' போல் மாற்றுகிறது. அதிக கடத்தும் தன்மையானது, ஆற்றல்(சக்தி) நமது மூலையிலும், முதுகுத் தண்டிலும் பயணிக்க பாதை வகுக்கிறது. அதேநேரம் பயனியல்(ஆனந்த) சுரப்பி வெளியிடும் டிஎம்டி போன்ற வேதிப்பொருட்கள் வாலை நீரை (csf-cerebrospinal fluid) மேலும் செரிவூட்டுகின்றன.

இப்பயிற்சியால் முதுகுத்தண்டின் அடியிலுள்ள முக்கோண (sacrum-புனித ) எலும்பு அசைய தொடங்கி, அதனால் ஏற்படும் அதிர்வலைகளை தலையிலுள்ள ஸ்பினோய்டு எலும்பு உணர்ந்து அதுவும் அதிரத் தொடங்கும். இப்போது இவ்வெலும்பின் மீது அமர்ந்திருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு ஹைபோதலமஸ்ஸையும் தூண்டுகிறது. இதனால் பயனில்(ஆனந்த) சுரப்பி எழுப்பப்படுகிறது.மென்மேலும் அதிர்வால் தூண்டப்படும் பிட்டியூட்டரி சுரப்பி ஆக்சிடோசின் மற்றும் வாசோப்ரஸின் போன்ற வேதிப்பொருட்களை வெளியிடும். இதனால் நம்பிக்கை,அமைதி,கருணை போன்ற எண்ணங்கள் அதிகரித்து, பயம்,பதட்டம், கோபம் போன்ற குணங்கள் குறையத் தொடங்கும்.
                                    
                                                         

                                                                                                                  sacrum (புனித  எலும்பு)



முதுகுத் தண்டைப்  பற்றி  பைபிள் சொல்வது:
நமது இமயமலையைப் போல் இஸ்ரேலில்  இருக்கும் பனி மலைத் தொடர் தான் ஆன்டி லெபனான் . இங்கிருந்து தான் நமது புனித  நதியான கங்கையைப் போல்  ஜோர்டான் நதி உருவாகி தெற்கு நோக்கிப் பாய்ந்து  இறுதியாக சாக்கடலில் கலக்கிறது (முதுகின் அடிப்பகுதி). இங்கிருக்கும்  ஹெர்மன் சிகரம் (கபாலம்) நமது கைலாயம்போல்  மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தது.






          கைலாயம் தான் 'கபாலம்' என்றால் நேர்கோட்டில் அமைந்திருக்கும் இலங்கையின் கதிர்காமமே  'முதுகின் அடிப்பகுதி'.                                                                         

அதேபோல்  இஸ்ரேலின்  இந்த  ஆன்டி லெபனான் மலையும்  இமயத்தின் கைலாயமும் நேர்கோட்டில் அமைந்துள்ளதைப்  பார்க்கலாம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
நாம் முன்பே பார்த்ததுபோல் பிட்டியூட்டரி சுரப்பி வாயின் மேல் அண்ணத்தில் ஸ்பீனாய்டு எலும்பிற்கு மேல் அமைந்துள்ளது. இப்பொழுது கேசரி முத்திரையைப் பயன்படுத்தி நாக்கின் மேல் அண்ணத்தைத் தட்டத் தொடங்கினால் வசோபிரசின் மற்றும் ஆக்சிடோசின் கலந்த கலவை வாலை நீருடன்(Csf-cerebrospinal fluid) கலந்து சைனஸ் ஓட்டைகளின் வழியாக நமது வாயை வந்தடையும். இதுவே 'அமிர்தம்' (nectar) என்றழைக்கப்படுகிறது.                               
                                                                  கேசரி முத்திரை

வசோபிரசினும், ஆக்சிடோசினும் பிறக்கும்போது அதிகம் சுரக்கும் ஹார்மோன்கள். இவையே மீண்டும் அமிர்தமாக கிடைக்கும்போது அது உங்களுக்குள் பேரன்பையும் மீண்டும் பிறந்தது போன்ற உணர்வையும் தரும்.

இதனால்தான் நமது வாயின் கடைசிக் கடைவாய்ப் பல்லை 'ஞானப் பல்' என்றழைக்கிறோமோ? சில நேரங்களில் இப்பற்களை வேருடன் பிடுங்கிவிட்டால்  சைனஸ் ஓட்டைகள் திறந்து அவற்றின் வழியாக  மூளைநீர் வாய்க்கு வந்து பிரச்சனைகளை உண்டாக்குகிறதே?இப்படி வாயை எட்டும் அமிர்தம் நேரடியாக வயிற்றுக்குள் செல்கிறது. மேலும் செரிமானத்தின் மூலமாக நமது ரத்தத்திலும் கலக்கிறது.

ஞானப் பல்லுக்கு (wisdom tooth) நான் சொல்லும் பெயர்க் காரணம்: பொதுவாக நமது வாயின் கடைசியில் இருக்கும் கடைவாய்ப் பல்லை ஞானப் பல் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பருவ வயதை கடந்த பிறகே வளரும். சிலருக்கு வாயின் மேல் வரிசை கடைவாய்ப் பல்லை வேரோடு பிடுங்க நேர்ந்தால் அவர்களுக்கு தவறுதலாக சைனஸ் பாதை திறந்து‌ அதன் மூலம் தலையிலிருந்து வாலை நீர் (CSF-cerebrospinal fluid) வாய்க்குள் சொட்டத் தொடங்கும். அதை பலரும்  கோழையென என நினைத்து துப்பிக்கொண்டே இருப்பார்கள். இறுதியில் அந்த சைனஸ் பாதை மருத்துவர்களால் மூடப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு தீர்வு கிடைக்கும். இதேபோல் தலையில் பலமாக அடிபட்டால் மூக்கின் வழியாகவும் வாயின் வழியாகவும் வெளிப்படும் சளி அல்லது கோழை நாம் நினைப்பதும் இதே வாலை நீர் (CSF-cerebrospinal fluid) தான்.

அதேவேளையில் ஒரு யோகி தியானமும் யோகமும் கருத்தாய்ப் பழகி மனதையும் உடலையும் செம்மைப்படுத்தி சித்தியடையும் நிலை வரும்போது 'கேசரி' முத்திரையைப் பயன்படுத்தி அவரால் ஆக்சிடோசின்  வாஸோபிரிஸ்சின் மற்றும் வாலையுடன் கலந்த திரவத்தை  சுவைக்க முடிந்தால் அதுவே 'அமிர்தம்' என்றழைக்கப்படுகிறது.







Friday, March 26, 2021

25. பாரதிக்கும் கவியரசருக்கும் நிகழ்ந்த உயிர் வேதியியல் மாற்றங்கள்!

டாக்டர்.மாரோ சாப்படெராவின் காணொளியின் மூலம் நான் புரிந்து கொண்டது: மூளையும் நமது மத்திய நரம்பு மண்டலமான முதுகுத் தண்டும் (CNS-central nervous system) வாலை நீரால்CSF-Cerebrospinal fluid) உட்புறமும் வெளிப்புறமும் குளிப்பாட்டப்படுகிறது 

(எனது எளிய விளக்கம்:'சாம்பார் இட்லி' கப் தான் உங்கள் கபாலமென்று நினைத்துக் கொள்ளுங்கள்!சாம்பார் தான் 'வாலை' இட்லி தான் 'மூளை')

நியூரான்களுக்கு வேண்டிய தகவல்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்தப்படுவது, மத்திய நரம்பு மண்டலத்திற்கு தேவையான புரதங்கள் மற்றும் ஹார்மோன்களை எடுத்துச் செல்வது, உடலின் கடிகாரத்தை (circadian rhythm) ஒழுங்குபடுத்துவது, பசியை உணர்த்துவது, செல்கள் மற்றும் மூலக்கூறுகளின் நகர்வதற்கு வழிகாட்டுவது, ஸ்டெம் செல்களை கண்காணிப்பது,கழிவுகளை வெளியேற்றுவது, மூளையையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் அதிர்வுகளிலிருந்து காப்பது, அயான்களின் சமநிலையைப் பாதுகாப்பது என்பதோடு, ஆற்றல், அதிர்வு, தகவல் முதலியவற்றை வாங்கவும் கொடுக்கவும் வல்லது வாலை  (CSF-Cerebrospinal fluid) என்கிறார்.

அவர் காட்டும் மேற்கோள்கள்:

1)."ஆன்மா வாலைநீரில் (CSF-Cerebrospinal fluid) நீந்துகிறது".

"ஒளியையும், கேளா ஒலியையும் (ultrasonic sound) கூடக் கடத்தக் கூடியது வாலை(CSF-Cerebrospinal fluid)"-டாக்டர்.ரென்டாப் ஸ்டோன்.

2)."தெய்வீக அறிவானது வாலைநீரின் மூலம் மனித உடலில் பாய்ச்சப்பட்டு மனிதனின் செயல்பாடு,நெறி, அறிவு போன்றவை அமையக் காரணமாகிறது"-டாக்டர்.சதர்லேண்ட்.

3).இவை தவிர மூன்றாவது உச்சிக்குழியுடன் (3rd ventricle) தொடர்பு கொள்ளும் பயனியல் சுரப்பி (ஆனந்த சுரப்பி) வெளியிடும் 'டிஎம்டி' மற்றும் 'மெலடோனின்' ஹார்மோன்களைக் கொண்டு செல்வதற்கும் வாலைநீர்(CSF) பயன்படுகிறது என்கிறார்.

மெலடோனின்: இந்த ஹார்மோன் நமக்கு இரவையும் பகலையும் புரியவைத்து, இரவில் வெளிச்சம் குறையும் போது அதிகம் சுரந்து நித்திரையைக் கொண்டுவருகிறது. (மீனாட்சிக்கு இது குறைவாக சுரந்திருக்குமோ? அதனாலேயே அவள் அதிகம் தூங்காது சிறு வயது முதல் விழிப்புடன் இருக்கிறாளோ?)

டிஎம்டி: இந்த ஹார்மோன் மனித உடலில் இயற்கையாகச் சுரப்பதைத் தவிர கஞ்சா,அபின்,எல்எஸ்டி போன்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் போதை வஸ்துக்களிலும் அதிகம் காணப்படுகிறது. இதுவே நமக்கு அமானுஷ்யமான கனவுகளையும், போதைப் பொருட்களை உட்கொண்டால் தன்நிலையையும் மறக்கச் செய்கிறது (இது அதிகமாக சுரப்பதால் தான் மீனாட்சி சில நேரங்களில் தானாக பேசி சிரித்துக் கொள்கிறாளோ?). அந்த 'தன்னை மறந்த நிலை'யில் தான் அவளுக்கு அறிமுகமில்லாத விஷயங்களும் யார் மூலமாகவோ அல்லது மற்ற பரிமாணங்களில் மூலமாகவோ கற்பிக்கப்படுகிறது என்றே நம்புகிறேன். 'சினஸ்தீஸியா' பிரச்சனையும் இதன் வெளிப்பாடே என்று தோன்றுகிறது. இந்த குறிப்பிட்ட ஹார்மோன் பிறக்கும் போதும், இறக்கும்போதும் நம் உடலில் அதிகம் சுரப்பதாகக் குறிப்பிடுகிறார் டாக்டர்.மாரோ சாப்படெரா. 'டிஎம்டி' அதிகம் சுரந்த காரணத்தால் தான் மரணப் படுக்கையில் இருந்த எனது தாத்தாவிற்கு அமானுஷ்யமான விஷயங்கள் கண் முன் தோன்றியிருக்கலாம்.

 இன்றும் எண்ணற்ற குடும்பங்களில் வயது முதிர்ந்தவர்கள் இறக்கும் தருவாயில் தங்களது குழந்தைப் பருவத்தில் எப்பொழுதோ நடந்த சில விஷயங்களைச் சொல்வது (அதைப் பற்றிய சிந்தனையே அதுவரை அவர்கள் வாழ்நாளில் இருந்திருக்காது), விட்டத்தை பார்த்தபடி யாருடனோ பேசுவது மற்றும் தனது முடிவைப் பற்றி முன்கூட்டியே சொல்வது போன்றவையும் நிகழலாம்!

இடகலை-பிங்கலை-மற்றும் சுழுமுனை நாடி: மேலும் சுவாமி விவேகானந்தர் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார். அதாவது முதுகில் உள்ள நரம்புத் தொகுதிகளாக 'இடகலை' (negative energy), 'பிங்கலை' (positive energy) என்ற நாடிகள் ஒன்றை ஒன்று பின்னியபடி செல்கின்றன மற்றும் 'சுழுமுனை' நாடியானது இவற்றின் நடுவே நேர்கோட்டில் செல்கிறது என்பதோடு, இம்மூன்று நாடிகளும் பின்னிக் கொள்ளும் ஒவ்வொரு இடமும் சக்கரங்களாக யோகிகள் கருதுவதைக் குறிப்பிடுகிறார். இடகலை நாடியானது பயனியல் (ஆனந்த) சுரப்பியையும், பிங்கலை நாடியானது பிட்யூட்டரி சுரப்பியையும்  சென்றடைவதாக தான் நம்புவதை விளக்குகிறார். மேலும் மூன்றாவது உச்சிக் குழியில் 'குண்டலினி' சக்தி வெளிப்பட்ட பின்பு 'கேசரி' முத்திரையைப் பயன்படுத்தி எவ்வாறு சித்தர்கள் அமுதுண்டு சாகா வரம் பெற்றார்கள் என்பதையும் விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறார்.

மேலும் இடகலை- பிங்கலை  பற்றி தெரிந்துகொள்ள: ராகு பிங்கலை  நாடியையும் (சூரிய நாடி) - கேது இடகலை நாடியையும்  குறிக்கின்றன (சந்திர நாடி). இது குறித்த கட்டுரை இங்கே!

நான் சொல்ல விரும்பும் மேலும் சில விளக்கங்கள்: நமது சித்தர்கள் 'பிரம்ம பத்திரம்' (புகையிலை) மற்றும் 'பதஞ்சலி மூலிகை' (கஞ்சா) போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தி உடலின் 'டிஎம்டி' அளவை அதிகப்படுத்திக் கொண்டு 'பரவசநிலை'யை அடைந்திருக்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா கிராமத்து பூசாரி ஏன் 'கள்' குடித்துவிட்டு சாமி ஆடியபடி குறி சொல்கிறாரென்று? இதுபோல் தென்அமெரிக்கப் பழங்குடி மக்களும் எல்எஸ்டி போன்ற போதை வஸ்துகளை வழிபாட்டின்போது பயன்படுத்தியிருக்கிறார்கள். 

பாரதிக்கும் கவியரசருக்கும்  உள்ளே நிகழ்ந்த உயிர் வேதியியல் மாற்றங்கள் : போதை வஸ்துக்களை பயன்படுத்திய காரணத்தால் தான் பாரதிக்கு காலம் கடந்து பயணித்து உலகத்தைக் காண முடிந்திருக்கிறது. 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சொல்வது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது போல் 'அனைத்து உயிர்களும் ஒன்றே' என்ற சித்தர்களின் வாக்கு தானே? 

அதேபோல் ஒவ்வொரு மனிதனும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் சாகாவரம் பெற்ற பாடல்கள் என்று சொல்வதோடு, ஒவ்வொரு வரியும் தனக்காக எழுதப்பட்டதாக நினைப்பது அவர்களுடைய மனதைத் தொடுவதால் தானே? "கண்ணதாசன் போல் தண்ணி அடித்தால் கவிதை வருமா கழுதைக்கு?"என்று மெல்லிசை மன்னரும் பாடியிருக்கிறாரே?! ஆன்மீக  நம்பிக்கை இல்லாத கண்ணதாசன் அவர்கள் பின்நாளில் ஆன்மீகவாதியாக மாறி  "அர்த்தமுள்ள இந்துமதம்" எழுதியது அவருக்குள் நிகழ்ந்த ஒரு உயிர் வேதியியல் மாற்றமே (bio-chemical reaction).

எனவே ஒருசிலருக்கு  மூளையில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஹார்மோன்களால் நிகழும் சில மாற்றங்கள் அதீத கற்பனையையும், படைப்பாற்றலையும், பேரன்பையும்,காதலையும், இறை பக்தியையும் தூண்டலாம். நன்மை செய்யலாம்!

ஆனால் சிலருக்கோ பழிவாங்கும் உணர்ச்சி,பயம்,மனநல பாதிப்பு,மன அழுத்தம், கனவிலும் நேரிலும் தீய சக்திகள் வந்து மிரட்டுவது, தூக்கத்தில் வேற்றுகிரக வாசிகள் கவர்ந்து செல்வதென பிரச்சனைகளையும் தூண்டலாம். இவற்றிற்கு எல்லாம் காரணம் நாம் முன்பே பார்த்தது போல் தனிப்பட்ட மனிதர்களின் உடலில் உள்ள திரவங்களின் கலவை மற்றும் திடப் பொருட்களான மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் அமைப்பு போன்றவை தானே?

                                                                 நீம் கரோலி பாபா

மேலும் 1960களில் நீம் கரோலி பாபா (ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரின் சீடரே!) என்ற இமயமலையிலிருந்த துறவியால் கவரப்பட்ட  ஹார்வேர்டு பல்கலைக்கழக மனவியல்துறை பேராசிரியர் ரிச்சர்ட் ஆல்பர்ட் தன்னை 'ராமதாஸ்' என்று பெயர் மாற்றிக்கொண்டார் (பாபாவைக் காண முதல் முறை நண்பருடன் இமய மலைக்கு வந்த ரிச்சர்ட் நம்பிக்கை இல்லாமல்தான் சென்றிருக்கிறார். ரிச்சர்டைக் கண்ட நீம் கரோலி பாபா "இரவில் வருகின்ற வழியில் வண்டியிலிருந்து இறங்கிய நீ விண்மீன்களுக்கு இடையே உனது இறந்த தாயைத் தேடினாயோ?"என்று கேட்க, பல மைல்களுக்கு அப்பால் நடந்த விஷயம் பாபாவுக்கு தெரிந்ததை அறிந்து அதிர்ந்துபோய் அன்று முதல் அவருடைய சீடராகியிருக்கிறார்). அவர் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம், அவர் சமயக் கல்வி மாணவர்களுக்கு 'குட் பிரைடே எக்ஸ்பிரிமெண்ட்' என்ற பெயரில் 'சைலசெய்பின்' என்ற காளான் வகை போதை வஸ்துவை வழங்கி இறைவனை அடைய வழி சொன்னதே!

அப்படியானால் இறைவனை அடைய உண்மையிலேயே வழி இருக்கிறதா? ஆம்! நிச்சயம் இருக்கிறது. அவற்றிற்கு நாம் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் தியானமும்,யோகமுமே. இதற்குக் காலம் அதிகம் ஆகலாம் ('சித்தி' அடைய அதாவது உயர்நிலையை எட்ட 12 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள் சித்தர்கள்). தாமதமானாலும் பண்படுத்தப்பட்ட ஒரு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வது போல் 'யோகம்' என்ற உரத்தைப் போட்டு உடலையும், 'தியானம்' என்ற நீரைப் பாய்ச்சி மனதையும் முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டால் நிச்சயம் நம்மால் 'ஞானம்' எனும் பழத்தை அறுவடை செய்யமுடயும் என்பதை ஒரு நடுநிலையாளனாக நான் உறுதியுடன் நம்புகிறேன். யோகிகள் 'நாடி சுத்தி', 'வாலை பூஜை'யின் மூலம் யோகம் செய்ய உடலையும் மனதையும் தயார்படுத்தத் தொடங்குகிறார்கள்.


24. வெள்ளி நாண் -குண்டலினி- தனஞ்ஜெயம்

"தனி மனிதர்களின் சிந்தனை அவர்கள் மூளை + மத்திய நரம்பு மண்டலத்தின் (தண்டுவடம்) அமைப்பு மற்றும் அதில் உள்ள திரவங்களின் அளவைப் பொருத்து முற்றிலும் மாறுபடுகிறது" என்று சொன்னால் எனது கருத்தை அறிவியல் உலகம் நிச்சயம் ஏற்கும்.

வாலை (எ) உச்சி நீரைப் (cerebrospinal fluid) பற்றி எனக்குத் தெரிந்த சில மருத்துவப் பேராசிரியர்களிடம் நான் பேசியதில் எனக்குக் கிடைத்த பதில் "இது  மூளையில் உள்ள உச்சிக் குழிகளில் தோன்றி, மூளையின் உட்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் பரவி அது மூளையை ஒரு 'குஷன்'போல் பாதுகாக்கிறது" என்ற பதிலோடு நின்றுவிட்டது.

எனக்குக் கிடைத்த பதில் போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் மேற்கொண்டு இணையத்தில் தேடிய பொழுது ஹார்வர்டு மருத்துவ ஆராய்ச்சியாளர், நரம்பியல் நிபுணர்,பேராசிரியர் மருத்துவர், மற்றும் ரேக்கி போன்ற மாற்று மருத்துவ முறைகளையும் கற்றுத்தேர்ந்தவரான டாக்டர்.மாரோ சாப்படெராவின் காணொளியைப் கண்டபோது நான் தேடிய பல விஷயங்களுக்கு விடை கிடைத்தது. அவர் மூளையைப் பற்றியும், மூளை நீரைப் பற்றியும், சித்தர்கள் சொன்ன 'குண்டலினி எழுச்சி'பற்றியும் தெளிவாக அறிவியல்பூர்வமாக விளக்குகிறார்.

அதாவது கரு உருவாகும் போது தாயின் பனிக் குடத்திலுள்ள நீரானது  (amniotic fluid -இது உயிர்கள் உருவாகக் காரணமாக அமைந்த கடல் நீரிலிருந்து வெறும் ஒரு மூலக்கூறு தான் மாறுபட்டுள்ளது என்கிறார்!) கரு உருவாகத் தொடங்கும்போது மெல்லிய கம்பிபோல் வளரும் முதுகுத்தண்டால் மூடப்பட்டு மனித உடலில் வாலை நீராக (CSF-Cerebrospinal Fluid) மாறுகிறது என்கிறார். இதுவே 'நான்' என்ற உணர்வை ஒரு தனி மனிதனுக்குத் தருகிறது.

மூன்றாவது உச்சிக்குழியில் பிட்டியூட்டரி மற்றும் பயனியல் (ஆனந்த) சுரப்பி வெளியிடும் ஹார்மோன்களுடன் இந்நீர் (வாலை) சேர்ந்து நான்காவது உச்சிக் குழிக்கு வருகிறது. இங்கிருந்து மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது ஹார்மோன்களுடன் செறிவூட்டப்பட்ட உச்சிநீரின் ஒரு பகுதி மூளைக்கே மேல்நோக்கிய திருப்பி விடப்படுகிறது. மற்றொரு பகுதி முதுகுத்தண்டை சென்றடைகிறது. சராசரியாக ஒவ்வொரு மனிதனுக்கும் தினசரி குறைந்தபட்சம் அரை லிட்டர் அளவு இந்நீர் சுரக்கும் என்கிறார். மிகுதியான நீரானது நமது உடலால் உறிஞ்சப்பட்டு சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்பட்டுவிடும் என்கிறார். 

குண்டலினி' சக்தி: அவர் இதை விட முக்கியமாகச் சொல்லும் விஷயம் எனக்கு சித்தர்கள் சொன்ன விஷயத்தை முழுவதுமாக ஒத்திருக்கிறது. அதாவது முதுகுத் தண்டின் அடிப்பகுதியிலுள்ள முக்கோண எலும்பிற்கும் (sacrum-'புனித எலும்பு' என்பார்கள்) குதத்திற்கும் (anus) இடைப்பட்ட மிக நுண்ணிய ஒரு பகுதியில் தான் 'உயிர்' இருக்கிறது என்கிறார். இதையே சித்தர்கள் 'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க்காற்று என்பார்கள். 

அதாவது தாயின் தொப்புள் கொடி அறுபடும் போது அந்த உயிர் காற்றானது குழந்தையின் முதுகுத் தண்டின் அடியில் சென்று உட்கார்ந்து கொண்டு விடுகிறது என்று சித்தர்கள் சொல்கிறார்கள். இந்தக் காற்றை 'வாசி' போன்ற யோகங்களின் மூலம் படிப்படியாக மேலெழுப்பி; அதேவேளையில் பிட்டியூட்டரி மற்றும் பயனியல்(ஆனந்த) சுரப்பியை தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளின் மூலம் செரிவூட்டி மூன்றாவது உச்சிக்குழியில் (இதையே 'ஆக்ஞசக்கரம்' என்கிறார்கள்.'நெற்றிக்கண்' என்று குறிப்பிடப்படுவதும் இந்த இடமே!) கொண்டுவந்து நிறுத்தினால் 'தனஞ்ஜெயம்' என்ற அந்தக் காற்று 'குண்டலினி' சக்தியாக மாறும் என்கிறார்கள். இதையேதான்  மருத்துவர் டாக்டர்.மாரோ சாப்படெராவும் வழிமொழிகிறார்.

ஆனால் சிலரோ 'குண்டலினி சக்தி' என்பது விந்தை தலையில் ஏற்றி வைப்பது என்று தவறாகச் சொல்கிறார்கள். அப்படியானால் பெண்களால் எப்படி ஞானம் அடைய முடியும்? இதை இப்படி வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம்! பொதுவாக யோகிகள் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கும் போது 'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க் காற்றை முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றத் தேவையான உந்து சக்தியை விந்து தரலாம்.வாலையில்(CSF-Cerebrospinal fluid) நீந்தி முதுகுத்தண்டைக் கடந்து மூன்றாவது உச்சிக் குழியை வந்தடைகிறது.

உங்கள் நெற்றிப் பொட்டிலிருந்து நேராக ஒரு கம்பியை உள்ளே செலுத்தி விட்டு, உங்கள் காதுகளில் வழியாக மற்றொரு கம்பியைச் செலுத்தினால், இந்த இரண்டு கம்பிகளும் சந்திக்கும் இடம் தான் மூன்றாவது உச்சிக்குழி அமைந்துள்ள 'மூன்றாவது கண்' பகுதி. அதுவே 'கண்ணாடி மாளிகை', 'கடவுள் இருக்கும் இடம்', 'புருவமத்தி', 'ஆக்ஞ சக்கரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

கவனத்திற்கு: 



Monday, March 15, 2021

23. சக்தி இல்லையேல் சிவம் இல்லை

 கவனிக்க: நம்மூரைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் 'அமரர்' B.ராமமூர்த்தி அவர்கள் குழந்தை காயத்ரியைப் பற்றிக் குறிப்பிடும்போது 'மூளையில் உள்ள கெமிக்கல்கள்' அதாவது 'திரவங்கள்' தான் அவளின் அதீத அறிவிற்குக் காரணம் என்று  குறிப்பிட்டார் என்பதை முன்பே சொல்லியிருந்தேன்.

ஆனால் டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் திடப் பொருளான மூளையின் அமைப்பு வித்தியாசமாக அமைவதைப் பற்றி மட்டுமே தான் சொல்லுகிறார். திரவத்தைப் பற்றி எங்கும் சொல்லவில்லை. 

எனது ஆய்வை நான் தொடர்ந்து மேற்கொண்டதில் கிடைத்த விடை 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்பதே! 

அப்படி மூளையில் என்ன தான் நடக்கிறது?

உச்சிக் குழி 1 மற்றும் 2ல் (ventricle 1 & 2) சுரக்கும் வாலை (எ) உச்சி நீர் (பிளாஸ்மா வகையைச் சேர்ந்த திரவம் என்பதால் இதற்கு நிறம் கிடையாது), மூன்றாவது உச்சிக்குழியை வந்தடைந்து பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பயனியல் (ஆனந்த்) சுரப்பி வெளியிடும் ஹார்மோன்களுடன் சேர்ந்து கலக்கிறது.மூன்றாவது உச்சிக் குழி மற்றும் மேற்குறிப்பிட்ட சுரப்பிகள் சேர்ந்த அமைப்பைத் தான்  மூன்றாவது கண், கண்ணாடி மாளிகை, கடவுள் வாழும் இடம் என்கிறோம்.பண்டைய எகிப்தியர்கள் 'வல்லூரின் கண்' (Horus eye) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.இறுதியாக நான்காவது உச்சிக்குழியை வந்தடைந்தபின்பு, ஒரு பகுதி முதுகுத்தண்டிற்கும் மற்றோருபகுதி மீண்டும் மூளையின் மேல்பகுதிக்கும் திருப்பி விடப்படுகிறது.

 ('உச்சி நீர் '    மேலேயுள்ள  படத்தில் நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ளது.இதை இப்படியும் புரிந்துகொள்ளலாம்: பூமியின் மேற்பரப்பிலும் உள்ளேயும் நீர் உள்ளது (இங்கே நீர்: வாலை (எ) உச்சி நீர்[cerebrospinal fluid], நிலம்:மூளை )

பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பயனியல் (ஆனந்த்)சுரப்பி


'வல்லூரின் கண்' (Horus eye)


எனது கருத்து:

ஒரு ஜீவநதியானது தலையின் உச்சி குழியில் நீர் (வாலை) சுரப்பது போல் மலையில் உண்டாகி, அருவியாகி, வரும் வழியில் காட்டாற்றுடனும் வேறு கிளை நதிகளுடனும் (பிட்யூட்டரி மற்றும் பயனியல் சுரப்பிகள் வெளியிடும் ஹார்மோன்களுடன் சேர்வது போல்) சங்கமிப்பதால் அதன் பண்பு மாறுகிறது. அப்படி நம் மூளையின் மூன்றாவது உச்சிக்குழி(3rd ventricle) போல் பூமியில் நீர் சங்கமிக்கும் இடங்களெல்லாம் புனித இடங்களாகக் கருதப்படுகின்றன.

       திரிவேணி சங்கமம்
                                         
அப்படியானால் அனைத்து நதிகளுமே தண்ணீர்தான் என்னும்போது அவற்றின் பண்பு தனித்துவமாக அமைவதற்குக் காரணம் பூமியாகிய மண்தான். வெவ்வேறு வழித்தடங்களில் வரும் நீர் வண்டல் மண்ணுடன் கலப்பதாலும், மலை உச்சியில் இருந்து கூழாங்கற்களால் வடிகட்டப்பட்டு வரும் தெளிந்த நீர் மூலிகை போன்ற செடிகளில் பட்டு வருவதாலும், ஒவ்வொரு நீரின் பண்பும் வேறுபடும். ஆனால் அவை சங்கமித்த பின் அவற்றின் மொத்த பண்பும் மாறிவிடும். எனவே நதிதான் 'சக்தி' என்றால் 'சிவம்' என்பது நமது உடல்தான். 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை'என்று சொல்லப்பட்டதும் இதுவே என்று உணர்கிறேன். எனவே மூளையில் உள்ள திரவமான நீரே 'சக்தி' (dynamic energy) மற்றும் திடப் பொருளான மூளை தான் சிவம் (static energy).

இப்பொழுது புரிகிறதா நதிகள் தோன்றுமிடம், பாயுமிடம், சங்கமிக்கும் இடங்களெல்லாம் ஏன் புனிதமாகக் கருதப்படுகிறதென்று? இந்துக்களுக்கு காசி,திரிவேணி சங்கமம், தலைக் காவேரி, ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கப்பட்டினம்,பவானி போன்ற இடங்கள். கிறிஸ்தவர்களுக்கு இயேசு ஜோர்டான் நதியில் ஞான ஸ்நானம் எடுத்த இடம் (இஸ்ரேல் புனிதப் பயணம் செல்பவர்கள் அங்கே இன்றும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்) மற்றும் நாசரேத்திலுள்ள மேரி கிணறு. இஸ்லாமியருக்கு மெக்காவிலுள்ள ஜம்ஜம் கிணறும் புனித இடங்களாகக் கருதப்படுகின்றன.


ஜோர்டான் நதியில் ஞான ஸ்நானம்


ஜம்ஜம் கிணறு
                                                  

                                       
                                                                  தலைக் காவேரி




22. யார் இந்த வாலைக் குமாரி (எ) பாலா?

 'வாலைக் குமரியடி கண்ணம்மா' என்று பாரதியாரும் பாட்டெழுதியிருக்கிறாரே? பாரதி பாண்டிச்சேரியில் இருந்தபோது 'குள்ளச் சாமியார்' என்ற யோகியின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரின் மூலம் வாசியோகமும் கற்றிருக்கிறார் என்பதை எனது ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டேன். அப்படியானால் தனது காலத்திற்கு அப்பாற்பட்டு சீரிய சிந்தனையுடன் பெண்கள் முன்னேற்றம், சுதந்திர வேட்கை  போன்றவற்றுடன் இயற்கையை விரும்பியது, நதிகளை இணைத்து நாடு, கண்டம் என்ற எல்லையைத் தாண்டி அனைவரும் ஒன்று என்று சிந்தித்தது,மேலும் 'காக்கை குருவி எங்கள் ஜாதி' போன்ற கருத்துக்களை முன்வைத்ததன் மூலம் பாரதியாரும் ஒரு சித்தரே என்பதை என்னால் உணர முடிகிறது. அவர் சில போதை வஸ்துக்களை பயன்படுத்தினார் என்றும் சொல்லப்படுவதுண்டு. அது எதனால் என்பதை பின்னால் பார்க்கலாம்.

வாலை, பாலா, பாலதிரிபுரசுந்தரி, பராசக்தி, அபிராமி, துர்கை, நாகாத்தம்மன்  கன்னியாகுமரி, பாலமீனாட்சி, அம்பிகை, மனோன்மணி என்று நமது இந்து மதத்திலுள்ள 'அம்பாள்' என்று சொல்லப்படும் அனைத்துப் பெண் தெய்வங்களும் வாலையையே குறிப்பிடுகின்றன. வாலைத் தாய் பத்து வயது பெண்ணாக (குழந்தைக்கும் குமரிக்கும்‌ இடைப்பட்ட வயதில்) பாவடை சட்டை அணிந்து காட்சியளிக்கிறாள்.

                                                                 பாலதிரிபுரசுந்தரி

இந்தப் படத்தைப் பல இடங்களிலும் சிலர் வீட்டுப் பூஜை அறையிலும் நீங்கள் பார்த்திருக்கலாம்."சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்" என்ற திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடலும் பாலாவுக்காகப் பாடப்பட்டதே!

பாலா நம் அனைவருக்குள்ளும் இருக்கிறாள். எங்கே?

கீழ்கண்ட காகபுஜண்டர் என்ற சித்தர் எழுதிய பாடலில் இதற்கான விடை உள்ளது. பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

"சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்

சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்

தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்

தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதி

சொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசி

சோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்

நில்லுமே மூலதலம் வாசிகொண்டு

நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்".

பாடலின் பொருள் உங்களுக்கே இந்தப் பதிவை முழுமையாகப் படித்து முடித்தால் விளங்கிவிடும். நான் மேற்கொண்டு எனது ஆய்வைத் தொடர்ந்ததில் நமது சித்தர்கள் இன்றைய மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் முன்னோடி என்பதைத்  தெரிந்துகொண்டேன். 

இங்கே 'உச்ச நீர்' என்ற வார்த்தையை மட்டும் கவனிக்கவும். அதாவது நமது தலையில் 4 உச்சிக்குழிகள் (ventricles) உள்ளன. உச்சந்தலையில் இருக்கும் ஒன்று மற்றும் இரண்டாம் உச்சிக் குழிகளின் (Left & Right lateral ventricles OR ventricles 1 & 2) ஊற்று கண்களாய் விளங்கும்‌ க்ளோரிட் பிளக்ஸஸ்(choroid plexus) மூலம் தான் 'உச்சிநீர்' சுரக்கிறது (CSF-Cerebrospinal fluid). இந்த நீர்தான் சித்தர்கள் குறிப்பிடும் 'வாலை'.



இந்த இரண்டு உச்சிக் குழிகளும் தான் (Left & Right lateral ventricles OR ventricles 1 & 2 மீனாட்சி, டெம்பிள் கிராண்டின் அம்மையார் போன்ற சவான்ட்களுக்கு இயல்பிலேயே பெரிதாக அமைந்ததைப் பார்த்தோம். இந்தப் பிரச்சனைக்குப் பெயர்தான் மீனாட்சியின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கால்போகபாலி(colpocephaly). இதை இங்கே மீண்டும் சற்று விரிவாகப் பார்க்கலாம்:

இடப்புறம்: சாதாரண மனித மூளை. 
வலப்புறம்: அம்மையார்  டெம்பிள் கிராண்டினின் மூளை   
             
டெம்பிள் கிராண்டினின் மூளையை விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அதில் அவரின்  இடது மூளையின் பின்பகுதி, குறிப்பாக இடது உச்சிக்குழி (left ventricle) அளவில் பெரியதாக உள்ளது. இதனால் மொழி வளர்ச்சிக்கு தேவையான இடது மூளையில் சேதம் ஏற்பட்டு  (அல்லது வளர்ச்சி குன்றி) அவரது பேசும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் இங்கே நான் கவனித்த மற்றொன்று, பாதிப்படைந்த பகுதிகளில் மூளையின் நீர்/திரவம் (Cerebrospinal Fluid) சராசரி மூளையில் இருப்பதை விட அதிக அளவில் தேங்கி உள்ளது (நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது ). மீனாட்சியின் மருத்துவ அறிக்கையும் கிட்டத்தட்ட இதே பிரச்சனைதான் அவளுக்கும் உள்ளதாகக் காட்டுகிறது.


21. எனக்கு வழிகாட்டிய பாட்டு சித்தரும் இசக்கி சித்தரும்

 ஆட்டிசம் பாதிப்பு,ஹைபர் லெக்ஸியா மற்றும் சவாட்சிண்ட்ரோம் போன்ற பாதிப்புகளையுடைய நான் அறிந்த பெரும்பாலான குழந்தைகள் ஆன்மீகம் மற்றும் யோகா சம்பந்தமான விஷயங்களில் பிறர் சொல்லிக் கொடுக்காமலேயே ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள்.

இங்கே நான் குறிப்பிட விரும்பும் மிக முக்கியமானவர் மீனாட்சியின் யோகா ஆசிரியை: மீனாட்சிக்கு யோகா பலனளிக்கும் என்று சில பெற்றோர் கூறிய காரணத்தால், அவளுக்கு யோகா கற்பிக்க அந்த அம்மையாரை சந்திக்க சென்றோம். பார்த்த நொடியிலிருந்து மீனாட்சியும் அந்த யோகா ஆசிரியையும் பல ஆண்டுகள் பழகியவர்கள் போல மிக அன்னியோன்யமாக ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கொஞ்சத் தொடங்கிவிட்டார்கள். அந்த அம்மையார் என்னிடம் சொன்னார் "உங்கள் மகள் என்னிடம் யோகா கற்க வரவில்லை.அதை நான்  அவளுக்கு கற்பித்து தான் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இங்கே வரும் பெரும்பாலான குழந்தைகள் எனக்கு யோகாவைக் கற்பித்திருக்கிறார்களே  தவிர நான் அவர்களுக்கு எதுவும் கற்பிக்கவில்லை" என்றார். மேலும் "உங்கள் மகள் பிறந்ததன் நோக்கமே நீங்கள் சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காகத் தான்" என்றுஅடிக்கடி கூறுவார். அதாவது ஆன்மீக நாட்டம் இல்லாத எனக்கு உண்மையான ஆன்மீகத்தை புரிய வைக்கவே மீனாட்சி பிறந்திருப்பதாக சொல்வார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான் என்று இன்று நான் உணர்கிறேன்.

இவருடைய கனவிலும் மீனாட்சி வருவதுண்டு. தனக்கு சாக்லேட், ஸ்வீட் என்று ஏதாவது வேண்டுமென்றால் அதை இவரது கனவில் தெரிவிக்கிறாள். அந்த அம்மையார் மறுநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து 'நேற்றிரவு உங்கள் மகளிடமிருந்து எனக்கு ஒரு சிறப்பு அழைப்பு வந்திருக்கிறது. தனக்குப் பிடித்த சில பொருட்களை வாங்கிவரும்படி சொல்லியிருக்கிறாள்' என்பார்.நாங்கள் மீனாட்சியிடம் "இன்று யார் உன்னைச் சந்திக்க வரப் போகிறார்கள்?" என்று கேட்டால், அவரது பெயரை மெதுவாகச் சொல்லிவிட்டு சிரித்துக் கொள்வாள். 

அதேபோல் அந்த அம்மையார் ஒரு முறை அவரது கணவருடன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த பொழுது அவரைக் கண்ட மகிழ்ச்சியில் தேன் குடித்த நரி போல் மீனாட்சி ஓடி வந்து வந்து அவரது வலது கால் மூட்டைத் தட்டிக் கொண்டே இருந்தாள். அந்த அம்மையாருக்கு அந்த இடத்தில் வலி இருப்பதை உணர்ந்த நாங்கள் மீனாட்சி தான் அவரது காலில் வலி ஏற்படும்படி ஏதோ செய்துவிட்டாள் என்று புரிந்துகொண்டு அவளை அதட்டினோம். எங்களைத் தடுத்த அந்த அம்மையார் "வேறொன்றுமில்லை! எனக்கு பத்து நாள் முன்பு குளிக்கும் போது வழுக்கிக் கீழே விழுந்துவிட்டேன்.முட்டியில் அடிபட்டுவிட்டது. அதைத்தான் இப்பொழுது குணமாகிவிட்டதா என்று உங்கள் மகள் கேட்கிறாள்"என்றார்.அவர்களுக்குள் இருக்கும் உள்ளார்ந்த‌ அன்பைப் புரிந்து கொள்வது எங்களுக்கு இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. புரியாவிட்டால் என்ன? அவர்களுக்கு இடையூறாக இல்லாமல் ஒதுங்கி நின்று ரசிக்கும் அளவிற்காவது தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதே மகிழ்ச்சி தான்.

பொதுவாக ஆன்மீகம் என்பது ஒருவர் சார்ந்த மதத்திலோ அல்லது குடும்பத்திலோ குறிப்பிட்ட கடவுளையோ அல்லது சில துறவிகளையோ பின்பற்றுகிறோம். அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்கள்ப் பற்றி பெரியவர்களின் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறார்களே தவிர அவர்களாகவே எதையும் தெரிந்து கொள்வதில்லை.  

ஆனால் அப்படி நமக்கே தெரியாத துறவிகளையும் ஞானிகளையும் இக்குழந்தைகள் தானாகவே  அறிந்து வைத்துள்ளார்கள் என்பதே நிதர்சன உண்மை.இதை உணர்ந்த பெற்றோர்கள் எத்தனைபேர் ?

எனது கல்லூரி நண்பன் 'ரகு':

 'யோகம்' 'தியானம்' என்பது போன்ற விஷயங்கள் ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனது பெரும்பாலான கேள்விகளுக்கு யோகா மற்றும் தியானம் போன்ற விஷயங்களில் தான் பதில் கிடைத்தது. இதை நான் அறிய முக்கியப் பங்காற்றியது எனது கல்லூரித் தோழன் 'ரகு'. 

பாடுவது, இயற்கையைப் புகைப்படம் எடுப்பது போன்ற எண்ணற்ற திறமைகள் இருந்தாலும் ரகுவின் அதீதமான பேச்சு மற்றும் குறும்புத்தனத்தால் கல்லூரியிலேயே எனக்கும் அவனுக்கும் பேச்சு வெகு காலம் நின்று போயிருந்தது. ஒரு வழியாகப் பல ஆண்டுகள் கழித்து அவனே இறங்கி வந்து எனது அம்மாவிடமும் என்னிடமும் எங்களின் கல்லூரித் தோழியின் திருமணத்தின்போது பேச, எங்களது நட்பு புதுப்பிக்கப்பட்டது.மீனாட்சியைப் பற்றி நான் அவனிடம் சொல்ல, உடனே அவன் தனது குருமார்களான பாட்டு சித்தர் மற்றும் இசக்கி சித்தரின் 'வாசியோக' வகுப்புகளுக்கு என்னை வரும்படி கூறியிருந்தான். "உனக்கு அவர்கள் குரு என்றால் என்னை எதற்கு அவர்களைப் பின்பற்ற சொல்கிறாய்?" என்று கேட்டுவிட்டு வேண்டா வெறுப்பாகத்தான் ரேவதியையும், மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு சித்தர்கள் இருவரையும் சந்திக்கச் சென்றேன். தொடர்ந்து அவர்களுடைய வகுப்புகளில் என்னதான் சொல்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நான் மட்டும் சென்று அமர்ந்தேன்.அங்கே வருபவர்களை பற்றி பாட்டு சித்தர் சொல்லும்போது "விட்டகுறை தொட்ட குறை"பற்றித் தான் முதலில் குறிப்பிட்டார். அதாவது முற்பிறவியில் ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் தான் இங்கே வாசியோகம் கற்க வருகிறார்கள் என்றே தனது பேச்சைத் தொடங்கினார்.

இதில்  பெரியவர் 'பாட்டு சித்தர்' நாராயணசாமி அவர்கள் சீர்காழியைச் சேர்ந்தவர்.இளையவர் இசக்கி சித்தர் கோவில்பட்டியைச்  சேர்ந்த குங்ஃபூ ஆசிரியர். இருவரும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் தான். ஆனால் இருவரும் ஆன்மிக தேடல் கொண்டவர்கள். இதில் பாட்டு சித்தரின் கனவில் தோன்றிய ஐயப்பன் அவருக்கு வாசி யோகத்தை கற்பித்து அதை கோயில்பட்டியிலுள்ள எசக்கிக்கும் கற்பிக்கும்படி கட்டளையிட இவர்கள் இருவருக்குள்ளும் குரு சிஷ்யன் உறவு மலர்ந்திருக்கிறது.

இருவரும் சேர்ந்து அனைத்து மக்களுக்கும் சித்த ரகசியமான இக்கலை சென்று சேரவேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் இன்று உலகெங்கும் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் 'வரவேண்டும் என்று இருப்பவர்கள் தங்களிடம் தானாகவே வந்து சேர்வார்கள் என்பதே'. இந்தக் கூற்றின்படி பார்த்தால் 'வேட்டைக்காரனாக இருந்த வால்மீகி எப்படி ராமாயணம் எழுதினார், கலிங்கப் போரில் வென்ற அசோகர் ஏன் அமைதி வழிக்குத் திரும்பினார், அரசர் சித்தார்த்தன் ஏன் கெளதம புத்தரானார் மற்றும் ஆன்மீகத்துடன் சற்றும் தொடர்பில்லாமல் இருந்த குறும்புக்கார இளைஞன் ரகு ஏன் ஒரு நாள் ஆன்மீகவாதியானான்' போன்ற விஷயங்கள் புலப்பட்டது.

                                                       'பாட்டு சித்தர்' நாராயணசாமி 


 இசக்கி சித்தர்

முதல் வகுப்பில் 'மெய்ப்பொருள் தீட்சை' (பிரம்மோபதேசம்) வழங்கிய பாட்டு சித்தர், அடுத்தடுத்த வகுப்புகளில் 'வாசியோகம்' கற்பித்தார். 'வாசி' என்பதை திருப்பிப் போட்டால் 'சிவா' என்று வரும். சிவனே சொல்லிக்கொடுத்த யோகம் என்று சொல்வார்கள். இதிலிருந்துதான் 'க்ரியா' முதலிய யோக முறைகள் தோன்றியதாகச் சொல்கிறார்கள்‌. பழகும் யோக முறைகள் வெவ்வேறாக இருப்பினும் அனைத்தின் நோக்கமும் இறைவனை அடைவது தான். நான் தெரிந்து கொண்டவரையில் தொழில்முறை யோகா மாஸ்டர்கள் 'பிராணாயாமம்' போன்ற பயிற்சிகளைக் கற்பிக்கிறார்கள். ஆனால் சித்தர்கள் மூலம் தெரிந்து கொள்வது முற்றிலும் மாறுபட்டது. முன்பு இதைத் தான் குருகுலத்தில் தங்கி சீடர்கள் குருவிற்குப் பல காலம் பணிவிடை செய்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

எதற்காக பணிவிடை செய்ய வேண்டும்? முதலில் 'தான்' என்ற அகந்தையை விட்டால் தான் தன்னைப் புரிந்து கொள்ளமுடியும், பிறரைப் புரிந்து கொள்ள முடியும், இறுதியில் இப்பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ள முடியும்'.அதற்கே இப்பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள். கற்றுக்கொண்டதன் இறுதி வடிவம் தான் 'ஞானமடைவது'. யோகக் கலையைப் பயிற்சி செய்பவனே 'யோகி'. யோகத்தின் மூலம் பலனை முழுவதுமாக அடைந்தவனே 'ஞானி', 'சித்தன்'. யோகத்திற்கும், தியானத்திற்கும் மந்திரம், எந்திரம், தந்திரம் என்ற மூன்றுமே அதி முக்கியம்.

1).மந்திரம்: உச்சரிக்க வேண்டிய மந்திரம்!

மந்திரத்தை சொல்லும் விதம் மிக மிக முக்கியம்.சரியான உச்சரிப்புடன் அடிவயிற்றிலிருந்து,நெஞ்சிலிருந்து,நாவிலிலிருந்துயென  சொல்வது  உடலில் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தவல்லது.

2). எந்திரம்: உங்களுடன் உடல் தான் அது.

உடலை தயார்படுத்திக் கொள்ளாமல் நாம் மனதை தயார்படுத்தக் கொள்ள முடியாது. சரியான உணவுக் கட்டுப்பாடுகளுடன் வெறும் வயிறு, செரிமானம் ஆனபிறகென்று சரியான நேரத்தில் சரியான‌ விஷயத்தை குருவின் வழிகாட்டுதலோடு செய்யவேண்டும்.

3).தந்திரம்: செய்யும் முறை!

நீங்கள்‌ பின்பற்றும் ஆசனம் மற்றும் முத்திரைகளுக்கு நிறையப் பலனுண்டு.

யோகப் பயிற்சியின் மூலம் எவ்வளவுக்கெவ்வளவு நாம் வெளிவிடும் கரியமில வாயுவின் அளவைக் (கார்பன் டை ஆக்சைடு) குறைத்துக்கொண்டே வருகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமது ஆயுள் பெருகும் என்கிறார்கள். இதன் மூலம் மரணத்தை வெல்லலாம் என்பதைக் குறிக்கவே வாசியோகத்தை 'சாகாக் கலை' என்று  குறிப்பிடுகிறார்கள்.

'நாம் முன்பு பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வதை இங்கே பொருத்திப் பார்த்தால் மரணம் வரும் நேரத்தில் இதுபோன்ற உயிர்களும் உடலைவிட்டு நிச்சயம் நீங்கும்.ஆனால் அந்த உயிர் அழியாது  'ஞானத்தோடு' (enlightened soul) இருக்கும்.மேலும் தேவைப்படும்போது நோக்கம் புரிந்தே பிறப்பெடுக்கும் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். நோக்கம் தெரியாது பிறந்தவர்கள் தான் யார், தனக்கு எது வரும்,எது வராது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு போய்ச் சேர்கிறார்கள்' என்பது அடியேனின் கருத்து.

இதில் பெரியவர் பாட்டு சித்தர் நிறைய ஆன்மிக நூல்களை எழுதி வருகிறார். அவை எல்லாமே  அவருக்கு காகபுஜண்டர் போன்ற சித்தர்கள் கனவில் சொல்லும் விஷயங்கள் தானாம்! 'சாகாக் கலை'யைப் பற்றி பாட்டு சித்தர் குறிப்பிடுகையில், "சாதாரணமாகப் பிறந்து, வளர்ந்து,கல்வி கற்ற ஒருவன் இறந்து போனால், அவன் அடுத்த பிறவியில் மீண்டும் பிறந்து, முதலில் இருந்து தான் அனைத்தையும் கற்றாக வேண்டும்.ஆனால் சித்தர் கல்வியைக் கற்று உடலிலுள்ள 35000 நாடி நரம்புகளை சுத்தப்படுத்திய ஒரு யோகி இறக்க நேர்ந்தால், மறுபிறவியில் அவருடைய வாழ்க்கை அதே 35000 நாடி நரம்புகளிலிருந்து தான் தொடங்குகிறது. இப்பிறவியில் அவருடைய வாழ்க்கை முற்பிறவியில் அவர் விட்ட இடத்திலிருந்தே தொடங்கும் "என்கிறார்.இன்றைய நவீன மருத்துவர்கள் குறிப்பிடும் 'செல்லுலர் மெமரி'  (cellular memory) இதுவே என்று எனக்குத் தோன்றுகிறது. தாய், தந்தை மற்றும் இருவீட்டுக் குடும்பத்தாரின் மூலம் கிடைக்கும் 'ஜெனிடிக் மெமரியைத் (மரபு வழி அறிவு) தாண்டி சில தனித்துவமான முற்றிலும் வேறுபட்ட குறிப்பிடத் தகுந்த குணாதிசயங்களை உள்ளடக்கியதாகவே 'செல்லுலர் மெமரி' அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. அதாவது மூளையைத் தாண்டி இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், இரத்தம், நுரையீரல்யென பிற உறுப்புகளிலும் நினைவுகளை செல்களில் சேர்த்து வைக்க முடியும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு திரைப்படத்தில் கதாநாயகி இறந்துவிட்டால் அவளுடைய இருதயம் வேறு பெண்ணுக்கு பொருத்தப்படும் போது அந்தப் பெண்ணுக்கு இயல்பாகவே கதாநாயகன் மேல் காதல் வருவதாக காட்டுவார்களே?அதே‌ தான்!

ஒரு யோகியின் சுயசரிதம்: இதே வேளையில், நான் படிக்கத் தொடங்கிய  பரமஹம்ச யோகானந்தர் என்ற பிரபல யோகி எழுதிய 'ஒரு யோகியின் சுயசரிதம்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்படும் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த 'மகா அவதார் பாபாஜி' (இவரின் இயற்பெயர் நாகராஜன்.சொந்த ஊர் பரங்கிப்பேட்டை,போகரின் சீடர் என்று சொல்லப்படுகிறார்) என்ற யோகி இமயமலையின் இந்திய-திபெத் எல்லைப் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த புத்தகம் வெளிவந்த நேரம்வரை பலருக்கு 'ஆன்ம சொரூபமாக' (அதாவது முழு மனித உருவமாக ஒருசிலரின் கண்களுக்கு மட்டும் தென் பட்டிருக்கிறார்.மன்ரோவின் கண்களுக்கு மட்டும் ராகவேந்திரர் புலப்பட்டது போல்!) காட்சி அளித்திருக்கிறார். அவர் 'க்ரியா' யோகம் பழகியதாகச் சொல்கிறார்கள். அதையே தனது சீடர்களுக்கும் கற்பித்திருக்கிறார்.

இந்த புத்தகத்தை எழுதிய சுவாமி யோகானந்தர் முதல் பக்கத்திலேயே தனது சிறுவயது பற்றி குறிப்பிடும்போது தனக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் அதிகம் இருந்தது பற்றியும் முன்பின் அறியாத பல மொழிகள் அவருடைய காதுகளில் மட்டும் கேட்கும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லாம் தெரிந்த ஒரு யோகியின் மனது, சிறு குழந்தையின் உடல் இரண்டுக்கும் இடையே நடந்த போராட்டமாக தனது குழந்தைப் பருவம் அமைந்ததாகச் சொல்கிறார்.அதாவது முற்பிறவியில்  ஒரு யோகியாகப் பிறந்த பரமஹம்ச யோகானந்தர் அதன் தொடர்ச்சியாக இப்பிறவியில் குழந்தைப்பருவம் தொட்டு ஆன்மிகத்தின்பால் இழுக்கப் பட்டுள்ளார். இது பிறவியிலேயே பேரறிவுடன் பிறப்பதுபோல் (congenital savant). இதில் குறிப்பிடப்படும் பெரும்பாலான யோகிகள் சாதாரண மனிதர்களாக இருந்து திடீரென உள்மனதின் உந்துதலால் யோகத்திலும் தியானத்திலும் நாட்டம்கொண்டு ஆன்மிகத்தின்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் 'விபத்தால் ஞானியானவர்'களைப் போல் (accidental savants). இன்னும் இந்த புத்தகத்தில்  கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம், 'க்ரியா' யோகமானது ஒருவரிலிருந்து அடுத்தவருக்கு ' டெலிபதி மூலம்'  உள்மனதின் வழியாகவே சூட்சுமமாக (ஆன்ம சொரூபத்தில் ) கற்பிக்கப்பட்டிருக்கிறது. குருவும் சிஷ்யனும் வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்தவர்களாகக்கூட இருந்திருக்கிறார்கள் .

ஆப்பிள் நிறுவன அதிபர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி, நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (இந்த புத்தகம் உந்தியதன் காரணமாகவே 'பாபா' என்ற திரைப்படத்தை  எடுத்திருக்கிறார்) மற்றும் பிரபல பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஜார்ஜ் ஹேரிசன் போன்றவர்களுக்கும் இது மிகவும் பிடித்தமான புத்தகமாக இருந்து வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை  ஏற்படுத்தியிருக்கிறது.

அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது: யோகாவைத் தவிர தியானத்தையும் சேர்த்துப் பழகும்படி பாட்டு சித்தர் கற்பிக்கிறார். மேலும் இவ்வுலகம் பஞ்சபூதங்களைக் கொண்டிருப்பது போல் நமது உடலிலும் பஞ்சபூதங்கள் ('ஸ்தூல' பஞ்சாட்சரம்) உள்ளதைச் சொன்னார். இந்தப் பஞ்சபூதங்களில் நீரும் நிலமும் நமது உடலில் எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் இங்கே முக்கியமாகத் தெரிந்து கொள்வோம். இதையே தான் சித்தர்கள் "அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது" என்கிறார்கள். நாம் நம்மைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் கிட்டத்தட்ட இவ்வுலகையும் ஏன் பிரபஞ்சத்தையுமே புரிந்துகொள்ளமுடியும் என்பதே இதன் தத்துவம்.இதில் சித்தர்கள் வழிபடும் முதன்மையான தெய்வம் 'வாலைத்தாய்' யார் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.