Tuesday, May 24, 2022

36. என் மகள் மீனாட்சி யார்?

நான் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு செய்து பார்த்ததில் என்னால் ஒரு சில விஷயங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதை ஓரளவிற்கு அறிவியலின் துணை கொண்டு விளக்கியும் இருக்கிறேன். அறிவியல் கைகொடுக்காத இடங்களில் ஆன்மீகம் கைகொடுக்கிறது. ஆனால் அவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அனைவருக்கும் உள்ளதா?

மீனாட்சியின் பிரச்சனையைப் பற்றி புரிந்துகொள்ள முயற்சித்த நான் இறுதியில் புரிந்துகொண்டது என்னவோ ஆன்மீகத்தைப் பற்றி தான். இப்பொழுது  மீனாட்சி யார் என்பதைப் பற்றிய எனது ஆய்வின் முடிவை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!

மீனாட்சி தனது முற்பிறவியில் ஒரு யோகியாகப் பிறந்து (ஆணாகவா இல்லைப் பெண்ணாகவா? தெரியாது!) 'க்ரியா' அல்லது 'வாசி' போன்ற உயர்நிலை யோகக் கலையைக் கற்று, குண்டலினியை எழுப்பி மூன்றாவது உச்சிக் குழியில் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்.

கர்மவினைகளை அறுக்கப் பிறவா வரம் வேண்டி  சமாதி நிலையை அடையும் முன்பே பின்னந்தலையில் ஏற்பட்ட விபத்து அல்லது காயம் போன்ற பாதிப்பால் இறந்திருக்க வேண்டும்.இதனால் தான் இவள் மீண்டும் பிறப்பெடுத்துள்ளாள். இப்பிறவியில் அவளது பின்னந்தலையில் தென்படும் அந்தக் காயம் தான் 'இரத்தக் குழல் கட்டி' (hemangioma). பிறவியில் தென்படும் மச்சம்,காயம் போன்றவற்றுக்கும் முற் பிறவியில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நாம் அறிவியல் பூர்வமாக முதலிலேயே பார்த்திருக்கிறோம். 

அவளது மூளையின் அமைப்பு வித்தியாசமாக அமைந்ததற்கான காரணமென்ன? 

சமீபத்தில் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றை பற்றி நான் படிக்க நேர்ந்தது.அதில் யோகம் மற்றும் தியானம் பழகும் போது மூளையில் உள்ள நியூரான்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதுடன் மூளையின் அமைப்பிலும் மாறுதல்களை உண்டாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

இதை இப்படி புரிந்து கொள்ளுங்கள்! ஒரு சிறிய பிளாஸ்டிக் குழாயில் அதிகமான அளவு நீர் வரும் போது அது விரிவடையுமல்லவா? அதேபோல் மூளையில் உள்ள நாளங்களில் சில குறிப்பிட்ட ஹார்மோன்கள் யோகமும் தியானமும் பழகும் போது அதிகம் சுரப்பதால் அளவில் விரிவடையலாம். இதனால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக இவற்றின் அருகில் இருக்கும் மற்ற பகுதிகள் சுருங்கலாம்.இது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பட்சத்தில், மூளையின் திட மற்றும் திரவ அளவுகளில் குறிப்பிடத் தகுந்த மாறுபாடுகள் ஏற்பட்டு சம்பந்தப்பட்டவருக்கு  உடல் மற்றும் மன ரீதியாக (நேர்மறையான) தாக்கத்தை உண்டாக்கலாம். இதையே மீண்டும் பஞ்சபூத தத்துவத்தின்படி சொல்கிறேன்! ஒரு காலத்தில் நதிகள் பாய்ந்தோடிய இடங்களை இன்று பார்த்தால் கரடுமுரடாக மேடு பள்ளங்கள் அதிகம் கொண்டதாக இருக்கலாம்.இப்போது  வெள்ளம் வந்தால் மேடு பள்ளங்களை மூடியபடி நதியானது அதே பாதையில் தான் மீண்டும் பயணிக்கும். இதுதான் நமது மூளைக்குள்ளும் நிகழ்கிறது. எனவே மீனாட்சியின் மூளையின் அமைப்பு வித்தியாசமாக அமைந்ததற்கு அவள் முற்பிறவியில் செய்த யோக சாதகமே காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது இவளுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பொருந்தும். தனிநபர்களின் செயல்பாடுகள் மூளையின் அமைப்பைப் பொறுத்து தானே அமையும்? எனவே தனிப்பட்ட மனிதர்களின் மூளையானது அவர்களின் முற்பிறவியின் தொடர்ச்சியாக இப்பிறவியில் தனித்தன்மை கொண்டதாக அமைகிறது என்றே நினைக்கிறேன்.அதாவது ஒருவருடைய மூளையின் அளவு அதில் உள்ள திட மற்றும் திரவங்கள் மற்றொருவரைப் போல் இருக்காது. அப்படியானால் இதைத் தான் 'தலையெழுத்தென்று' சொல்கிறார்களோ? அதே நேரம், ஒரே ஜாடையுடைய இரட்டையர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் உடல், பாலினம் மற்றும் மூளையென அனைத்துமே பிரதியெடுத்து வைத்ததுபோல் ஒன்றுபோல் இருப்பதால்தான் அவர்கள் உணர்வுகளாலும், செயல்களாலும் 'ஓருயிர் ஈருடல் போல்' வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். இரட்டையர்களுக்குள் டெலிபதித் தொடர்பு அதிகம் இருக்கிறதோ?

மீனாட்சிக்கு இப்பிறவியில்  ஏற்பட்ட 'குண்டலினி எழுச்சி': நான் மேற்கூறிய காட்டாற்று வெள்ளத்துக்கு  மீண்டும் வருகிறேன்.  முற்பிறவியில் அவளுக்குள் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம்தான் 'குண்டலி' எழுச்சி என்று வைத்துக்கொள்வோம். அதுதான்  இப்பிறவியில் அவளுக்கு ஒண்ணேகால் வயதில் மீண்டும் கிளம்பி 'மூன்றாவது உச்சிக் குழியில்' சென்று அமர்ந்துள்ளது. இதனால் குழந்தைக்குள்‌ நிகழ்ந்த பிரளயத்தைத் தான்  மருத்துவர்கள் 'ரெக்ரஷன்' (regression) என்று குறிப்பிடுகிறார்கள். 

நான் முன்பே கூறியது போல் 'குண்டலி எழுச்சி' மனரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. அதை ஒரு பிஞ்சுக் குழந்தையால் எப்படித் தாங்க முடியும்? இதனால் தான் அவள் தன்னையும், தன் பெயரையும், புறச்சூழல்களையும்  மறந்து 'பற்றற்ற நிலை'யை அடைந்திருக்கிறாள். இந்நிலையை அடைந்தவர்கள் யார்? ஞானிகள் தானே! அதனால் தான் அவள் ஒரு மெய்ஞானியாக தான் முற்பிறவிகளில் கற்ற பல மொழிகளையும் பண்டைய எழுத்து வடிவங்களையும்  பாதுகாத்து வைத்த அறிவுச் செல்வத்தையும் (அதாவது அவளது உயிருடன் கலந்த 'ஞானம்') தற்போது அவளது 'செல்லுலர் மெமரி' தூண்டப்பட்டதன் வாயிலாக மீண்டும்  நினைவு கொள்கிறாள் அனைத்தையும்

இவ்வளவு தெரிந்தவள் தான் யாராக முற்பிறவியில் இருந்தோமென்று  எப்பொழுதாவது கூறியிருக்கிறாளா? இதற்கு பதில்  'அவளால் நேரடியாக தான் யாரென்று கூற முடியவில்லை; அல்லது கூற விரும்பவில்லை!' என்றே புரிந்து கொள்கிறேன் (அதேபோல் நான் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் நான் உணர்ந்த 90 சதவீத உண்மையைத் தான்! பாக்கி 10 சதவீதத்தை வெளிப்படையாகச் சொல்ல எனக்கு தயக்கம் இருக்கிறது!).

முற்பிறவியில் உடலையும் உயிரையும் தனித்தனியாக பிரிக்கும் வித்தையைக் கற்ற  காரணத்தால் தான்‌‌ இப்பிறவியிலும் அவளது உடலே பிரபஞ்சத்தின் வாயிலாகமாறி (gateway to universe) அவளது எண்ணங்கள் பிரபஞ்சத் துகள்களில் ஏறி அமர்ந்து காலங்கடந்து பயணிக்கிறது. நான் ஏற்கனவே கூறியது போல் அந்த நதி  செல்வதற்கான பாதை என்பது  ஏற்கனவே (முற்பிறவியில்) அவளுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலுள்ள கரடுமுரடான பகுதிகள்தான் அவளது இப்பிறவியின் வித்தியாசமான மூளை அமைப்பின் பிரதிபலிப்பு. ஆழமான பள்ளகளிலும் நீர் (வாலை/CSF) பாய்வதால் தான் நமக்கெல்லாம் கிளம்பாத முற்பிறவி ஞாபகங்கள் அவளுக்கு அதிகமாக உள்ளது. இதன் காரணமாகத் தான் அவள் பிறந்தபோதே ரேவதியை தாயாக அங்கீகரிக்காமல் பால் குடிக்க மறுத்திருக்கிறாள். இதனடிப்படையில் பார்த்தால் நமக்கு தெரிந்த பிறவி மேதைகள் எல்லோருமே முற்பிறப்பின்  தொடர்ச்சியாக பிறந்தது முதலே குண்டலினி எழுச்சியைப் பெறுகிறார்கள் (congenital savant). ஒரு சிலரோ தலையிலும் முதுகுத் தண்டிலும் அடிபட்ட பிறகு குண்டலினி விழிப்படைந்து  திடீரென ஒரு நாள் 'ஞானி' ஆகிறார்கள் (acquired savant).

உண்மையில் சிறு உயிரினங்கள், விலங்குகள், ஊர்வன, தாவரங்கள் ஆகியவற்றிற்குக் கைவரப் பட்ட விஷயங்கள் நமக்கு அமானுஷ்யமாகவும் ஆச்சரியமாகவும் இருப்பதற்குக் காரணம் மனிதர்களாகிய நாம் இயற்கையை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதே. மனித நாகரிகத்தை எடுத்துக் கொண்டால் நாம் முதலில் வணங்கியது இயற்கையைக் தான். அதன் பின்னால் வந்தது தான் மதங்களும், உருவ வழிபாடும், தனிமனித வழிபாடுகளும். நாம் நம்மை இயற்கையின் ஒரு அங்கமாக நினைக்கத் தொடங்கினால் தனியாக கடவுளை வணங்கத் தேவையில்லை. ஏனென்றால் கடவுள் (இயற்கையில்) நமக்குள்ளேயே இருக்கிறார்.

உருமாறிய கொரோனாபோல் உருமாறிய யோகம்:  எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக நான் கூறிய யோகமும் தியானமும்னமும்  தானே?!அவற்றை இப்பிறவியிலும்  இன்னும் மீனாட்சி தொடர்கிறாளா? ஆம்! ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகள் கயிறு, கைக்குட்டை  போன்ற  குறிப்பிட்ட சில பொருட்களை கைகளால் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.‌இதற்கு 'ஸ்டிம்மிங்' என்று பெயர். இது போன்ற நேரங்களில் இவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து தனி உலகத்தில் தானாக சிரித்துக் கொண்டோ இல்லை வித்தியாசமான ஒலிகளை எழுப்பியபடி சஞ்சரித்துக் கொண்டோ இருப்பார்கள். தெரப்பிஸ்டுகளைப் பொறுத்தவரை இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளை தன் போக்கில் செல்ல அனுமதிக்காமல் பெற்றோர்கள் தலையிட்டு அவர்களை மீண்டும் நம்முடன் பயணிக்க உதவ வேண்டும் என்பார்கள். என்னைக் கேட்டால்    இதுதான் அவர்கள் யோகம் பழகும் நேரம். அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் எல்லாம் நமக்கெல்லாம் அப்பாற்பட்ட சக்திகளின் மூலம் கிடைக்கப் பெறுகிறது. என்னைப் பொறுத்தவரை இவர்கள் செய்வது உருமாறிய யோகாசனம் தான். மீனாட்சி கூட பின்னிரவு நேரங்களில் படுத்துக் கொண்டு கையில் எதையாவது சுற்றிக்கொண்டே 'கபாலபாதி' (reverse breathing) போன்ற பயிற்சிகளை தன்னிச்சையாகச் செய்வதை கவனித்திருக்கிறேன். இவள் தங்கள் கனவில் வருவதாக மற்றவர்கள் குறிப்பிடுவதும் இதே நேரத்தைத் தான்.

இவ்வளவு ஏன்? தாயின் வயிற்றில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆசனங்கள் செய்துவிட்டு  தான் பிறப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இன்று நமது நாட்டை விட மேலைநாடுகளில் பெரும்பாலானவர்கள் நமது யோகக் கலையையும், ப்ராணாயாமத்தையும்  முறையே மைண்ட்  ஃபுல்னஸ், கார்டியாக்  கோஹெரென்ட் பிரீத்திங் என்ற பெயரில் அதிகம் பழகுவதை கவனித்திருக்கிறீர்களா?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் வாழ்ந்த 'கவியோகி' சுத்தானந்த பாரதியின் சாம யோகாவைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்றால் யூடியூபில் முதலில் வருவது ஹாலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் இலவசமாக சொல்லிக்கொடுக்கும் சாம யோகா வகுப்புகளே. நமது குருகுலக் கல்விமுறையை வழக்கொழித்த வெளிநாட்டவர்கள், இன்று  நிச்சயம் காரணம் புரியாமல்  யோகம் பழகவில்லை என்று நம்புகிறேன். நமது பள்ளிகளில் ஆரம்பம் முதலே தியானத்தையும், யோகத்தையும் குழந்தைகளுக்கு கற்பிக்கத் தொடங்கினால்; அவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பதோடு நல்ல குடிமக்களாகவும் வளர நிறைய வாய்ப்புகள் உள்ளது.

எனது கணிப்பின்படி வரும் காலங்களில் ஆட்டிசம் உள்ள குழந்தைகள் உலகெங்கும் நிச்சயம் அதிகரிக்கத் தொடங்குவார்கள். இப்படியானால் அவர்களில் 10 சதவீதத்தினர் சவான்ட் சின்ட்ரோமுடன் பிறக்கும் குழந்தைகளாக இருப்பார்கள். ஒருகட்டத்தில் சாதாரண குழந்தைகளுக்கு நிகராக இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சமூகம் இவற்றைப் 'பிறவிப் பிரச்சனை' என்று பார்க்காமல் 'வாழ்வியல் குறைபாடாக' (lifestyle disease) அங்கீகரித்து ஒருகட்டத்தில்  இயல்பான வளர்ச்சி நிலை என்றே ஏற்றுக்கொள்ளும். எப்படி? நமக்கு நகத்தின் பயன்பாடு குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு நகங்களே இருக்காது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.அதேபோல் இன்று உலகின் வாழ்வியல் மாறுபாடு காரணமாக தாடையின் அளவு சுருங்கி 'ஞானப் பல்' (wisdom tooth) வளர்வதற்கான இடம் இயற்கையிலேயே இன்றைய தலைமுறையினரிடம் குறைந்து வருவதாக சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். 

நாய்கள் கூட மனிதர்களுடன் பல ஆயிரம் ஆண்டுகளாக சேர்ந்தே வாழ்ந்து வருவதால் அவற்றின் முகபாவனைகள் மனிதனுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் மாறி வருவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

அதேபோல் நான் புரிந்து கொள்வது என்னவென்றால் குழந்தைகளின் வளர்ச்சி நிலை என்பது அவர்களின் மூளையின் ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சியின் வெளிப்பாடே ஆகும். நாம் மூளையின் பகுதிகள் 1,2,3,4,5ன் வளர்ச்சிக்கேற்ப ஒரு சராசரி குழந்தையின் வளர்ச்சி நிலைகளை வகுத்து வைத்திருக்கிறோம் என்றால்; இன்று பிறக்கும் சில குழந்தைகளுக்கு இந்த வரிசை மாறி (உதாரணத்திற்கு 1,5,3,2,4 என்பது போல் வரிசை மாறி அமைகிறது). இதனால் இவர்களின் செயல்பாடுகளும் வித்தியாசமாகவே அமைகின்றன. இவற்றை நாம்  இன்று பிரச்சனை என்று கூறுவதற்கு முக்கிய காரணம் இன்னும் நாம் நமக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சியாக இவற்றைப் பார்க்காததே!

இதையே ஆன்மீக ரீதியாகப் பார்த்தால் இன்று உலகம் கலியுகம் முடிந்து சக்தி யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும், இந்தக் காலத்தில் யோகிகளும் ஞானிகளும் அதிகம் பிறப்பெடுப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். குறிப்பாக 2023ஆம் ஆண்டுமுதல் ஆன்மீக 'மறுமலர்ச்சி காலம்' ஏற்படும் என்கிறார்கள். எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக பிறந்தவர்கள் தான் மீனாட்சி போன்ற குழந்தைகள் என்பதையும்; அவர்களின் குணாதிசயங்களையும் தெள்ளத்தெளிவாக விளக்கி கோவாவில் உள்ள ஆன்மீகப் பல்கலைக்கழகம் தங்களின் வலைப் பக்கத்தில் 'ஆன்மீகக் குழந்தைகள்' என்ற ஆய்வில் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் ‌உலகம் பேரழிவை சந்திக்கும் (covid) என்பதை 2 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி இருந்தார்கள்.

நான் இறுதியாகச் சந்தித்த சென்னையின் குழந்தைகளுக்கான மூத்த மனநல மருத்துவர் நாங்கள் மீனாட்சியைப் பற்றிக் கூறியவற்றை முழுமையாகக் கேட்டுவிட்டு அவள் பூப்படையும் பருவம் வரும்போது (12 வயதில்), அவளது மூளையின் முன் பகுதியான 'ஃபிரான்டல் லோப்' (frontal lobe) முழுவளர்ச்சி அடையும்போது அவள் அந்த வயதுக்  குழந்தைகளைப் போல் இயல்பாகிவிடுவாள் என்றார். ஆனால் நான் பின்தொடர்ந்துவரும் சவான்ட் சின்ட்ரோம் உள்ள சிறுவர்களில் ஒருவன் பள்ளி இறுதி வகுப்பை நெருங்கியுள்ளான்.இளைஞனான அவனுக்கு அவனிடம் இருந்த சிறப்புத் திறமைகள் மங்கி கற்றல் குறைபாடு உள்ள குழந்தையைப் போல் இன்று தனித்து எழுத சிரமப்படுவதாகவும், மேலும் மனிதர்களுடைய முக ஜாடைகள் அவனுக்குள் அதிகக் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவனுடைய தாயார் என்னிடம் கூறினார். 

எனவே மீனாட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது எனது கணிப்பிற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவளது பிரச்சனைகள் நீங்கி அவளது உண்மையான திறமைகள் வெளிப்பட்டு அதனால் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை கிடைத்தால் எங்களைவிட மகிழ்ச்சியடையப் போகின்றவர்கள் யாரும் கிடையாது. அதே வேளையில் பிரச்சனைகள் தொடரப் போகிறது என்றால் எங்களால் இயன்றவரை, எங்களின் இறுதிவரை அவளுக்கு வேண்டிய 'தெரப்பி' முதலியவற்றைத் தொடர்ந்து அவளைக் 'கண்போல்' காப்போம். அனைத்து வகை வளர்ச்சிநிலைப்  பிரச்சனைகள், ஆட்டிசம் போன்றவற்றிற்கு  'சர்வரோக நிவாரணியாக' இன்று இருப்பது தெரப்பிய மட்டுமே. இதைத் தாண்டி இதுவரை 'இதுதான் தீர்வு' என்று எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சையோ மருத்துவ முறையோ நிரூபிகப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இதில் ஒருவர் வெற்றி அடைந்ததைப் பார்த்து எனது மகளை கூட்டிச்சென்றால்  அதே சிகிச்சைமுறை இவளை  நூறு சதவீதம் குணமாக்குமென்ற உத்தரவாதத்தை யாரும் தரத் தயாராக இல்லை. நாங்களும் ஒவ்வொரு கதவாகத் தேடிச்சென்று  தட்டுவதை நிறுத்தப் போவதும் ல்லை. இதுபோன்ற சமயங்களில் தான் மனிதர்களின்மேல் இருக்கும் நம்பிக்கையைவிட நமக்கு அப்பாற்பட்ட சக்திகளிடம் சரணடையத் தோன்றுகிறது.  

உங்கள் குழந்தையை நீங்களோ இல்லை இந்த சமூகமோ  மற்ற பிரச்சையேதும் இல்லாத குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமற்றது என்றே சொல்வேன். இது நீரில்வாழும் மீனை முயலோடு ஒப்பிடுவதுபோல். மீனுக்கு நிலத்தில் ஓடத்தெரியாது. அதேபோல் முயலால் மீன்போல் தண்ணீரில் நீந்தத்தான் முடியுமா? ஒரு குழந்தை அதிகம் கேள்வி கேட்கிறதென்றால் அது புதுப் புது விஷயங்களை கற்க விரும்புகிறதென்று பொருள். அதேபோல் ஒரு குழந்தை பேசாதிருத்தால் அதற்கு பிரச்சனை இருக்கலாம், இல்லை எல்லாம் தெரிந்த ஞானியாகவும் இருக்கலாம், இல்லை இவ்விரண்டும் சேர்ந்தேகூட இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனிச்சிறப்பு வாய்ந்த குழந்தையே! உண்மையிலேயே போற்றத் தகுந்த ஒரு குழந்தையை அதன் மகத்துவம் புரியாமல் வளர்ப்பது தான் நாம் அவர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம். பெற்றோராகிய நாம் நமது குழந்தையை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டால் வேறு யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?! நாங்கள் மீனாட்சியைப் பற்றி எல்லாம் தெரிந்தாலும் கண்டிப்பும் அன்பும் கலந்து ஒரு இயல்பான குழந்தையைப் பராமரிப்பதுபோல் தான் வளர்க்கிறோம். 

ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் துறவியிடம் உங்களது பிரச்சனைகளை முறையிட்டால் அவர் உங்களை 'அதைச் செய்.. இதைச் செய்..' என்று சொல்லிவிட்டு அவர் இருக்கும் இடத்திலேயே தான் 'சிவனே' என்று உட்கார்ந்திருப்பார். அதுபோல் மீனாட்சி எனக்குப் புரியாத பல விஷயங்களைப் புரிய வைப்பதற்காகத் தான் பிறந்திருக்கிறாள் என்றே தோன்றுகிறது. அவள் என்னை திசை திருப்பிவிட்டு விட்டு  தனது குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக கடந்து கொண்டிருக்கிறாள். நான் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் ஏராளம். அப்படி ஏதேனும் எனக்கு புதிதாகத் தெரிய வந்தால் நிச்சயம் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வேன். அதுவரை எங்களைப் போல் விசித்திரமான பிரச்சனைகளைச் சந்தித்து வரும் பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கத் தான் இந்த பிளாக்கை எழுதியுள்ளேன். நீங்களும் உங்கள் குழந்தையின் மேல் முழு நம்பிக்கை வைப்பதுடன்; அவர்களுக்கு தர வேண்டிய தெரபி, மருத்துவ உதவி மற்றும் அவர்களுக்கு ஏற்ற பள்ளியில் சேர்ப்பது போன்ற விஷயங்களை கடமை தவறாது செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி வணக்கம்!





Monday, May 23, 2022

35. கிரிப்ட்டோ பயோசிஸ் (crytobiosis) முறையில் தவம் செய்யும் உயிரினங்கள்:

 திருமந்திரம் சொல்லும் மூன்றாம் தந்திரம் சமாதி யோகம் (அஷ்டாங்க யோகத்தின் இறுதி நிலை!)

பாடல் எண்: 630 

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும் ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால் 

ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் 

ஆதி அடிபணிந் தன்புறு வாரே முன்நின்ற

விளக்கம்:

ஒப்பற்ற தனிப்பெரும் ஜோதிச் சுடர் ஒளியாய் நின்று ஈசனும் ஆதியாக அருளும் சக்தியும் உடம்பினுள் நின்ற ஆன்மாவும் ஒன்றே ஆகும்.

 இம்மூன்றையும் ஒன்றாக்கி ஒன்றி இருப்பதே சமாதி யோகம் .

இந்த சமாதி நிலையில் நிற்கும் ஞானிகள் ஆதி பிரம்மனும் நீல வண்ணம் கொண்ட திருமாலும் சிவமே என்று அடிபணிந்து அன்பு செய்வார்கள்.

அதாவது வாசியை (உயிர்க் காற்றை!) புறம் போக விடாது பரம்பொருளில் நிலைக்கச் செய்து அந்தப் பொருள் ஒன்றினையே பற்றி ஒருங்கி இதனை உணர்ந்து அங்கேயே தவ சாதனையில் நின்றிருந்தால் பிராண வாயுவும் அங்கேயே மடங்கி உயிரின் உள்ளேயே அடங்கி நின்று விடும். 

தனித்தனி கடவுள்களாக ஆண் வேறு, பெண் வேறாக  சொல்லத் தொடங்கி, ஒரு இடத்தில்  சிவனும்-சக்தியும் ஒன்றெனக்கூறி; இங்கே தான்  யோக மார்கத்தால்  தூண்டப்பட்ட  உயிர்  மூச்சு நிலை நிறுத்தப்பட வேண்டும் என்கிறார். அப்படி ஒரு நிலையை  எட்ட முடிந்தால் , அங்கே  நாம்  காண்பது  நம்மைப் படைத்த  பிரம்மனும், ஹரியும் (திருமால்)-சிவனும் ஒன்றென உணரமுடியும். இது தான் 'பரம்பொருள் ' எனும் 'பிரும்மம்'. இதுவே இறைவனிடம் கலக்கும்  தத்துவம். இந்த  விளக்கம் புரிகிறதா? இதையே சற்று விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போமா?

 நான் முன்பே கரடி குளிர்காலத்தில் உணவும் நீரும் அருந்தாமல் உறக்கத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தேன். இவை தவிர குளிர் பிரதேசங்களின் தென்படும் குரூஸியன் கார்ப் மற்றும் தங்க மீன் போன்றவை குளிர்காலத்தில் அவை வாழும் நீர் நிலைகள் உறையும்போது, தங்கள் உடலில் இருக்கும் லாக்டிக் அமிலத்தை எத்தனால் மற்றும் ஆல்கஹாலாக மாற்றி அவற்றிலிருந்து பிராண வாயுவை எடுத்துக் கொள்ளுமாம். அசைவில்லாமல் குளிர்காலத்தில் இறந்தது போல் காட்சியளிக்கும் அவை பனி உருகத் தொடங்கியதும் மீண்டும் உயிர் பெற்றது போல் நீந்தத் தொடங்கும். இதேபோல் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் காணப்படும் 'இகுவானா' என்று அழைக்கப்படும் ராட்ச ஓணான்கள், குளிர்காலம் வந்தால் இறந்தது போல் மரங்களிலிருந்து அசைவில்லாமல் தரையில் விழும். இவற்றை பத்திரமாக மீட்கும் தன்னார்வலர்கள்; அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைத்து மீண்டும் உயிர்பெற உதவுகிறார்கள். இவை எல்லாமே குளிர் ரத்தம் கொண்ட உயிரினங்கள். இவற்றால் புறச்சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும். ஆனால் மனிதர்களாகிய நாமோ உஷ்ண ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது சாத்தியமில்லை என்பார்கள்.

சமீபத்தில் டெலாய்டு ரோடிஃபர் (bdelloid rotifer) என்னும் பல செல் நுண்ணுயிரி ரஷ்யாவின் சைபீரியாவின் உறை பனிக்குள் இருபத்தி நாலாயிரம் ஆண்டுகள் 'சமாதி நிலையில்' இருந்து விட்டு இப்பொழுது மீண்டும் உயிரோடு வந்ததோடு இல்லாமல், இணையின் துணையின்றி இனப்பெருக்கமும் செய்துள்ளது. இதை ஆங்கிலத்தில் 'கிரிப்டோ பயோஸிஸ்' (cryptobiosis) அல்லது ஹைபர்னேஷன்  (hibernation) என்பார்கள். இதேபோன்று  மாறுபட்ட சூழல்களில் வாழக்கூடிய மற்றொரு நுண் உயிரினம் தான் நீர்ப் பன்றி (tardigrade).இவ்விரு உயிரினங்களுமே அதி உஷ்ணமான அணுக்கதிர் வீச்சிலும், உறை பனியின் கடுங்குளிரிலும் தாக்குப்பிடித்து வாழும் தன்மை கொண்டவை. 

இதில் நீர்ப் பன்றிகளை( Tardigrade) ஆராய்ந்தபோது அவைகளின் உடலில் காணப்படும் TDP (Tardigrade intrinsically disordered proteins) எனும் புரதம் அவற்றின் உடல் வரண்டுபோகும் போது மீண்டும் சுரந்து அவற்றை உயிர்பிக்கச் செய்கின்றன.

ஆனால் நம்மாலும் குளிர் ரத்தம் கொண்ட உயிரினங்களைப் போல் சமாதி நிலையை (கிரிப்டோபயோஸிஸ்) அடைய முடியும் என்பதைத் தான் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த சித்தர்கள் தங்களது ஜீவ சமாதிகளின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள். அதனால் தான் ஜீவ சமாதி இருக்கும்  இடங்களில் ஆற்றல் அதிகம். எனவே நாம் முழு நம்பிக்கையுடன் மனமார வேண்டினால் நிச்சயம் நிறைவேறும் என்பார்கள். பெரும்பாலான ஜீவசமாதிகளில் இருக்கும் சித்தர்களின் உடல்கள் எத்தனை ஆண்டுகளானாலும் கெடுவதில்லை. நகம்,முடி மற்றும் தோல் போன்றவை அப்படியே இருக்கின்றன. யோகத்தையும், தியானத்தையும் கருத்தாய்ப் பழகும் யோகிகள், சித்தர்கள் தங்கள் உச்ச நிலையாக 'சமாதி' நிலையைத் தான் தேர்ந்தெடுத்து அடைகிறார்கள். இதன்போது அவர்கள் பெற்ற அறிவானது அவர்களின் உடலிலுள்ள செல்களிலிருந்து கிளம்பி உயிரோடு ஒன்றி விடுகிறது என்று புரிந்துகொள்கிறேன். அப்படியானால் யோகமும் தியானமும் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனிதர்களையும் தாண்டி மற்ற உயிரினங்களுக்கும் பொதுவானது என்றே நம்பத் தோன்றுகிறது. மேற்கூறிய திருமந்திரப் பாடல் சொல்லும் உயிரை விடாமல் உள்ளேயே வைத்து இறைவனுடன் ஐக்கியமாகச் சொல்வதன் தத்துவமும் இதுவே.

சில கிழங்கு வகை தாவரங்களைக் கூட எடுத்துக்கொள்ளுங்கள்! பெரும்பாலும் அவற்றின் இலைகள் கருகி விட்டாலும், அவற்றின் கிழங்கை நாம் பாதுகாப்பாக வைத்து பராமரித்து மீண்டும் நட்டு வைத்தால் அவை உயிர்பெறும். தாவரங்களின் 'ஆணிவேரை' நான் நமது 'முதுகுத் தண்டு'டன் ஒப்பிடுகிறேன். ஆணிவேர் இல்லை என்றால் தாவரம் இறந்துவிடும். அதாவது அவற்றின் 'உயிர்' அங்குதான் உள்ளது நமக்கு முதுகுத்தண்டில் இருப்பது போல். தாவரங்களில் 'சல்லி வேரை' நமது நரம்புகளோடும், அவற்றின் கிழங்குகளையும், பழங்களையும் நமது தலையில் உருவாகும் 'அமிர்தத்தோடு' (ஞானப் பழம்) ஒப்பிடுகிறேன். எல்லாத் தாவரங்களிலும் வெற்றிகரமாக கனிகளும் கிழங்குகளும் உருவாவதில்லை. அதுபோல்தான் 'ஞானமும்' எல்லோருக்கும் கிட்டுவதில்லை.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கழகம் போன்றவை தங்களது  எதிர்கால நெடுந்தூர விண்வெளிப் பயணங்களின்போது அதிக சவாலான மற்றும் செலவு தரக் கூடிய விஷயமான விண்வெளி வீரர்களுக்கான உணவு மற்றும் நீரின் தேவையின்றி அவர்களை  'கிரிப்டோபையோசிஸ்' முறையில் (சமாதி நிலையில்) வைத்து விண்வெளி ஓடத்தில் அனுப்பி, இறங்க வேண்டிய இடம் வரும் போது அவர்களை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்ப தேவையான ஆய்வுகளை தற்போது மேற்கொண்டுள்ளது.  யோகி பிரகலாத் ஜானியை வைத்து நமது விஞ்ஞானிகள் செய்ததும் இதே ஆராய்ச்சி தானே? 


மீண்டும் ஆன்மீகப் பாதைக்கு வருவோம்!

கீதையில் கிருஷ்ண பரமாத்மா "உடலுக்கு தான் அழிவு. ஆனால் ஆன்மா அழியாது மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும்" என்று சொன்னதை இங்கே நாம் நினைவு கொண்டால், அப்படி அழியும் உடலைக் கூட ஒரு சிலரால் அப்படியே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாது அவர்கள் கற்ற அறிவையும் தங்கள் உயிரோடு சேர்த்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள்.

கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பு முக்தி அடைந்த ராமானுஜரின் திருமேனி இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பாக உள்ளது.

எப்படி நீரானது ஆவியாகி, மேகமாகி மீண்டும் மழையாய் பொழிந்து பூமியில் சேர்கிறதோ; அதேபோல் பிரியும் உயிர் மீண்டும் வேறு உடலைத் தேடி வந்துவிடுகிறது. இந்தச் சங்கிலியிருந்து விடுபடவே கர்மவினையினை அறுத்து தனக்குப் 'பிறவா நிலை' வேண்டும் என்று அடியார்கள் இறைவனை வேண்டுகிறார்கள். இடைப்பட்ட நேரத்தில்  அந்த உயிர் எங்கே இருக்கிறது? யார் மீண்டும் திருப்பி அனுப்புகிறார்கள்? எந்தப் பெற்றோர்க்குக் குழந்தையாக? போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் விடை உள்ளதா?

உயிர்கள் மட்டுமா? இந்தப் பிரபஞ்சமே ஒவ்வொரு பிரளயத்திலும் மறுபிறப்பு எடுக்கின்றது என்கிறார் சர் ரோஜர் பென்ரோஸ் என்ற 2020க்கான நோபல் பரிசு பெற்ற கணித மேதை . இவரின் கூற்றுப்படி பிரளயதிற்கு முன்பு இருந்த பிரபஞ்சம் அழிந்து மீண்டும் உருவாகி உள்ளது. இப்போது நாம் இருப்பது அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதுவும் அழிந்த பிறகு மீண்டும் உருவாகும் என்கிறார்.



Sunday, May 22, 2022

34. ஆகாயப் பதிவுகள் (Aakashik Records/ Zero Point Energy Field) மற்றும் கிளவுட் கம்பியூட்டிங்(cloud computing)- ஒரு ஒப்பீடு:

 'உலகின்  அனைத்து நடவடிக்கைகள் மற்றும் தனிநபர்களைப் பற்றிய விஷயங்கள் என அனைத்துத் தகவல்களும் அண்டத்தின் ஓரிடத்தில் பதிவு செய்யப்படுகின்றன' என்று சொல்வார்கள். அதற்கு "Aakashik Records"என்று பெயர் (சித்திரகுப்தன் கையில் இருக்கும் கணக்குப் புத்தகம் இதுதானோ?). இன்று தகவல் தொழில்நுட்பத்தில் நாம் பயன்படுத்தும் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' முறையும் இதுதான். நமக்கு வேண்டிய தகவல்களை நமது கணினியிலோ, தொலைபேசியிலோ சேமித்து வைக்கத் தேவையில்லை. ஏதோ ஒர் இடத்தில் இருக்கும் சர்வரை இன்டர்நெட் உதவிகொண்டு தொடர்பு கொண்டால் நமக்கு வேண்டிய தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.அதேபோல் கூகுள் போன்ற தேடு பொறிகள் (search engines) நீங்கள் ஒரு வார்த்தையை குறிப்பிட்டால் அதை கணப்பொழுதில் உலகிலுள்ள கணினிகளையெல்லாம் தேடி அலசி உங்களுக்கு வேண்டிய தகவலை கண்முன் காட்டிவிடும். இப்படியே சில மனிதர்களால் தனக்கு வேண்டிய தகவல்களை தேவைப்படும்போது ஆகாயப் பதிவுகளிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். சித்தர்களும், ஞானிகளும், சவான்ட் சின்ட்ரோமும் உள்ளவர்கள் முன் பின் தெரியாதவர்களைப் பற்றியும், தெரியாத விஷயங்களைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பது இப்படித்தானோ? நான் நினைக்கிறேன் 'ஒரு படைப்பு என்பது யாரோ ஒருவருடைய மனதில் தோன்றும் ஒரு கற்பனை தானே? அந்த கற்பனையில் அவர் ஒரு படைப்பை முழுமையான வடிவத்தில் எதிர்காலத்தில்  பார்க்கிறார். பிறகு அதற்கு செயல்வடிவம் கொடுக்க நிகழ்காலத்தில் முயல்கிறார்' என்று சொல்லலாமா? அப்படியானால் அந்த படைப்பாளி தனது மனதைப் பயன்படுத்தி சிறிது தூரம் காலப் பயணம் மேற்கொண்டு முன்னோக்கி சென்று எதிர்காலத்தைப் பார்த்துவிட்டு நிகழ்காலத்திற்கு திரும்புகிறார் என்று வைத்துக் கொள்ளலாமில்லையா?

பொதுவாக இறந்தகாலத்தை அனைவராலும் மனதில் கொண்டு வந்து பார்க்க முடியும் என்பது சாத்தியம் தானே? அப்படியானால் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்பதும் சாத்தியமே!

இசைஞானியும் இசைப்புயல் சொல்லும் ரகசியம்: சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா அவர்கள் "தனக்குத் தோன்றும் கற்பனையானது முழு வடிவம் பெற்ற இசையாக மனதில் அப்படியே கேட்கிறது. எனவே கருவிகளை இசைத்து இசை கோர்க்காமல் நேரடியாக இசைக் குறிப்புகளாகவே எழுதி விடுவேன்" என்று கூறியுள்ளார். மேலும் "இசை என்னைத் தேர்ந்தெடுத்து என் மூலமாக வெளிப்படுகிறது. இதில் எனக்கு எந்த வேலையும் இல்லை"என்று அவர் கூறுவது முற்றிலும் உண்மையே தவிர அதில் துளியும் ஆணவமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். அதேபோல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் தனக்கு கற்பனை என்பது எல்லையற்ற ஒரு இடத்திலிருந்து வருவதாகவும், அந்த இசையே ஒருவரின் மனதைத் தொடக்கூடியது என்றும் சமீபத்திய பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளார். இவர்கள் இருவருமே தியானம் செய்பவர்கள் என்பதை நீங்கள் இங்கே மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறு மனதில் கேட்கும் இசையை உரிய வடிவத்தில் பதிவு செய்து பிறருக்குக் கொடுக்க இவர்கள் முறையாக இசைக் குறிப்புகளை எழுதவும் பயின்றுள்ளார்கள். கிட்டத்தட்ட நாற்பது வயதை நெருங்கும் எனக்கு இந்தக் கொரோனா காலத்தில் இசையமைக்கும் திறமை புதிதாக வந்துள்ளது. இதுகூட எனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மாற்றம் என்று உணர்கிறேன். எனக்குள்ளும் அழகான இசை கேட்கிறது! ஆனால் எனக்கு முறையான பயிற்சி இல்லாததால் அதை இசைப்பதற்கு அதிகம் சிரமப்படுகிறேன். நான் மனதில் கேட்ட இசைக்கும் அதையே நான் வாசித்தபோது கேட்ட இசைக்கும் அதிக வேறு இருப்பதாக உணர்கிறேன்.‌ எனவே நமது கற்பனைக்கும் அதை செயல்படுத்தும் விதத்திற்கும் உள்ள தொலைவே நமது வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று சொல்லாமல்லவா?

மொபைல் இயங்கு தளங்களுகும் குண்டலினி எழுச்சிக்கும் உள்ள தொடர்பு:  என்னைப் பொருத்தவரை 'எந்த ஒரு  படைப்பும் எண்ணங்களுக்கு கொடுக்கப்பட்ட செயல்வடிவம்' என்று உறுதியாக நம்புகிறேன். இங்கே நான் குறிப்பிட போவது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த ஒப்பீடு!

ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்கு தளங்கள் குறிப்பிட்ட வரையறைக்குள் இயங்கும்படி அவற்றின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு நமக்கு அந்தந்த நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இதை நான் ஒரு சாதாரண மனிதனின் மூளையோடு ஒப்பிடுகிறேன். அதாவது அங்கீகாரம் இல்லாத செயலிகளை  உங்களால் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது. அதேபோல் தேவையில்லை என்று நினைத்தாலும் சில செயலிகளை உங்களால் நீக்க முடியாது. ஆனால் இந்த இயங்குதளங்களை முற்றிலுமாக மாற்றி உங்களுக்கு ஏற்ற வகையில் மொபைலில் பயன்படுத்த வழிவகை உள்ளது. இதற்கு ஆண்ட்ராய்டில் 'ஃபிளாஷிங் பிராசஸ்' (flashing process) என்று பெயர். ஐஓஎஸ்ஸில் இதை 'ஜெயில் பிரேக்கிங்' (jail breaking) என்று சொல்வார்கள். நீங்கள் அப்படிச் செய்துகொண்டால் உங்களுக்கு வேண்டிய செயலிகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம். உங்களது கைபேசியின் ஆற்றலைக் கூட மாற்றியமைத்துப் பயன்படுத்தலாம்.ஆனால் இப்படி செய்வதால்  உங்கள் கைபேசிக்கு அதன் உற்பத்தியாளர் வழங்கியுள்ள உத்தரவாதம் ரத்தாகும். இதை நான் குண்டலினி எழுச்சி அடைந்த மூளையோடு ஒப்பிடுகிறேன். 'குண்டலினி' எழுச்சி அடைந்தால் உங்களது மூளையின் ஆற்றல் மற்றும் செயல்பாடு மாற்றி அமைக்கப்படுகிறது. அதேநேரம் இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் இல்லையா? 


33. மனதால் காலப் பயணம் மேற்கொள்ள முடியும்!

'மனதால் காலப் பயணம் மேற்கொள்ள முடியும்!' இதற்கு நான் ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். இது முழுக்க முழுக்க எனது சிந்தையில் உதித்த எண்ணம்! ஒரு வட்ட வடிவமான மைதானத்தில் நீங்கள் பிறரைவிடப் பன்மடங்கு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களால் மற்றவர்கள் நான்கு சுற்று சுற்றும் நேரத்திற்குள் 40 சுற்றுக்களை கூட முடித்து விட முடியும். நீங்கள் பிறர் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்வரை இருக்கும் இடத்திலேயே இளைப்பாறலாம். மேலும் முன்னோக்கிப் பயணிக்கலாம், அல்லது பின்னோக்கி கூடப் பயணிக்கலாம். இதில் 'நீங்கள்' என்று நான் குறிப்பிடுவது உங்களது 'எண்ணத்தை'. நீங்கள் ஓடும் பாதை தான் நியூட்ரினோ எனும் பிரபஞ்ச  அலை-அதாவது டெலிபதியால் உண்டாகும் தொடர்பு. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே  தீர்மானிக்கும் காரணிகள் நேரமும், தூரமும்.

ஏன் முழு உடலைப் பயன்படுத்தாமல் எண்ணங்களைப் பயன்படுத்தி மட்டுமே தான் காலப் பயணம் செய்ய முடியுமென்று சொல்கிறேன் தெரியுமா?இதற்கான விடை ஐன்ஸ்டீனிடம் உள்ளது! அவரின் கூற்றுப்படி "உங்களால் ஒளியின் வேகத்தில் (ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள்) பயணிக்க முடிந்தால் நிச்சயம் நீங்கள் காலத்தை வெல்வீர்கள்" என்பதே! 

ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்கும் தத்துவம்:

நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! நமது உடலானது அதிக எடை கொண்டது. அதை வைத்துக்கொண்டு நம்மால் புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒளியின் வேகத்தில் நிச்சயம் பயணிக்க முடியாது. இதுவரை நாம் புவியீர்ப்பு விசைக்கு எதிராக அடைந்துள்ள அதிகபட்ச வேகம் என்பது ராக்கெட் செல்லும் மணிக்கு 28,000 கிலோமீட்டர்கள் என்பதே. ஆனால் நமது 'உயிர்' (ஆன்மா) எடை இல்லாதது. எனவே அது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்படாது. உங்களால் மனதை (குறிப்பாக 'தான்' என்ற உணர்வை) அடக்கி உயிரை (ஜீவாத்மாவை) வெளிக்கொணர முடிந்தால், அது உங்களின் சார்பாக நியூட்ரினோ அலையைப் (பரமாத்மாவை) பயன்படுத்தி  காலப் பயணம் செய்யும். நீங்கள் நினைத்த மாத்திரத்தில் எதிர்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் வேண்டிய இடத்திற்கும் சென்று வரலாம். சித்தர்களும் இதைத்தானே செய்கிறார்கள்?!

 நீங்களே  பிரபஞ்சத்தின் வாயிலாக மாறினால் ஞானமடையலாம்! இதுதான் ஜீவாத்மா (ஒரு உயிர்) பரமாத்மாவுடன் (பிரபஞ்சத்துடன்) கலப்பது. அந்த வாயிலின் திரவுகோல் தான் 'குண்டலினி' சக்தி. நாம் மரணிக்கும் போது வெளிப்படும் சக்தியும் இதுவே. அந்த சக்தியை வசப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது தியானமும் யோகமுமே. இப்பொழுது புரிகிறதா ஏன் மாயம்மா, திப்புமஸ்தான் அவுலியா போன்ற ஞானிகள் தங்கள் உடலை தற்காலிகமாகப் பிரிந்து எங்கோ பயணித்து விட்டு விரும்பிய நேரத்தில் மீண்டும் திரும்பியிருக்கிறார்கள் என்று?! (இதனடிப்படையில் பார்த்தால் எப்படி ஆன்ம சொரூபமாக இருக்கும் திப்பு மஸ்தான் அவுலியா சூட்சுமமாக என்னைத் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வரும்படி எனது சிந்தையைத் தூண்டினார் என்று புரிந்துகொள்ள முடிகிறது!)

அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் 'ரொனால்ட் மாலட்' :  'காலப் பயணம்' (Time Travel) செய்து சிறுவயதில் தான் இழந்த தந்தையை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த ஆய்வில் பல ஆண்டுகள் முன்பு இறங்கியுள்ளார். "எனது ஆய்வு என்பது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. எனது காலத்திற்குப் பிறகு எதிர்காலத்தில் பல கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு காலப் பயணம் சாத்தியப்படலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் ஆய்வின்படி காலப் பயணத்தில் நேரத்தை மடக்க ஒளியை  போவதற்கும் திரும்பி வருவதற்குமான பாதையாகப் பயன்படுத்தலாம்(using light as a loop)  என்கிறார். குண்டலினியை எழுப்பி பரவசநிலையை அடைந்தவர்கள் இறுதியில்  கடவுளைப் பேரானந்தம் தரக்கூடிய ஒளி வடிவமாகப்  பார்த்ததாகவே குறிப்பிட்டுகிறார்கள்.அந்த ஒளியை பற்றிக் கொண்டு தான் காலப் பயணம் செய்ய வேண்டுமோ? அப்படியானால் கடவுளைக் காண்பது அல்லது உயிர் உடலை விட்டுப் பிரிவது என்பது இறுதி அல்ல!  'ஒரு கூட்டுப் புழு தனது கூட்டை உடைத்துக்கொண்டு பட்டாம் பூச்சியாக சிறகடித்து அடுத்த கட்ட பயணத்திக்கு செல்வதுபோல்' என்று வைத்துக் கொள்ளலாமா? விளக்கையே பார்த்துக்கொண்டிருந்த ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) ஒரு நாள் தனது உடலோடு மொத்தமாக ஜோதியில் மறைந்த ரகசியம் இது தானோ?



Thursday, May 19, 2022

32. CERN சொல்லப் போகும் நியூட்ரினோ பற்றிய ரகசியம்!

 சரி, இனி CERNஐ பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். தங்களது நிறுவனத்தின் வாசலில் ஒற்றைக் காலைத் தூக்கி பிரபஞ்ச நடனமாடும் (cosmic dance) நடராஜரின் சிலையை வைத்திருக்கும் அந்த பன்னாட்டு அமைப்பில் இந்தியாவும் ஒரு உறுப்பினரே. 1954ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பிரபஞ்ச வெடிப்பைப் பற்றி புரிந்து கொள்வதற்காக பிரபஞ்சத்திலிருந்து பூமியை நோக்கி (நிற்காமல் அண்டத்திலிருந்து தொடர்ந்து) வந்து கொண்டே இருக்கும் 'நியூட்ரினோ' என்ற எடை இல்லாத அடிப்படைத் துகளான பிரபஞ்சத் துகளைப் பற்றி தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது எங்கிருந்து உருவாகிறது? இது 'சூப்பர் நோவா' என்று அழைக்கப்படும் அதீத நிகழ்வான ஒரு முதிர்ந்த நட்சத்திரப் பெரு வெடிப்பின் போது உருவாகி இறந்த அந்த நட்சத்திரத்தின் 99% ஆற்றலைக் கடத்தும் தூதுவனாக செயல்படுகிறது (இதை நான் இறந்த அந்த நட்சத்திரத்தின் 'ஆன்மா' என்று புரிந்து கொள்கிறேன்!).


பூமிக்கு அடியில்  27 கிலோமீட்டர் நீளத்திற்கு ராட்சக் குழாய்களை நிறுவி உலகின் மிகப் பெரிய துகள் முடுக்கியை (particle accelerator) உருவாக்கி இவர்கள் செய்யும் முக்கிய ஆராய்ச்சி என்பது பூமியை அடைத்த இந்தத் துகள்களை அந்தக் குழாய்களில் செலுத்தி ஒன்றுடன் ஒன்று மோதச் செய்து அதன் வேகத்தை பன்மடங்கு கூட்டுவது தான். இதனால் ஏற்படும் கால மாற்றம் இத்துகள்களை நிகழ் காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு இட்டுச் செல்கிறது.எனவே இதை 'டைம் டிராவல்'(காலப் பயண) ஆராய்ச்சி என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுவார்கள். இந்த அமைப்பைத் தவிர ஜப்பானைத் தொடர்ந்து இந்தியா போன்ற நாடுகளும் தனிப்பட்ட முறையில் நியூட்ரினோக்களை ஆராயும் முனைப்பில் உள்ளன. 

இந்தத் துகள்கள் 'எடை இல்லாதவை' என்ற காரணத்தால் ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன. நீங்கள் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கும் அவருக்கும் நடுவில் இருப்பது வெற்றிடமல்ல! அந்த இடம் பிரபஞ்சத் துகள்களான நியூட்ரினோக்களால் நிரப்பப்பட்டுள்ளது. அவை உங்ககளையும் ஊடுருவியபடி தாண்டிச் சென்று கொண்டே தான் இருக்கிறது. இந்த உலகமே பிரபஞ்சத் துகள்கள் நிரம்பிய கடலுக்குள் தான் நீந்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அடிப்படைத் துகள்களை ஆராயும் இயற்பியல்  விஞ்ஞானிகள் (Quantum Physics). பொதுவாக நியூட்ரினோகள்  கடினமான பாறைகளைக் கொண்ட குகை போன்ற இடங்களில் தான் அதிகம் தென்படுகிறதாம்! (ஞானம் பெற வேண்டி காட்டில் குகைகளில் முனிவர்கள் தவமிருப்பதன் காரணம் இப்போது புரிகிறதா?). இன்று இந்தியா இந்த ஆராய்ச்சிக்காக‌ தேர்ந்தெடுத்துள்ள இடம் தேனி மாவட்டத்திலுள்ள ஒற்றை பாறையாக காட்சியளிக்கும் ஒரு மலையைத் தான்.

நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதால் நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்று நினைக்கிறீர்கள்?

 இதற்கான பதில் முற்றிலும் என்னுடைய கணிப்பு தான்! (அதற்காக இதனைக் கற்பனை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்!). அதாவது இன்று நாம் பயன்படுத்தும் கம்பியில்லாத் தொடர்பின் (wireless communication) அடுத்த பரிமாணமாக நியூட்ரினோவை நான் பார்க்கிறேன். நியூட்ரினோவைப் பயன்படுத்தத் தொடங்கினால் நாம் நமது எண்ணங்களின் மூலம் காலம் கடந்து முன்னோக்கியோ பின்னோக்கியோ கூடப் பயணிக்கலாம். இதன் மூலம் பூமிக்கு உள்ளேயும் வெளியேயும் கூட நம்மால் அனைத்து உயிரினங்களுடனும் 'டெலிபதி மூலம்' தொடர்புகொள்ள முடியுமென்று உறுதியாக நம்புகிறேன். இதனால் தான்‌ மெளனமொழியாம் டெலிபதியைப் "பிரபஞ்ச மொழி"யென்று முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன். 

(முக்கிய குறிப்பு: ஃபேஸ்புக் நிறுவனம் மனதில் நினைப்பதை எழுத்தாகக் கொண்டு வரும் டெலிபதி பிராஜக்டில் ஈடுபட்டுள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க் ஸுகர்பர்க்  குறிப்பிட்டுள்ளார் .

இதேபோன்ற ஒரு ப்ராஜெக்டில் நியூரல் லிங்க்  என்ற நிறுவனத்தின் மூலம்  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் இலான் மஸ்கும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது‌.மூளையின் வெவ்வேறு பகுதிகளில் நமது சிந்தனைக்கேற்ப ஏற்படும் மின் நடவடிக்கைசெய்யப்படும் களை கண்காணிக்க ஒரு 'சிப்'பை வைப்பதன் மூலம் இது சாத்தியப்படுகிறது. அவர்களது ஆய்வக சோதனையில் ஒரு குரங்கை அதன் மனதைக் கொண்டு கணினியில் விளையாடச் செய்து வெற்றிகண்டுள்ளார்கள். மனிதர்களைக்கொண்டு  செய்யப்படும் சோதனைகள் இவ்வாண்டு தொடங்கியம் என்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட மார்க் ஸுகர்பர்க்இலான் மஸ்க் இவர்கள் இருவருக்குமே குறைந்த பாதிப்புடைய ஆட்டிஸம் வகையான 'ஆஸ்பர்ஜர்ஸ் சின்ட்ரோம்'  இருக்கலாமென்று நம்பப்படுகிறது!

80களில்  ரஷ்ய விஞ்ஞானிகள் பிறர் மனதைப் படிக்கும் அமானுஷ்ய ஆய்வுகளில் வெற்றிகண்டதாகவும், இதே ஆற்றல்களைக் கொண்டு ஆஸ்துமா மற்றும் இருதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டதாகவும்  அமெரிக்காவின் CIA சில ரகசிய ஆவணங்களை தற்போது பொதுவெளிக்குக் கொண்டுவந்துள்ளது.

அதேபோல் அமெரிக்காவும் ஆமானுஷ்ய ஆற்றல் (சவான்ட்  சின்ரோம்?) கொண்ட குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கடந்த காலத்தை நோக்கி அவர்களைப் பயணிக்கச் செய்து ரஷ்ய  நீர்முழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்தைக் கண்காணித்ததாகச் சொல்வார்கள்.இது போன்ற ஆய்வை மையப்படுத்தி  'The Men Who Stare at Goats'  என்ற  ஹாலிவுட் திரைப்படம்கூட 2009ஆம்  ஆண்டு வந்துள்ளது . 

2050ஆம்  ஆண்டை  இலக்காகக் கொண்டு அமெரிக்க ராணுவம் தனது வீரர்கள் மனதின் மூலமாக (டெலிபதி தொடர்பு!) தங்களுக்குள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வேறு இடங்களிலிருந்து எண்ணத்தால்  எங்கோ இருக்கும் ஆயுதங்களை இயக்குவதற்கும் தேவையான ஆராய்ச்சிகளை தற்பொழுது மேற்கொண்டிருக்கிறார்கள்.





(Article about meuon alien communication required here?)


31. நேரத்தைப் பற்றிய உண்மை தெரியுமா உங்களுக்கு?

நேரம் என்பது நிலையானது (constant) என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நேரம் என்பது புவியீர்ப்பு விசையைப் பொறுத்தே அமையும் என்கிறார்கள். துல்லியமாக நேரத்தைக் காட்டும் ஒரு அணு கடிகாரம் தரைத் தளத்தில் உள்ள ஒரு வீட்டிலும், மற்றொன்று நூறாவது மாடியில் உள்ள வீட்டிலும் இருந்தால், சில ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் மாடியில் இருக்கும் கடிகாரம் கீழ் வீட்டில் இருக்கும் கடிகாரத்தை விட சற்று வேகமாக ஓடிக் கொண்டிருக்குமாம். இதற்கு காரணம் கீழ் வீட்டு கடிகாரம் புவியீர்ப்பு விசையால் அதிகம் இழுக்கப்படுகிறது. ஆனால் 100வது மாடியில் புவியீர்ப்பு விசை சற்றுக் குறைவாக இருப்பதால் அது வேகமாக ஓடிக்கொண்டிருக்கும். 

இதை இப்படி விளக்குகிறேன்! இரட்டையர்களின் ஒருவரான ஸ்காட் கெல்லி என்ற அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்கு 300 மைல்கள் வெளியே இருந்த பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 11 மாதங்கள் பணியாற்றிவிட்டு பூமிக்குத் திரும்பினார். இவர் திரும்பியவுடன்  பூமியில் இருந்த தன்னுடைய சகோதரனை விட 13 மில்லி செகண்டுகள் இளையவராகிவிட்டாராம். இதற்கு முக்கிய காரணம் பூமி சுற்றுவதற்கும் இவர் இருந்த பன்னாட்டு விண்வெளிநிலையம் பூமியை சுற்றிவருவதற்கும் இருந்த ஈர்ப்பு விசையால் ஏற்பட்டக் காலமாறுபாடே! அங்கே அவர்கள் தினமும் கண்டது 16 சூரிய உதயங்கள் மற்றும் அஸ்தமனங்கள். இதற்கு காரணம் இந்த விண்வெளி நிலையம் பூமியை 24 மணி நேரத்தில் 16 முறை சுற்றி வருவதே. அப்படியானால் செவ்வாய் கிரகத்திற்குச் என்றாலோ இல்லை சூரிய குடும்பத்தில் இருந்து இன்னும் அதிகத் தொலைவில் இருக்கும் ஒரு கிரகத்திற்கு சென்று வந்தாலோ நமக்கும் பூமியில் இருப்பவர்களுக்கும் வயதில் இன்னும் அதிக வேறுபாடு ஏற்படும் தானே? 'இன்டர்ஸ்டெல்லார்' ஆங்கிலத் திரைப்படத்தில் விண்வெளிக்கு சென்றுவிட்டு பல ஆண்டுகள் கழித்து வரும் தந்தை மகளைவிட வயதில் இளையவராகி விடுவதாகக் காட்டியிருப்பது உண்மைதானோ? இப்படிப் பார்த்தால் நமது முன்னோர்கள் "நமக்கு நூறு ஆண்டுகள் என்பது வானத்து தேவர்களின் கணக்குப்படி ஒரு நாளுக்கு சமம்"என்று சொன்னது உண்மைதானோ? அப்படியானால் பூமியிலிருந்து நெடுந்தொலைவில் அப்படிப் பட்டவர்கள் வாழ்ந்து கொண்டு பூமியிலிருக்கும் ஒருசிலரிடம் டெலிபதி மூலம் தொடர்பில் இருக்கிறார்களோ? 

CERN  விஞ்ஞானி என்னிடம் கூறியது: மீனாட்சியின் நான்கு வயதில் எனது அண்ணன் அவளிடம்"பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமைப்பின் பெயர் என்ன?" என்று கேட்டதற்கு, அவரது கையைப் பிடித்துக் கொண்டு தனது பிஞ்சு விரல்களால் "CERN"என்று குறிப்பிட்டு அவரை வியப்படையச் செய்ததை முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? ஒரு பொறியியல் பட்டதாரியாக இருந்துகொண்டு "CERN" பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தது என்னுடைய தவறுதான். அதெப்படி 4 வயது குழந்தை தானாகவே தெரிந்திருந்த ஒரு விஷயம் நமக்கு  படித்திருந்தும் தெரியாமல் போய் விட்டதே! என்ற முனைப்பில் இன்று CERNன் ஆராய்ச்சி பற்றி (ஓரளவிற்கு) தெரிந்து கொண்டதோடு நில்லாமல், அங்கே பணிபுரியும் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு  பெண் விஞ்ஞானியின் நட்பும்  ('ஹைப்பர்லெக்சியா' முகநூல் பக்கத்தின் மூலம்) கிடைக்கப் பெற்றேன். அந்த அம்மையாருக்கும் 'சவான்ட் சிண்ட்ரோம்' பாதிப்பு உள்ளது. அவர் மூலக்கூறு மருத்துவம் (molecular medicine) உட்பட நான்கு துறைகளில் PhD பட்டம் பெற்றவர். தனக்கு தினமும் ஏற்படும் 'குண்டலினி எழுச்சி' போன்ற அனுபவங்களை என்னுடன் மனம்விட்டுப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் என்னிடம் கூறியது"நான் ஒரே சமயத்தில் பல பரிமாணங்களில் வாழ்வதாக உணர்கிறேன். எனக்கான அறிவு என்பது நான் சிந்திக்காமலேயே உயர் பரிமாணங்களிலிருந்து தானாக எனக்குள் தரவிறக்கம் (download) செய்யப்படுகிறது" என்று குறிப்பிட்டார். அவரிடம் நமது பிளாக்கிற்காக ஒரு கட்டுரையை எழுதிக் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்.அவரின் நேரமின்மையால் இது தாமதப்பட்டுக் கொண்டே செல்கிறது.பிரபஞ்சத்தைப் பற்றிய ரகசியங்களை நான் சொல்வதை விட ஒரு பெரிய விஞ்ஞானி சொன்னால் அதில் நம்பகத்தன்மை அதிகம் இருக்கும் தானே?!

 மேலும் அவர் உயர் பரிமாணங்களில் தான் உண்மை என்று உணர்ந்த விஷயங்கள் கீழ்நிலைப் பரிமாணங்களிலும் அதே உண்மையாகவே காட்சி தருவதாக என்னிடம் குறிப்பிட்டார் (எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில்  "பத்தாவது மாடியிலிருந்து பார்த்தால் நீல நிறத்தில் தெரியும் ஒரு கார் தரைத் தளத்தில் இருந்து பார்த்தாலும் அது நீல நிற காராகத் தான் தெரியும். ஆனால் அதை நாம் நெருங்க நெருங்க அதன் தோற்றத்தில் மாறுபாடுகளை  உணரலாம்" என்ற ரீதியில் நானாக  ஒரு கருத்தை கற்பனை செய்து கொண்டு தெளிவற்ற வகையில் அவர் கூறியதை புரிந்து கொள்கிறேன்!).ஆனால் எப்படி உயர்நிலைப் பரிமாணங்களிலிருந்து கீழ்நிலைப் பரிமாணங்களுக்கு வர முடியுமோ, அதேபோல் கீழ்நிலைப்  பரிமாணங்களிலிருந்தும் உயர்நிலைப் பரிமாணங்களை எட்டமுடியுமென்று உறுதியாக நம்புகிறேன்.


Wednesday, May 18, 2022

30. குண்டலினி சக்தி!

 குண்டலினி சக்தி தூண்டப் படுவதால் ஏற்படும் விளைவுகள்: யோகம் செய்பவர்கள் அனைவருக்கும் குண்டலினி வசப்படுகிறதா? நிச்சயம் இல்லை! செய்யும் தவம் சித்தி அடைவது வெகு சிலருக்குத் தான்! (இதற்கு 'கர்ம வினை'யே காரணம் என்று சொல்கிறார்கள். அதாவது முற்பிறவியில் 'விட்ட குறை தொட்ட குறை' என்று ஆன்மீகத்தைத் தொட்டவர்களையே இப்பிறவியில் ஆன்மீகம் தழுவிக் கொள்கிறது!).  இது ஒரு சிலருக்கு முதுகுத் தண்டின் அடியிலிருந்து உயிர் காற்றான 'தனஞ்ஜெயம்' கிளம்பிவிடும். ஆனால் அது நடுவில் உள்ள சக்கரங்களைத் (Endocrine System)தாண்டும்போது ஏதாவது ஒரு இடத்தோடு நின்றுவிடும். இது சிலருக்கு அந்த நேரத்தில் அச்சத்தையும், தீய சக்திகள் தன்னை விரட்டுவது போன்ற உணர்வையும், மன அழுத்தத்தையும்  கொடுக்கிறது. இதனால் பித்து நிலைகூட ஏற்படலாம் என்கிறார்கள்.

 அதனால்தான் 'முறையாக ஒரு குருவின் துணையின்றி யோகம் பழகக் கூடாது' என்று சொல்கிறார்கள். அப்படி முறையாகச் செய்பவர்களுக்கு உயிர்க் காற்று ஒவ்வொரு சக்கரமாக ஏற ஏற பேரானந்தத்தையும், அதீத கற்பனையையும், படைப்புத்திறனையும் கூடத் தூண்டலாம். இப்படிப் படிப்படியாக ‌முன்னேறி குறிப்பிட்ட நிலையை அடைபவர்களுக்கு குண்டலினி சக்தி உருவாகும் போது அவர்களே தங்களைப் பிரேதமாகப் பார்த்திருக்கிறார்கள். அதாவது அவர்களின் உயிர் உடலை விட்டுப் பிரிந்து தனித்து இயங்கத் துவங்குகிறது. இதே போன்ற உணர்வு மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்புபவர்களுக்கும் (near death experiences) ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். Netflix OTT தளத்தில் 'Surviving Death' என்ற டாகுமென்டரியில் இதைப் பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார்கள்.

எழுத்தாளர் திரு.பாலகுமாரன்:குண்டலினி எழுச்சி பெற்றவர்களுக்கு பார்க்கும் உலகமே புதுப் பரிமாணங்களுடன் தெரிகிறதாம். 'வேந்தர்' தமிழ்த் தொலைக்காட்சியில் இடம்பெற்ற 'மூன்றாவது கண்' என்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு.பாலகுமாரன் 2015ல் கொடுத்துள்ள பேட்டியில் 1993ஆம் ஆண்டு தனது குரு திருவண்ணாமலை 'விசிறி சாமியார்' என்றழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாரிடம் "இறைவன் எங்கே இருக்கிறான்? எனக்குக் காட்ட முடியுமா?'' என்று இவர் கேட்க, பாலகுமாரனின் முதுகுத் தண்டையும் உடலின் சில பகுதிகளையும் தொட்டு அவரின் குண்டலினியை விழிப்படையச் செய்து அவரை பரவச நிலைக்குக் கொண்டு சென்று இறைவனை காட்டியுள்ளார் யோகி. இதன் முழுக் காணொளியையும் இங்கே பார்க்கலாம். அப்போது தான் கண்ட இவ்வையகம் புதிதாக முற்றிலும் வேறுபட்டதாகத் தெரிந்ததாக சொல்கிறார் பாலகுமாரன். இவர் விளக்குவது உயர்நிலைப் பரிமாணங்களைப் பற்றி என்று புரிந்து கொள்கிறேன். அதாவது சாதாரண மனிதர்களாகிய நாம் காணும் உலகம் நீளம், அகலம், உயரம் என்ற முப்பரிமாணங்களை மட்டுமே கொண்டது. ஆனால் இதே உலகத்தில் குறைந்தது 11 பரிமாணங்களாவது இருக்கலாம் என்று இயற்பியலாளர்களும் விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள்.இதில்

நான்காவது பரிமாணம் என்பதில் 'நேரப் பிழர்வு' (time slip) ஏற்படுகிறது. அதாவது நீங்கள் பார்க்கின்ற உலகத்தில் எதிர் காலம் கடந்த காலம் நிகழ்காலம் எது வேண்டுமானாலும் தெரியலாம். இறந்தவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியலாம்‌. இனி பிறக்கப் போகின்றவர்கள் உங்களுடன் உரையாடலாம். இந்த நான்காவது பரிமாணம் என்பதே ஐந்தாவது பரிமாணத்தின் 'பிம்பம்' தான் என்று சொல்வார்கள். அப்படியானால் மற்ற பரிமாணங்களில் என்னென்ன இருக்கும்? யார் கண்டது? எப்படி விளக்குவது? 

டேனியல் நெமிஸ்:எனக்கு தெரிந்து 'டேனியல் நெமிஸ்' என்ற கொலம்பியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் மற்ற பரிமாணங்களைப் புகைப்படம் எடுக்க இன்ப்ரா ரெட் மற்றும் புற ஊதா (UV) தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு புதிய புகைப்படக் கருவியை தான் கண்டுபிடித்துள்ளதாகவும், அதனால் எடுக்கப்படும் படங்களை அவ்வப்போது முகநூலிலும் பகிர்ந்து வருகிறார்.

இவருடைய புகைப்படங்களில் மனித உருவத்தை ஒத்த உருவங்கள்(humanoid creatures)  பதிவாகின்றன.சில நேரங்களில் இடுகாடு இருக்கும் பகுதிகளில் இதுபோன்ற விசித்திரமான உருவங்கள் மிக அதிகமாகப் பதிவாவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது கண்டுபிடிப்பின் நம்பகத்தன்மைப் பற்றி எனக்குத் தெரியாவிட்டாலும், பிரிட்டிஷ் விண்வெளி வீராங்கனை ஹெலன் ஷர்மன்  "பூமிக்கு அப்பாற்பட்ட வேற்று கிரக உயிரினங்கள் நம்முடன் இதே பூமியில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவை நம்மை போல் கார்பன், நைட்ரஜன் சேர்ந்த கலவையாக இல்லாமல் வேறு புதிய கலவையாகவும் நமது கண்களுக்கு புலப்படாததாகவும் இருக்கலாம்" என்று  சொன்னதை இங்கே ஒப்பிட்டுப் பார்த்தால் வேற்றுக்கிரகவாசிகளோ, ஆவி போன்ற சக்திகளோ, ஏன்! கடவுளே கூட நம்முடன் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு சக்தியும் தனித்தனி பரிமாணங்களில் இயங்குவதாக நினைக்கிறேன். முப்பரிமாண உலகத்தில் மனிதர்களும் மேலும் சில பரிமாணங்களில் ஆவி போன்ற சக்திகளும் அதற்கு மேற்பட்ட உயர் பரிமாணங்களில் கடவுள் போன்ற சக்திகளும் கூட இருக்கலாம். நமக்குள் ஏற்படும் சில உயிர் வேதியியல் (biochemical reactions) மாற்றங்கங்களால் சாதாரண மனிதக் கண்களுக்குப் புலப்படாத விஷயங்களுயும் ஒரு சிலருடைய கண்களுக்கு மட்டும் தென்படலாம். அதில் சிலருக்கு கடவுள் போன்ற உயர் பரிமாணங்களும், சிலருக்கு தீய சக்திகளும் கூட தெரியாதத் தொடங்கலாம். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று நமக்குத் தெரியுமா? அவர் குணமான பின்பு 'நீ யாருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய்?' என்று கேட்டால், அவரால் பதில் சொல்ல முடியுமா? கடவுளைப் பார்த்ததாகச் சொல்பவருக்கும் இதே நிலை தானே? இவை எல்லாவற்றுக்குமே அடிப்படை 'குண்டலினி சக்தி' தனது நிலையிலிருந்து கிளம்புவதே என்று உறுதியாக நம்புகிறேன்.அப்போது நமது விழிப்புணர்வு  (consciousness) சமநிலையிலிருந்து  மாறுபடுகிறது.

 

பூமி அண்டத்தில் உள்ளது. அண்டத்தில் வேறு என்னென்ன உள்ளது?: உங்களது கையை 'வெற்றுக் கை' என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அதையே மைக்ரோஸ்கோப்பின் துணை கொண்டு பார்த்தால் அதில் எத்தனை நுண்ணுயிரிகள் தெரியும்? உங்களது உடலுக்குள் எத்தனை இலட்சம் நுண்ணுயிரிகள் உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்? அவை இதுவே தான் வாழும் உலகம் என்று நினைத்துக் கொண்டிருப்பது உங்கள் உடலைத் தானே? அதேபோல் 'பூமி அண்டத்தில் உள்ளது. அண்டத்தில் வேறு என்னென்ன உள்ளது?' என்ற சந்தேகம் இருப்பதால் தானே பிற கோள்களை ஆராய விண்கலங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்? எனவே  நாம் இன்னும் பார்க்க முடியாத, உணர முடியாத விஷயங்களை முழுதாக ஆராயாது அதில் உண்மை இல்லையென நினைப்பது நிச்சயம் தவறு தானே?


Sunday, May 15, 2022

29. 70 ஆண்டுகளாக உணவும் நீருமின்றி வாழ்ந்த யோகி

 2020ஆம் ஆண்டு முக்தி அடைந்த யோகி பிரகலாத் ஜானி. இவரை 2003ஆம் ஆண்டு அகமதாபாத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் Dr.சுதீர் ஷா தலைமையிலான மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனையில் யோகி பிரகலாத்தை தங்க வைத்து சோதித்தார்கள். இதில் கண்டறியப்பட்ட விஷயங்கள் என்னவெனில் அந்த யோகி தங்கியிருந்த நாட்களில் உணவு உண்ணவில்லை நீரும் அருந்தவில்லை.இதனால் அவர் மலமும் சிறுநீரும் கழிக்கவில்லை. அவரது சிறுநீர்ப்பையில் (bladder) உருவான சிறிதளவு சிறுநீரும் மீண்டும் அவரது உடலாலேயே உறிஞ்சப்பட்டு விட்டது. இதற்கான விடை எனக்கு இணையத்தில் வேறொரு இடத்தில் கிடைத்தது. துருவக் கரடிகள் குளிர்காலத்தில் நீரும் உணவும் உட்கொள்ளாமல் கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை உறக்க நிலைக்கு செல்வதாகப் படித்தேன். இந்த நேரத்தில் கரடியின் சிறுநீரில் உள்ள யூரியாவானது அதன் உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தின் போது உடைந்து நைட்ரஜனாக வெளிப்பட்டு மீண்டும் அதன் உடலில் உள்ள புரசத செல்களை உருவாக்கப் பயன்படுகிறதாம்.


2010ல் மீண்டும் டாக்டர்.சுதீர் ஷா மற்றும் Defence Institute of Physiology & Allied Sciencesஐச் (DIPAS-இது DRDO-எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஒரு அங்கமாகும்) சேர்ந்த 35 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் யோகி பிரகலாத் ஜானியை மீண்டும் சோதித்தார்கள். இம்முறை 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு, வெயிலில் அதிக நேரம் உட்காரச் செய்வது மற்றும் தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். சோதனைகளில் யோகி பிரகலாத்தின் நாடித்துடிப்பு ஒரு விளையாட்டு வீரனைப்போல் அதிகத் துடிப்புடன் இருந்துள்ளது. மேலும் அவரது உடலில் லெப்டின் (இது அதிகம் சுரந்தால் பசி குறையும்) மற்றும் கிர்லின் (இது குறைவாக சுரந்தால் பசி குறையும்) என்ற இரு ஹார்மோன்களின் அளவுகளில் அதிக மாற்றம் தெரிந்துள்ளது. ஆய்வுகளின் முடிவு அறிவிக்கப்படவில்லை என்றாலும், DIPASன் இயக்குனர் டாக்டர்.இளவழகன்  "இந்த ஆய்வு போர்க்களத்தில் நமது வீரர்கள் உணவும், நீரும் இல்லாமல் தாக்குப் பிடிப்பதற்கும், நெடுந்தூர விண்வெளிப் பயணங்களுக்கும், இயற்கைப் பேரிடர்களின் போது மக்களை காப்பதற்கும் அதிகம் பயன்படும்" என்றார்.

 2017ல் IIT- மெட்ராஸ் மாணவர்கள் யோகி பிரகல்லாதின் மூளையை ஆராய்ந்ததில் அவரது பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பயனியல் சுரப்பி ஒரு 10 வயது சிறுவனுக்கு உண்டான அளவிலேயே இருந்ததாக அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். 

'வாலைக்குமரி 10 வயது சிறுமியாகக் காட்சியளிப்பாள்' என்று நாம் முன்பே பார்த்திருந்தோமல்லவா?

பிட்யூட்டரி, பயனியல் மற்றும் மூன்றாவது உச்சிக் குழி சேர்ந்த அமைப்பு தானே 'கண்ணாடி மாளிகை' (crystal palace)? சித்தர்கள் இறைவன் இருக்குமிடமெனக் குறிப்பிட்டதும் இதைத் தானே?! 

யோகி பிரகல்லாதை பக்தர்கள் 'அம்பாஜி'(அம்பாள்) என்று தான் அழைப்பார்கள். 11 வயதில் ஞானம் பெற்றதாக சொல்லும் அவர் வாழ்வின் பெரும்பாலான நாட்களை குகையில் (சித்தர்கள் குகைகளை தேர்ந்தெடுப்பதன் காரணத்தை பின்பு சொல்கிறேன்!) தனிமையில் தியானத்தில் கழித்துள்ளார். ஒரு பெண்ணைப் போல் உடை மற்றும் மூக்குத்தி, வளையல்கள்  போன்ற அணிகலன்களை விரும்பி அணிவார்.

ஆராய்ச்சியாளர்களுக்கு விசித்திரமாக தெரிந்த ஒரு முக்கிய விஷயம் அவரது வாயின் மேல் அண்ணத்திற்கு (upper palate) சற்று மேலே காணப்பட்ட ஒரு விசித்திர ஓட்டை. இதைப் பற்றி குறிப்பிடும் யோகி பிரகலாத் ஜானி ''பராசக்தி எனது தலையில் உள்ள அந்த ஓட்டையின் மூலமாக  எனக்கு அமுதூட்டுகிறாள்.   இதுவே எனக்கு போதும். உணவோ, நீரோ தேவையில்லை"என்று சொல்லியிருக்கிறார்.

இது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் புரிந்ததோ இல்லையோ எனக்கு என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கும் புரியும் என்று நம்புகிறேன்! அதாவது யோகி பிரகலாத் ஜானி தனது யோகத்தாலும், தியானத்தினாலும்  'குண்டலினி சக்தி'யைக் கிளப்ப, அது தலையிலுள்ள மற்ற ஹார்மோன்களுடன் ஒன்று சேர்ந்து கெட்டித் தன்மை கொண்ட அமிர்தமாக மாறியுள்ளது. அதை அவர் கேசரி முத்திரையைப் பயன்படுத்தி நாக்கால் வாயின் மேல் அண்ணத்தில் துளையிட்டு பருகியுள்ளார். அமிர்தத்தைப் பருகுவது பேரானந்தத்தையும், புதிதாய்ப் பிறந்த உணர்வையும் தருமென்றும், மேலும் அது உடலின் ரத்தத்தில் கலப்பதால் உடலிலும் மனதிலும் நிறைய மாற்றங்களை உண்டாக்கும் என்பதை பகுதி 26ல் தெளிவாகப் பார்த்திருந்தோம்.

நான் எனது நண்பன் ரகுவின் மூலம் சந்தித்த கோவில்பட்டியைச் சேர்ந்த எசக்கி சித்தர், அவரது குரு 'பாட்டு சித்தர்' நாராயணசாமியின் மூலம்  தீட்சை பெற்று வாசியோகம் செய்யத் துவங்கிய சில ஆண்டுகளிலேயே திட மற்றும் திரவ உணவுகள் உட்கொள்வதை முழுமையாக தவிர்த்துவிட்டதாகவும், ஆனால் என்றேனும் அன்பர்கள் வாங்கிக் கொடுத்தால் வேண்டாமென்று தவிர்க்காமல் சிறிதளவு பாலோ அல்லது டீயோ மட்டும் பருகி வருவதாகக் கேள்விப்பட்டேன். இதேபோல் நேபாளத்தின் நடுக் காட்டில் 'ராம் பகதூர் போம்ஜன்' என்ற  இளைஞன் உணவும் நீருமின்றி பல மாதங்கள் கடும் தவம் புரிந்து வந்ததாக BBC டாக்குமெண்டரி ஒன்றைக் கண்டேன் (அதே இளைஞன் பின்னர் ஆள் கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை போன்றவற்றுக்காக தேடப்பட்டு வந்தது தனிக் கதை!).


28. சித்தர் வாழ்க்கை முறையும்! ஞானப் பாதையும்! 

 குருகுலக் கல்வி முறை: ஐரோப்பியர்கள் நமது நாட்டிற்கு வருவதற்கு முன் குருகுலக் கல்வி முறை இந்திய துணைக்கண்டம் முழுவதும் இருந்திருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டது போல் கற்றறிந்த ஒரு குருவின் துணை கொண்டு சீடர்கள் சமயம் சார்ந்த கல்வியோடு வாழ்க்கைக் கல்வியான யோகத்தையும் தியானத்தையும் கற்றிருக்கிறார்கள். இவற்றுடன் மருத்துவம், தற்காப்புக் கலை, நாட்டியம், இசை போன்றவையும் கற்பிக்கப் பட்டிருக்கின்றன.

 அகஸ்தியர், போகர் போன்ற  சித்தர்கள் நிறைய மருத்துவ குறிப்புகளை எழுதியிருக்கிறார்கள். இவற்றிலிருந்து தோன்றியது தான் ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும், வர்மக் கலையும். இதுவே சீன தேசத்திற்குச் சென்று 'அக்குபன்சர்' சிகிச்சை முறையாகவும் பரவியது.  'உடலின் பிராண ஓட்டத்தில்  தடை ஏற்படுவதே நோய்க்குக் காரணம்' என்பது தான் அக்குபஞ்சர் சிகிச்சை முறையின் அடிப்படை. நரம்பு மண்டலத்தின் முக்கிய புள்ளிகளை சிறு ஊசிகளால் தூண்டி தடையை நீக்கி ஓட்டத்தை சீராக்க சிகிச்சை அளிக்கிறார்கள். தொடு சிகிச்சை (touch therapy), வர்ம சிகிச்சை போன்றவையும் இதே அடிப்படையில் தான் செயல்படுகின்றன. 

குருகுலக் கல்வி முறையைக் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் தெளிவாக விளங்கும்! அது நமது இன்றைய நடைமுறை ஏட்டுக் கல்விபோல் இல்லாமல் செயல்முறைப் பயிற்சிகளுடன் வாழ்க்கைக் கல்வியாக இருந்திருக்கிறது. சரி, அப்படி சித்தர்கள் என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார்கள்? நான் தெரிந்து கொண்டவரையில் சித்தர்கள் கலைகள், மருத்துவம், அறிவியல், வான் சாஸ்திரம், ஆகம விதிகள், கணிதம் என அனைத்துத் துறைகளிலும் நமக்காக பல முக்கிய குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்கள்.

உதாரணம்:

1).கலைகள்: பரதக் கலையை உருவாக்கியவர் பரத முனிவர். அதேபோல் இந்திய இசை (குறிப்பாக தென்னிந்திய இசை) என்பது அதிக நுட்பங்கள் நிறைந்ததாக கணக்கு வழக்குகளை உள்ளடக்கியது (பர்முடேஷன்-காம்பினேஷன்).

கணித சூத்திரங்கள் சிற்பம், நாட்டியத்திற்கும் பொருந்தும். யோகப் பயிற்சியிலும் தியானத்திலும் சொல்லப்படுவது போல் நாட்டியம் உயிர்ப்புடன் அமைய மனமும் உடலும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பார்கள். அதேபோல் பாடும் போதும், இசைக்கருவிகளை மீட்டும் போதும் கரஒலியை எதிர் நோக்காமல் அடி மனதிலிருந்து வெளிப்படும் இசையே தன்னிகரில்லா சிறப்புடையது.

2). அறிவியல்: சித்தர்கள் ரசவாதம் தெரிந்தவர்கள். பலவகை உலோகங்களையும், வேதிப் பொருட்களையும் கொண்டு எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். இவை மருந்துகள் தயாரிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் முன்பே குறிப்பிட்ட யூடியூபர் திரு.பிரவீன் மோகன் அவர்களின் காணொளிகளில் நமது பண்டைய கோயில்களுக்கும் நவீன அறிவியல் தொழில் நுட்பங்களுக்கும் உள்ள தொடர்புகளை மிக விரிவாக விளக்கியுள்ளார்.மின்சாரம்கூட அகஸ்தியரின் கண்டுபிடிப்புகளில் ஒன்றே என்பார்கள்.இது 'அகஸ்திய சமிதா' என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.‌ இதுவே ஒரு உலோகத்தை மற்றொன்றாக மாற்ற 'இரசவாதம்' (electroplating) செய்யப் பயன்பட்டுள்ளது. இதை 'பாக்தாத் குடுவை' என்றும் குறிப்பிடுவார்கள். 

மேலும் போகர் உருவாக்கிய பழனி நவபாஷாண சிலையில் தொடங்கி எத்தனையோ கோயில்களையும் அதன் கட்டிட முறைகளையும் குறிப்பிடலாம்.

3).வான் சாஸ்திரம்-ஜோதிடம்-கணிதம்: இம் மூன்றும் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையவை.‌ பாஸ்கரர், ஆர்யபட்டர் போன்ற நிபுணர்கள் இங்கிருந்தபடியே செயற்கைக் கோள்களின் உதவியின்றி கணித சூத்திரங்களின் துணை கொண்டு பிரபஞ்சத்தைப் பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் டெலஸ்கோப் உதவியுடன் வானத்தை பார்ப்பதற்கு முன்பே இந்தியர்களின் கோள்களின் நிலை பற்றிய அறிவு, கிரகணங்கள் பற்றிய கணிப்புகள் அனைத்தும் மிகத் துல்லியமாக இருந்துள்ளன. இன்றும் நமது பஞ்சாங்கத்திலும் தினசரி காலண்டரிலும் குறிப்பிடப்படும் கிரஹணம், அமாவாசை, பெளர்ணமி போன்ற தகவல்கள் மிகச் சரியாகவே  உள்ளது.

4).மருத்துவம்: நமது பண்டைய மருத்துவம் மூலிகைகளையும் சில உலோகங்களையும் அவற்றுடன் சேர்ந்த சில சூட்சுமான மருத்துவ முறைகளையும் உள்ளடக்கியது. பித்தம், கபம், வாதம் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டது தான் ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும். சுஷ்ருதர் போன்ற முனிவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சைகளைக் கையாண்டதாக நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

அந்தக் காலத்தில் நாடி பிடித்தே ஒருவரின் பிரச்சனையை எளிதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று நவீன மருத்துவம் பின்பற்றுவதும் இதே முறை தான்.

இன்று கூட தமிழகம் மற்றும் கேரளாவில் பின்பற்றப்படும் சித்தமருத்துவத்தில் கொரோனா சிகிச்சை முறையில் பரிந்துரைக்கப்படும் கபஜுரக் குடிநீர் போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.சுதா சேஷையனே ஒப்புக் கொண்டுள்ளார்.

தாங்கள் கற்ற அனைத்து விஷயங்களையும் தனது சீடர்களுக்கு கற்பித்த தோடு இல்லாமல் பிற்காலத்தில் அவற்றை சரியான நபர்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு ஏடுகளிலும் 'பரிபாஷையாக' (encrypted text)  எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் (அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதற்கு பிறகு வருகிறேன்!). அதனால் தான் இவற்றை மேலோட்டமாகப் படித்தால் ஒரு பொருளும், உள்ளர்த்தம் புரிந்து படித்தால் வேறு பொருளும் கிடைக்கும். மேலோட்டமான பொருளை மட்டும் வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் எதிலும் வலுவான ஆதாரத்தை எதிர் நோக்கும் நாத்திகர்களுக்கு நகைப்பையே உண்டாக்கும்.

அழியாச் செல்வம் கல்விச் செல்வம்: இது மட்டுமில்லாமல் தாங்கள் கற்ற கல்வியை (அறிவை) தங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் தியானமும் யோகமும் செய்து பிராண சக்தியின் துணைகொண்டு சேமித்து வைத்திருக்கிறார்கள். இதுதான் இன்றைய மருத்துவர்கள் சொல்லும் மூளையைத் தவிர மற்ற உறுப்புகளிலும் நினைவுகளை சேமித்து வைக்கலாம் என்று குறிப்பிடும் 'செல்லுலர் மெமரி' என்று முன்பே கூறியுள்ளேன். மூளையின் ஆக்சிஜன் அளவு குறையும்போது மனிதன் சுய நினைவை இழக்கிறான். அதேபோல் பிராண சக்தியின் துணைகொண்டு அடையும் அதீத விழிப்புணர்வு (higher level of consciousness) அவனை இறைவனிடம் சேர்க்கிறது.எனவே உடலின் ஆக்ஸிஜன் அளவிற்கும் மனிதனின் விழிப்புணர்விற்க்கும் (consciousness) உள்ள நெருங்கிய தொடர்பு நிச்சயம் ஏற்கக் கூடியதே. இதை சித்தர்கள் தெளிவாக உணர்ந்தே பிராணசக்தியைத் தூண்ட யோகமும் தியானமும் செய்திருக்கிறார்கள். 

நான்  குறிப்பிட்டதைப்  போல் உடலாலும் மனதாலும் பண்பட்ட நிலையை அடைந்த ஒருவரே  (1).யோகி (யோகம் செய்பவர்) (2).சித்தர் (யோகம் சித்தி அடைந்தவர்கள்), (3).ஞானி (முழுமையாக ஞானமும் அடைந்தவர்). தனக்கு வேண்டியபடி உடலில் ஹார்மோன் அளவுகளை மாற்றிக்கொண்டு, அன்பை அடிப்படையாகக்கொண்டு கருணையின் வடிவமாக மாறுவது. இதை 'அன்பே சிவம்' 'கருணையே தேவன்' என்றும் சொல்லலாம் அல்லவா? இதில் கலக்கும் திரவங்கள் (ஹார்மோன்கள்) எல்லாமே Cerebrospinal Fluid எனும் 'வாலை'தான். காகபுஜண்டர் பாடிய 

"சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்

சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்

தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்

தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதி

சொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசி

சோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்

நில்லுமே மூலதலம் வாசிகொண்டு

நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்".

பாடலின் பொருள் இப்பொழுது விளங்குகிறதா?. இவற்றுடன்  முதுகுத் தண்டின் அடியிலுள்ள 'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க் காற்றும் படிப்படியாக மேலெழும்பி 'குண்டலினி சக்தி'யாக மாறி மூன்றாவது உச்சிக் குழியை வந்தடைகிறது. இது மூளையிலுள்ள மற்ற ஹார்மோனாகளான ஆக்ஸிடோசின் மற்றும் வாசோபிரசினுடன் சேர்ந்து திடப்பொருளாக மாறத் தொடங்குகிறது. இதுதான் 'அமிர்தம்'. இதை வைத்து மறைபொருளாக சொன்ன கதைதான் 'பாற்கடலைக் கடைய அமிர்தம் வெளிப்படுவது'. இதில் வாலை தான் பாற்கடல். 'வாசுகி பாம்பு' என்பது வாசி(காற்று), தேவர்கள் என்பது இடங்கலை நாடி(கேது)-இது  ஆனந்த சுரப்பியில் முடிகிறது (positively charged- நேர்மறை சக்தி). அசுரர்கள் என்பது பிங்கலை நாடி (ராகு)-இது பிட்யூட்டரி சுரப்பியில் முடிகிறது (negatively charged-எதிர்மறை சக்தி). இந்த இரண்டு பாம்புகளும் பின்னிக் கொண்டு  செல்லும் இடங்கள் தான் சக்கரங்கள் (chakras). ஒவ்வொரு சக்கரமும் தூண்டப்படும்போது மனிதனின் சிந்தனையும் ஆற்றலும் விழிப்படைகின்றன. இவற்றின் நடுவே நேர்கோட்டில்  செல்வது தான் சுழுமுனை நாடி(neutrally charged). எனவே குண்டலினி எழுச்சியை உடலில் நிகழும் 'மின்காந்த உயிர்  வேதியல் மாற்றம்' என்றும் சொல்லலாம் (electronic magnetic bio-chemical reaction).

இதை மேற்கொண்டு இப்படியும் சொல்லலாம்:

  •  சிவன் என்பது சூரிய கலை (பிங்கலை)
  • பார்வதி என்பது சந்திர கலை (இடங்கலை)
  • விநாயகர் என்பது மூல அக்னி (சுழுமுனை நாடி)

சிவன்-கங்கை-பார்வதி கதைக்கு நான் சொல்லும் விளக்கம்:

சிவன்- அதாவது மூளை (திடப் பொருள்). Static energy!

கங்கை-சிவன் தனது ஜடாமுடிக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு பெண்- அதாவது திரவ சக்தி! (dynamic energy). இது மூளையின் 1 மற்றும் 2ஆம் உச்சிக் குழிகளில் சுரக்கும் சுத்தமான வாலை (CSF).

பார்வதி (dynamic energy)- இவள் கொண்டுவரும்  'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க்காற்றுடன் மற்ற சுரப்பிகள்(இவை ஒவ்வொன்றுமே சக்தியின் வடிவம் தான்!) வெளியிடும் ஹார்மோன்களும், கங்கை (வாலை)யுடன் ஒன்று சேர 'பராசக்தி'யாக (குண்டலினியாக) அதாவது அனைத்துப் பெண் தெய்வங்களுக்கும் (திரவ சக்திகளுக்கும்) தலைவியாக உருவெடுக்கிறாள்.  அனைத்து சக்திகளும் இவளுள் அடக்கம்!

அப்படியானால் நாம் கல்விக்கும், செல்வத்திற்கும், வீரத்திற்கும் தனித் தனி பெண் கடவுள்களை வழிபடக் காரணம்? மேற்கண்டவற்றுள் குறிப்பிட்ட சக்தியைத் தரும் ஹார்மோன் மட்டும் தூண்டப்பட்டு நமக்கு நன்மை பயக்கவேண்டும் என்பதால்தானோ?

மேற்சொன்ன இதே விஷயங்களுக்கு இணையாக பைபிளில் எவ்வாறு மறைபொருளாக சில கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதை ஹாலிவுட் நடிகர் ஜிம் கெர்ரி ஒரு போட்டியில் சொல்கிறார் (இதையே  நான் "யோகம் உடலுக்கு! தியானம் மனதுக்கு!" பகுதியில் தெளிவாக விளக்கியுள்ளேன்). பேட்டி எடுப்பவர்களுக்குத் தான் அது ஏதோ நகைப்பிற்குரிய விஷயமாகத் தெரிகிறது போலும். இதனால் தான் விஷயம் தெரிந்தவர்கள் அத்தனை எளிதாக பிறரிடம் தனக்கு எல்லாம் தெரியும் என்பதை காட்டிக் கொள்ளமாட்டார்கள். எனக்கும் அந்த பக்குவம் வந்திருந்தால் நான் இந்த ப்ளாக்கை எழுதியிருக்கமாட்டேனல்லவா?! நான் ஒரு அரைவேக்காடு என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை. இங்கே மற்றொன்றையும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்! இந்த பிளாக்கின் தலைப்பு 'கற்றது கடலளவு' என்பது நான் கற்றதைப் பற்றியல்ல! என் மகள் மீனாட்சியின் அறிவைப் பற்றி தான் குறிப்பிடுகின்றேன். நான் இங்கே தெரிந்துகொண்டு சொல்வதெல்லாம் அந்தக் கடலின் ஒரு துளியைப் பற்றி தான். நான் இன்னும் அவளால் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!

போப் பிரான்ஸ்ஸிடம் எதையோ சொல்ல விரும்பும் ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகள்: கடந்த சில ஆண்டுகளாகவே போப் பிரான்சிஸ் அவர்கள் பொதுமக்களிடம் உரையாற்றும் போதெல்லாம் எங்கிருந்தோ வந்து மேடை ஏறிவிடும் ஆட்டிசம் பாதிப்புடன் பேச்சு வராத குழந்தைகள், மேடையில் தங்கள் மனம் போன போக்கில் விளையாடுவதும், திடீரென  போப் பேசும்போது அவரை இடைமறித்து ஏதோ சொல்ல விரும்புவது போலும் உள்ளது. அவர்கள் என்ன கூற விரும்புகிறார்கள்? அவரும் இன்முகத்துடன் "அந்தக் குழந்தைகளை யாரும் தடுக்க வேண்டாம். அவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக உள்ளது. அவர்களுக்கு மனதில் சரி என்று பட்டதை செய்யும்போது அந்த சுதந்திரம் நமக்கு இல்லையே என்று ஏங்கத் தோன்றுகிறது" என்று கூறுகிறார்.


எனது பார்வையில் ஞானப்பழக் கதைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஞானப்பழக் கதையில் முருகன் ஞானப் பழத்தினை அடைவதற்காக உலகெல்லாம் சுற்றி வருகிறார் (இது நாம் ஐம்புலன்களின் மூலம் பெறும் உலக அறிவைக் குறிக்கிறது!). ஆனால்

வேழமுகத்தோன் விநாயகனோ எங்கும் செல்லாமல் தனது தாயையும் தந்தையும் சுற்றிவந்து ஞானப்பழத்தை பெறுகிறார். 

இதில் தாய் என்பது சக்தி (திரவ  வடிவமான வாலை!)

தந்தை என்பது சிவம் (திட வடிவமான மூளை!). அதாவது நீங்கள் படித்தோ, உலகைச் சுற்றியோ ஐம்புலன்களின் துணைகொண்டு (sensory perception) அனுபவத்தால் பெறக்கூடிய அறிவை, இருக்கும் இடத்தில் இருந்தே தாயையும் தந்தையையும் வேண்டி தியானித்து யோகத்தில் ஆழ்ந்தால் ஞானமாகப் பெறலாம். அதாவது 'உடல் தான் கோவில்! உங்கள் உள்ளமே இறைவன்!'.இதை உணர்ந்தவர்களுக்கு  அனுபவ அறிவோ, ஏட்டுக் கல்வியோ தேவையில்லை என்பதே இதன் உட்பொருள்.


27. சித்தர்கள் யார்? யோகிகள் யார்? ஞானிகள் யார்?

யோகக் கலையைப் பயிற்சி செய்பவனே 'யோகி'. யோகத்தின் மூலம் பலனை முழுவதுமாக அடைந்தவனே 'ஞானி', 'சித்தன்' என்று நான் பகுதி 21-லேயே  கூறியுள்ளேன். 

நான்  புரிந்து கொண்ட வரையில் நம்மைப்போல் மனிதர்களாக பிறப்பெடுக்கும் சிலர் பிறந்தது முதலே மிகுந்த அறிவோடும் கற்காமலேயே அனைத்தையும் அறிந்தவர்களாக, முக்காலமும் தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் (இருக்கிறார்கள்).இவர்களை நான் பிறவியிலேயே சவான்ட்டாக (Savant) மற்றும் ஹைபர்லெசியாவுடன் பிறந்தவர்கள் என்பேன். இதில் நான் ஹைபர்லெசியாவையும் சேர்த்தே குறிப்பிடக் காரணம் பெரும்பாலான சித்தர்கள் மற்றும் ஞானிகள் பிறர் கற்பிக்காமலேயே பல மொழிகளையும் அறிந்திருக்கும் காரணத்தினால் தான்.

இதில் நான் குறிப்பிடும் அனைத்து விஷயங்களையும் அப்படியே ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுயவிருப்பம். எனது கருத்தால் பிறரை திசை திருப்புவது எனது நோக்கமல்ல.நமது அறிவிற்குப் புலப்படாத  விடயங்களை பொய்யெனக் கருதாமல் முடிந்தவரையில் உண்மையை அறிய முயற்சிக்கிறேன் .

சவான்ட் சிண்ட்ரோம் மற்றும் ஹைபர்லெசியா பிரிவு#1 (பேச்சு தாமதம் மற்றும் 'ஆட்டிசம்' அறிகுறிகள் இல்லாது பிறந்த மகான்கள்):

உதாரணம்#1: ராமலிங்க அடிகள்(எ) வள்ளலார். சிறுவயதிலேயே இறை பக்தி கொண்டவராக பிறர் கற்பிக்காமலேயே ஞானம் பெற்றவராக இருந்திருக்கிறார். வள்ளலாரின் தியானமுறையும் முற்றிலும் மாறுபட்டதாக முழு இருட்டில் இல்லாமல் ஒரு கண்ணாடியின் முன்பு விளக்கை வைத்துப் பார்த்தபடி தியானம் செய்திருக்கிறார். இறுதியாகப் பூட்டிய அறைக்குள் இருந்த வள்ளலார் ஜோதியில் ஐக்கியமானார் என்பதுடன் அவரது வாழ்க்கை வரலாறு முற்றுப் பெறுகிறது.

இப்படி இறைவனோடு ஐக்கியமாவதை  புத்த  மதத்தில்  'வானவில் உடல்'  என்பார்கள். பிறகு இதைப்பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.


உதாரணம்#2: 'மகாபெரியவா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட காஞ்சி சங்கர மடத்தின் 'சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்'. இளம் வயதிலேயே காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக ஆனவர். இவர் பெரும்பாலும் பிறருடன் பேசுவதைப் தவிர்த்து மெளனவிரதம் கடை பிடித்திருந்திருக்கிறார். இதனால் தான் இவருக்கு 'டெலிபதி' போன்ற சக்திகள் கை வரப்பட்டதாக நான் உணர்கிறேன். இன்றும் பெரும்பாலான பிராமணக் குடும்பங்களில் (குறிப்பாக 'ஐயர்' பிரிவில்)  இவரைப் பற்றிய கதைகளும் தெய்வீக அனுபவங்களும் பெருமதிப்புடனும் பக்தியுடனும் பகிரப்படும். அப்படிக் குறிப்பிடும் ஒவ்வொருவரும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் மட்டுமே ஏதோ தனிப்பட்ட முறையில் அவர் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்ற ரீதியில் சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது எப்படி நடக்கிறது என்பதை எனது குடும்பத்திலிருந்தும் மேலும் சில உதாரணங்களின் மூலமும் சொல்ல விரும்புகிறேன்.

காஞ்சிப் பெரியவர் பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் முகாமிட்டிருந்த போது அவரை தரிசிக்க எனது பாட்டி பெருங்கூட்டத்தினூடே சென்றிருக்கிறார் (அதே நாளில் எனது தாத்தா அவருடைய 'பெப்டிக் அல்சர்' பிரச்சனைக்காக அவரது மாமனார் டாக்டர்.ஸ்வர்ணமணியுடன்  மதுரைக்கு மேல்சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்). எனது பாட்டி  பெரியவரை தொலைவிலிருந்து தரிசித்தபோது அவர் தனது கண்களை மூடியபடி தியானத்தில் இருந்திருக்கிறார்.திடீரெனக் கண்களைத் திறந்தவர் எங்கோ கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த எனது பாட்டியை நோக்கி தன்னருகே வரச்சொல்லி "டாக்டர்.ஸ்வர்ணமணியின் மகள் தானே நீ? உனது கணவரின் உடல்நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவருக்கு ரணசிகிச்சை(ஆப்ரேஷன்) தேவைப்படாது"என்று  சொல்லி குங்குமமும் பழங்களும் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பியிருக்கிறார். எனது பாட்டி தான் இன்னாருடைய மகள் என்று அவரிடம் சொல்லவில்லை. தனது கணவரின் பிரச்சனைக்கு தீர்வும் கேட்கவில்லை. இது நடந்த சில ஆண்டுகளில் மீண்டும் ஒருமுறை பெரியவர் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்.பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த எனது தாத்தா மாலை வேளையில் வேலையெல்லாம் முடிந்த பிறகு பெரியவரை தரிசிக்கச் சென்றிருக்கிறார்.

அவரைக் கண்ட பெரியவர் "என்ன ராமச்சந்திரன்! ஸ்கூல்ல இன்னைக்கு வேலைப்பளு அதிகமோ? அதனால் தான் வரத் தாமதமாகிவிட்டதோ?"என்று கேட்டபடி ஆசீர்வதித்து எனது தாத்தாவை அனுப்பி இருக்கிறார். எனது தாத்தாவின் பெயரும் தொழிலும் அவருக்கு எப்படித் தெரியும்?வேலைப்பளு அதிகம் என்று பெரியவரிடம் சொன்னது யார்?

இதேபோல் 'பெரியவா புராணம்' என்ற யூடியூப் சேனலில் பிலாஸ்பூர் சுவாமிகள் தனது சிறுவயது கண் பார்வைப் பிரச்சனையைப் பெரியவர் தீர்த்து வைத்தது. மேலும் தனக்கு சிகிச்சை அளித்த ரஷ்ய மருத்துவர் தன்னிடம் சொன்னதை எங்கோ இருந்த  காஞ்சிப் பெரியவர் பிறகு மேற்கோள் காட்டியது போன்ற சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.இதுதவிர மறைந்த நடிகர் திரு. வினுசக்கரவர்த்தி அவர்கள் காஞ்சிப்பெரியவருடன் தனக்கு ஏற்பட்ட திடீர் தெய்வீக அனுபவம் மற்றும் அந்த சமயத்தில் ஏற்பட்ட நேர மாற்றம் போன்றவற்றை மிக யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.இந்நிகழ்விற்கு முன்பு வரை இவருக்கும் பெரியவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதாம்!

இது நான் நாளிதழில் படித்த செய்தி!

அறுபது- எழுபதுகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாக இருந்த பிரபல இசையமைப்பாளரின் மகன் அன்றைய 'ஹிப்பி' இயக்கத்தில் சேர்ந்து  வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், இதனால் மனமுடைந்த இசையமைப்பாளரும், அவரது மனைவியும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் மகனை கண்டுபிடித்து தர உதவி கோரியதாகவும், அவர் உடனே காஞ்சி பெரியவரை சந்தித்து அவரிடம் முறையிடும்படி சொல்லியிருக்கிறார். காஞ்சிமடம் சென்ற இசையமைப்பாளரும் அவரது மனைவியும் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்து தங்கள் பிரச்சனையைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களை ஆசீர்வதித்த பெரியவர் 'உங்கள் மகன் விரைவில் வீடு வந்து சேருவான்' என்று சொல்லியிருக்கிறார். இது நடந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே அவர்களின் மகன் மனம் மாறி  தானாகவே வீடு திரும்பியிருக்கிறார்!

"சேலம் குட்டி சாமியார்" பரணீதர ஸ்வாமிகள் (எ) 'நெரூர்' ஸ்ரீவித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள்: பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழக செய்தி சானல்களில் 'குட்டி சாமியார்' என்ற பெயர் அடிபட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். எட்டு வயது சிறுவன் காவி உடை அணிந்து ஆன்மீக விஷயங்களைக் கரைத்துக் குடித்தவராக இருந்தது 'ஆம்! இல்லை!' என்ற விவாதங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. அந்த சமயத்தில் அவரின் தாயாரின் பேட்டியை ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் படித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த அம்மையார் தனது மகனுக்கு சொல்லிக் கொடுக்காமலேயே அனைத்தும் தெரிந்திருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் குட்டி சாமியாரை தன்னை சந்திக்க வரச் சொன்ன காஞ்சி ஜெயேந்திரர், அந்த சந்திப்புக்குப் பின் அளித்த பேட்டியில் "அந்தக் குழந்தை பூர்வ ஜென்ம நினைவோடு பிறந்த குழந்தை" என்று சொன்னது எனது நினைவுக்கு வருகிறது. இன்று புகழ் வெளிச்சம் தன் மீது படாமல் தானுண்டு தனது இறைப் பணி உண்டென கரூரின் அருகே 'நெரூர்' என்ற ஊரில் அமைதியாக தனது மடத்தில் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்து வருகிறார் ஸ்ரீவித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள்.

சவான்ட் சிண்ட்ரோம் மற்றும் ஹைபர்லெசியா பிரிவு#2:                           (பேச்சு தாமதம் மற்றும் ஆட்டிசம் போன்ற  அறிகுறிகளுடன் பிறந்த மகான்கள்):

கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவி மாயம்மா: கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் பித்து பிடித்தவர் போல் காட்சியளித்து தெரு நாய்களின் கூட்டத்துடன் சுற்றித் திரிந்தவர் தான் தேவி மாயம்மா.அவர் செய்த சித்து வேலைகளைப் பற்றி இன்றும் சொல்பவர்கள் உண்டு.‌ அவரைப் பற்றி நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பிரபல போலீஸ் அதிகாரி ஒரு வாரப் பத்திரிகையில் கட்டுரை எழுதியது என் நினைவிற்கு வருகிறது. தனது தந்தையிடம் மாயம்மாவைப் பற்றி அவர்  சொல்ல, அவரின் தந்தையோ தான் குழந்தையாக இருந்தபோதே 'மாயம்மா' என்ற பெயரைக் கேள்விப் பட்டதாக பதில் சொல்ல, மாயம்மாவின் உண்மையான வயது, அவர் எங்கிருந்து வந்தார் போன்ற விஷயங்களை அறியமுடியவில்லை என்பன போன்ற விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

மாயம்மா தனது கை, கால் என்று ஒவ்வொரு உறுப்பாக தானே கழட்டி வைத்து 'நவகண்ட யோகம்' (உடலை 9 துண்டுகளாக ஆக்குவது!) செய்வாராம். மீண்டும் பிரித்த பாகங்களை தானே சேர்த்து வைத்துக் கொள்வார் என்றும் சொல்வதுண்டு. அதாவது உயிருடன் இருக்கும்போதே உடல் வேறு உயிர் வேறாகப் பிரித்தவர் என்பார்கள்.

எனது குரு ஆற்காடு திப்பு மஸ்தான் அவ்லியா!

 'அவர் உனக்கு குருவா?' என்று‌ என்னை சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூட கேட்பதுண்டு. அவர்களின் முக்கிய சந்தேகம் நான் மதம் மாறிவிட்டேனோ என்பதே. நான் எந்த மதத்திற்கும் மாறவில்லை.மதத்தையும் பெற்றோரையும் நாம்  தேர்ந்தெடுப்பதில்லை. அவை தானாகவே அமைகின்றன. என் மகள் பிறப்பதற்கு முன்புவரை எந்த நம்பிக்கையும் பெரிதாக இல்லாதிருந்த நான் இன்று மதவாதியல்ல! ஆன்மீகவாதி!- இதுவே எனக்கு மிகத் தாமதமாகத் தான் புரிந்தது. மேலும் எனது குருவின் படமோ உருவமோ குறிப்பிட்ட வழிபாட்டு முறையையோகூட‌  நான் பின்பற்றத் தேவையில்லை.அவரை நான் என்றுமே மனதில் நினைத்துக் கொள்கிறேன். அதுவே போதும். பார்க்க வேண்டும் என்று தோன்றும்போது காரில் குடும்ப சகிதம் ஆற்காட்டுக்கு ஒரு நடை சென்றுவிட்டு வருவேன்.‌ எனக்கு இதுவே சிறந்த பக்தி என்று தோன்றுகிறது.

ஆற்காடு திப்புமஸ்தானின் வரலாற்றைப் பார்க்கும்போது, அவர் 1750ல் திப்புசுல்தான் பிறக்கும் முன்பே அதே ஆண்டு இறந்திருக்க வேண்டும். அதனால் தான் நான் சென்ற 2017ல் அவருக்கு 267வது சந்தனக்கூடு‌ விழா ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் 1761ஆம் ஆண்டு திப்புவின் தந்தை ஹைதர் அலி (அன்றைய பெங்களூரின் ஜாகீர்தார் மற்றும் மைசூர் உடையார் சாம்ராஜ்ஜியத்தின் தளவாய்) பெங்களூரின் கலாசிபாளையம் மண் கோட்டையைக் கற்கோட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தபோது, அங்கே கல் சுமந்து கூலி வேலை செய்த மூன்று ஆண்கள் மட்டும் பணம் ஏதும்பெற்றுக் கொள்ளாமல் அங்கிருக்கும் மசூதியில் தங்கியிருந்துள்ளார்கள். அவர்களை கண்காணிக்க ஹைதர் தனது மைத்துனரை அனுப்பியுள்ளார். மூவரையும் பின் தொடர்ந்த அவருக்கு மசூதிக்குள்ளே அவர் கண்ட காட்சி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளே சென்றதோ மூன்று பேர். ஆனால் அங்கே இருந்ததோ மனித உடலின் இரு துண்டுகள் (இதுவும் மாயம்மா செய்த நவகண்ட யோகம் தானோ?!) மற்றும் அதைக் காவல் காக்கும் ஒரு நாய். பின்னர் தெரியவந்தது என்னவெனில் அந்த மூவர் திப்பு மஸ்தான் அவ்லியாவும் அவரது சகோதரர்கள் மாணிக் மஸ்தான் மற்றும் தாவாகல் மஸ்தானென்று. மூன்று பெயர்களிலும் 'மஸ்தான்' வருவதால் அவர்கள் 'இறைப் பித்தர்கள்' என்று பொருளாகிறது.'இந்த  சம்பவத்திற்கு 11 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்த திப்புமாஸ்தான் அவ்லியா அங்கு எப்படி தோன்றினார்?' என்ற கேள்விக்கு இன்றுவரை எனக்கு வரலாற்றில் பதில் கிட்டவில்லை.

சேஷாத்ரி சுவாமிகள்: திருவண்ணாமலை ரமண மகரிஷியுடன் மிக நெருக்கமாகப் பழகி, அவருடன் ஆன்மீகப் பாதையில் பயணித்த மகான் தான் "சேஷாத்ரி சுவாமிகள்". இவரது வரலாற்றைப் பார்க்கும்போது ஆட்டிஸம் உள்ளவர்களுக்கு இருப்பதுபோல் சில பிரச்சனைகளுடன் மிகப் பெரிய மகானாக வாழ்ந்தவர் என்றே சொல்ல வேண்டும்.‌இறுதிவரை இவருடைய நடவடிக்கைகள் எளிதில் கணிக்க முடியாததாக இருந்திருக்கிறது.

உதாரணம்: இவர் சிறுவயதில் தனது தாயுடன் கடைத் தெருவிற்குச் சென்றால் முன் பின் அறியாத ஒருவரின் பொம்மைக் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த கிருஷ்ணர் பொம்மையை எடுத்து விளையாடியதாகவும், குழந்தை தானேயென்று கடைக்காரரும் பொம்மையை வைத்துக் கொள்ளெனக் கூறியிருக்கிறார்.அதே நாளில் அந்த வியாபாரியின் அன்றைய வருமானம் பெருக, இந்த விஷயம் ஊரெங்கும் பரவ, 'தங்கக் கை' என்ற அடைமொழியுடன் சேஷாத்ரி சுவாமிகள் அழைக்கப்பட்டிருக்கிறார்.

 இது மீனாட்சியின் சில செயல்பாடுகளை எனக்கு நினைவூட்டுகிறது. சூப்பர் மார்க்கெட்டுக்கு அவளுடன் சென்றால் அங்கிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் சலவை டிடர்ஜெண்ட் பாட்டில்களை நேர்கோட்டில் அடுக்கிவைத்து அழகு பார்ப்பாள். சில சமயங்களில் முன் பின் தெரியாதவர்களைக் கண்டதும் அவர்களுடன் ஒட்டிக் கொள்வதும்,மால் போன்ற இடங்களில் நாங்கள் பாப்கார்ன் வாங்குவதற்குள் அருகிலிருப்பவர்களிடமிருந்து பாப்கார்னை கூச்சமில்லாமல் எடுத்து உண்பதும் இன்றுவரை  மீனாட்சியால் மாற்றிக் கொள்ளமுடியவில்லை.‌  இதில் எங்களுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டாலும் சம்மந்தப்பட்டவர்கள் அவளைத் துளியும் தவறாக நினைத்ததில்லை. சிலர் "குழந்தை தானே! அவளை அவள் போக்கில் விட்டுவிடுங்கள்" என்று எங்களை‌ தான் கடிந்து கொள்வார்கள். மீனாட்சியும் இப்படி எல்லோரிடமுமா நடந்து கொள்கிறாளா? இல்லை! இவர்கள் தன்னை 'உள்ளது உள்ளபடியே ஏற்கக் கூடியவர்கள்' என்பதை (டெலிபதி மூலம்!) நன்கு தெரிந்து தான் ஒரு சிலரிடம் மட்டும் இப்படி நடக்கிறாள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அதேபோல் தான் எழுதுவதும்! எல்லோரிமும்  அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டால் அவர்கள் மனதில் நினைப்பதையும், நடந்தது, நடக்கப் போவதையும் எழுதிவிட மாட்டாள்.இப்பொழுது புரிகிறதா பெற்றோராக நாங்கள் படும்பாடு? எல்லாமே தெரிந்திருந்தாலும்  'ஒன்றுமே தெரியாது!' என்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கக் கூடிய ஒரு அதிபுத்திசாலிக் குழந்தையைக் கையாள்வதில் உள்ள சிக்கலை?!

இவளது அன்பு வலையில்  வீழ்ந்தவர்கள் இவள் தங்களது கனவில் வருவதாகச் சொல்வது நாங்கள் அடிக்கடி கேள்விப்படும் ஒரு விஷயம்.

ஹைபர்லெசியா பிரிவு#3 (பேச்சு தாமதம் மற்றும் ஆட்டிசம் போன்ற  அறிகுறிகள் இளம்வயதில் மட்டும் தென்பட்ட  மகான்/யோகி): 

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து பின்னாளில் தர்மபுரம் ஆதீனத்தின் குருமஹா சன்னிதானமான குமரகுருபர சுவாமிகள். இவர் ஐந்து வயது வரை பேசாதிருந்திருக்கிறார். கவலையுற்ற இவரது பெற்றோர் இவரை திருச்செந்தூர் அழைத்துச் செல்ல, முருகனின் சன்னிதியில் பேசியதோடு 'கந்தர்க் களிவெண்பாவே' பாடியிருக்கிறார். இது நடந்த சில ஆண்டுகளிலேயே மதுரை மீனாட்சிக்கு 'பிள்ளைத் தமிழ்' இயற்றியுள்ளார். இதையெல்லாம் பிறர் கற்றுக் கொடுத்து எழுதியதா? 'நிச்சயம் இல்லை!'  என்பதை உறுதியாகச் சொல்வேன் நான்.  

ஜித்து கிருஷ்ணமூர்த்தி: சென்னை பெசன்ட் நகர் 'பிரம்ம ஞான சபையில்' (Theosophical Society) வளர்ந்த சிறுவன் கிருஷ்ணமூர்த்தியைக் கண்ட  சார்லஸ் வெப்ஸ்டர் லீட்பீட்டர் அந்த சிறுவனைச் சுற்றியிருந்த ஒளிவட்டத்தை(aura) உணர்ந்தார். அவன் சிறந்த ஆன்மீகவாதியாகவும் கடவுள் மைத்ரேயனின் (பிரம்மஞான சபையைப் பொறுத்தவரையில் இவரே சர்வ வல்லமை பொருந்திய கடவுள்!) வாகனமாக விளங்கும் தகுதி உடையவன் என்றும் கணித்தார். ஆனால் அந்த சிறுவனோ ஏதும் அறியாதவனாக தன்னுடைய உலகத்திற்குள் தனித்து வாழ்ந்து வந்திருக்கிறான்.  ஆட்டிஸ வர்ணனை சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு கனகச்சிதமாகப் பொருந்தும். அன்னிபெசன்ட் அம்மையாரின் தத்துப் பிள்ளையாக மாறிய ஜித்து கிருஷ்ணமூர்த்தி பின்னாளில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவாளராகவும் தத்துவமேதையாகவும் விளங்கி சார்லஸ் வெப்ஸ்டரின் கூற்றை உண்மையாகக்கினார்.‌

ஆனால் ஜித்து பின்னாளில் பிரும்மஞான சபையிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொண்டு  செயல்பட்டது தனிக் கதை.