Thursday, May 19, 2022

32. CERN சொல்லப் போகும் நியூட்ரினோ பற்றிய ரகசியம்!

 சரி, இனி CERNஐ பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். தங்களது நிறுவனத்தின் வாசலில் ஒற்றைக் காலைத் தூக்கி பிரபஞ்ச நடனமாடும் (cosmic dance) நடராஜரின் சிலையை வைத்திருக்கும் அந்த பன்னாட்டு அமைப்பில் இந்தியாவும் ஒரு உறுப்பினரே. 1954ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பிரபஞ்ச வெடிப்பைப் பற்றி புரிந்து கொள்வதற்காக பிரபஞ்சத்திலிருந்து பூமியை நோக்கி (நிற்காமல் அண்டத்திலிருந்து தொடர்ந்து) வந்து கொண்டே இருக்கும் 'நியூட்ரினோ' என்ற எடை இல்லாத அடிப்படைத் துகளான பிரபஞ்சத் துகளைப் பற்றி தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது எங்கிருந்து உருவாகிறது? இது 'சூப்பர் நோவா' என்று அழைக்கப்படும் அதீத நிகழ்வான ஒரு முதிர்ந்த நட்சத்திரப் பெரு வெடிப்பின் போது உருவாகி இறந்த அந்த நட்சத்திரத்தின் 99% ஆற்றலைக் கடத்தும் தூதுவனாக செயல்படுகிறது (இதை நான் இறந்த அந்த நட்சத்திரத்தின் 'ஆன்மா' என்று புரிந்து கொள்கிறேன்!).


பூமிக்கு அடியில்  27 கிலோமீட்டர் நீளத்திற்கு ராட்சக் குழாய்களை நிறுவி உலகின் மிகப் பெரிய துகள் முடுக்கியை (particle accelerator) உருவாக்கி இவர்கள் செய்யும் முக்கிய ஆராய்ச்சி என்பது பூமியை அடைத்த இந்தத் துகள்களை அந்தக் குழாய்களில் செலுத்தி ஒன்றுடன் ஒன்று மோதச் செய்து அதன் வேகத்தை பன்மடங்கு கூட்டுவது தான். இதனால் ஏற்படும் கால மாற்றம் இத்துகள்களை நிகழ் காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு இட்டுச் செல்கிறது.எனவே இதை 'டைம் டிராவல்'(காலப் பயண) ஆராய்ச்சி என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுவார்கள். இந்த அமைப்பைத் தவிர ஜப்பானைத் தொடர்ந்து இந்தியா போன்ற நாடுகளும் தனிப்பட்ட முறையில் நியூட்ரினோக்களை ஆராயும் முனைப்பில் உள்ளன. 

இந்தத் துகள்கள் 'எடை இல்லாதவை' என்ற காரணத்தால் ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன. நீங்கள் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கும் அவருக்கும் நடுவில் இருப்பது வெற்றிடமல்ல! அந்த இடம் பிரபஞ்சத் துகள்களான நியூட்ரினோக்களால் நிரப்பப்பட்டுள்ளது. அவை உங்ககளையும் ஊடுருவியபடி தாண்டிச் சென்று கொண்டே தான் இருக்கிறது. இந்த உலகமே பிரபஞ்சத் துகள்கள் நிரம்பிய கடலுக்குள் தான் நீந்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் அடிப்படைத் துகள்களை ஆராயும் இயற்பியல்  விஞ்ஞானிகள் (Quantum Physics). பொதுவாக நியூட்ரினோகள்  கடினமான பாறைகளைக் கொண்ட குகை போன்ற இடங்களில் தான் அதிகம் தென்படுகிறதாம்! (ஞானம் பெற வேண்டி காட்டில் குகைகளில் முனிவர்கள் தவமிருப்பதன் காரணம் இப்போது புரிகிறதா?). இன்று இந்தியா இந்த ஆராய்ச்சிக்காக‌ தேர்ந்தெடுத்துள்ள இடம் தேனி மாவட்டத்திலுள்ள ஒற்றை பாறையாக காட்சியளிக்கும் ஒரு மலையைத் தான்.

நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதால் நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்று நினைக்கிறீர்கள்?

 இதற்கான பதில் முற்றிலும் என்னுடைய கணிப்பு தான்! (அதற்காக இதனைக் கற்பனை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்!). அதாவது இன்று நாம் பயன்படுத்தும் கம்பியில்லாத் தொடர்பின் (wireless communication) அடுத்த பரிமாணமாக நியூட்ரினோவை நான் பார்க்கிறேன். நியூட்ரினோவைப் பயன்படுத்தத் தொடங்கினால் நாம் நமது எண்ணங்களின் மூலம் காலம் கடந்து முன்னோக்கியோ பின்னோக்கியோ கூடப் பயணிக்கலாம். இதன் மூலம் பூமிக்கு உள்ளேயும் வெளியேயும் கூட நம்மால் அனைத்து உயிரினங்களுடனும் 'டெலிபதி மூலம்' தொடர்புகொள்ள முடியுமென்று உறுதியாக நம்புகிறேன். இதனால் தான்‌ மெளனமொழியாம் டெலிபதியைப் "பிரபஞ்ச மொழி"யென்று முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன். 

(முக்கிய குறிப்பு: ஃபேஸ்புக் நிறுவனம் மனதில் நினைப்பதை எழுத்தாகக் கொண்டு வரும் டெலிபதி பிராஜக்டில் ஈடுபட்டுள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க் ஸுகர்பர்க்  குறிப்பிட்டுள்ளார் .

இதேபோன்ற ஒரு ப்ராஜெக்டில் நியூரல் லிங்க்  என்ற நிறுவனத்தின் மூலம்  டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் இலான் மஸ்கும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது‌.மூளையின் வெவ்வேறு பகுதிகளில் நமது சிந்தனைக்கேற்ப ஏற்படும் மின் நடவடிக்கைசெய்யப்படும் களை கண்காணிக்க ஒரு 'சிப்'பை வைப்பதன் மூலம் இது சாத்தியப்படுகிறது. அவர்களது ஆய்வக சோதனையில் ஒரு குரங்கை அதன் மனதைக் கொண்டு கணினியில் விளையாடச் செய்து வெற்றிகண்டுள்ளார்கள். மனிதர்களைக்கொண்டு  செய்யப்படும் சோதனைகள் இவ்வாண்டு தொடங்கியம் என்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட மார்க் ஸுகர்பர்க்இலான் மஸ்க் இவர்கள் இருவருக்குமே குறைந்த பாதிப்புடைய ஆட்டிஸம் வகையான 'ஆஸ்பர்ஜர்ஸ் சின்ட்ரோம்'  இருக்கலாமென்று நம்பப்படுகிறது!

80களில்  ரஷ்ய விஞ்ஞானிகள் பிறர் மனதைப் படிக்கும் அமானுஷ்ய ஆய்வுகளில் வெற்றிகண்டதாகவும், இதே ஆற்றல்களைக் கொண்டு ஆஸ்துமா மற்றும் இருதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டதாகவும்  அமெரிக்காவின் CIA சில ரகசிய ஆவணங்களை தற்போது பொதுவெளிக்குக் கொண்டுவந்துள்ளது.

அதேபோல் அமெரிக்காவும் ஆமானுஷ்ய ஆற்றல் (சவான்ட்  சின்ரோம்?) கொண்ட குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கடந்த காலத்தை நோக்கி அவர்களைப் பயணிக்கச் செய்து ரஷ்ய  நீர்முழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்தைக் கண்காணித்ததாகச் சொல்வார்கள்.இது போன்ற ஆய்வை மையப்படுத்தி  'The Men Who Stare at Goats'  என்ற  ஹாலிவுட் திரைப்படம்கூட 2009ஆம்  ஆண்டு வந்துள்ளது . 

2050ஆம்  ஆண்டை  இலக்காகக் கொண்டு அமெரிக்க ராணுவம் தனது வீரர்கள் மனதின் மூலமாக (டெலிபதி தொடர்பு!) தங்களுக்குள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வேறு இடங்களிலிருந்து எண்ணத்தால்  எங்கோ இருக்கும் ஆயுதங்களை இயக்குவதற்கும் தேவையான ஆராய்ச்சிகளை தற்பொழுது மேற்கொண்டிருக்கிறார்கள்.





(Article about meuon alien communication required here?)


No comments:

Post a Comment