'மனதால் காலப் பயணம் மேற்கொள்ள முடியும்!' இதற்கு நான் ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். இது முழுக்க முழுக்க எனது சிந்தையில் உதித்த எண்ணம்! ஒரு வட்ட வடிவமான மைதானத்தில் நீங்கள் பிறரைவிடப் பன்மடங்கு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களால் மற்றவர்கள் நான்கு சுற்று சுற்றும் நேரத்திற்குள் 40 சுற்றுக்களை கூட முடித்து விட முடியும். நீங்கள் பிறர் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்வரை இருக்கும் இடத்திலேயே இளைப்பாறலாம். மேலும் முன்னோக்கிப் பயணிக்கலாம், அல்லது பின்னோக்கி கூடப் பயணிக்கலாம். இதில் 'நீங்கள்' என்று நான் குறிப்பிடுவது உங்களது 'எண்ணத்தை'. நீங்கள் ஓடும் பாதை தான் நியூட்ரினோ எனும் பிரபஞ்ச அலை-அதாவது டெலிபதியால் உண்டாகும் தொடர்பு. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே தீர்மானிக்கும் காரணிகள் நேரமும், தூரமும்.
ஏன் முழு உடலைப் பயன்படுத்தாமல் எண்ணங்களைப் பயன்படுத்தி மட்டுமே தான் காலப் பயணம் செய்ய முடியுமென்று சொல்கிறேன் தெரியுமா?இதற்கான விடை ஐன்ஸ்டீனிடம் உள்ளது! அவரின் கூற்றுப்படி "உங்களால் ஒளியின் வேகத்தில் (ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள்) பயணிக்க முடிந்தால் நிச்சயம் நீங்கள் காலத்தை வெல்வீர்கள்" என்பதே!
ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்கும் தத்துவம்:
நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! நமது உடலானது அதிக எடை கொண்டது. அதை வைத்துக்கொண்டு நம்மால் புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒளியின் வேகத்தில் நிச்சயம் பயணிக்க முடியாது. இதுவரை நாம் புவியீர்ப்பு விசைக்கு எதிராக அடைந்துள்ள அதிகபட்ச வேகம் என்பது ராக்கெட் செல்லும் மணிக்கு 28,000 கிலோமீட்டர்கள் என்பதே. ஆனால் நமது 'உயிர்' (ஆன்மா) எடை இல்லாதது. எனவே அது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்படாது. உங்களால் மனதை (குறிப்பாக 'தான்' என்ற உணர்வை) அடக்கி உயிரை (ஜீவாத்மாவை) வெளிக்கொணர முடிந்தால், அது உங்களின் சார்பாக நியூட்ரினோ அலையைப் (பரமாத்மாவை) பயன்படுத்தி காலப் பயணம் செய்யும். நீங்கள் நினைத்த மாத்திரத்தில் எதிர்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் வேண்டிய இடத்திற்கும் சென்று வரலாம். சித்தர்களும் இதைத்தானே செய்கிறார்கள்?!
நீங்களே பிரபஞ்சத்தின் வாயிலாக மாறினால் ஞானமடையலாம்! இதுதான் ஜீவாத்மா (ஒரு உயிர்) பரமாத்மாவுடன் (பிரபஞ்சத்துடன்) கலப்பது. அந்த வாயிலின் திரவுகோல் தான் 'குண்டலினி' சக்தி. நாம் மரணிக்கும் போது வெளிப்படும் சக்தியும் இதுவே. அந்த சக்தியை வசப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது தியானமும் யோகமுமே. இப்பொழுது புரிகிறதா ஏன் மாயம்மா, திப்புமஸ்தான் அவுலியா போன்ற ஞானிகள் தங்கள் உடலை தற்காலிகமாகப் பிரிந்து எங்கோ பயணித்து விட்டு விரும்பிய நேரத்தில் மீண்டும் திரும்பியிருக்கிறார்கள் என்று?! (இதனடிப்படையில் பார்த்தால் எப்படி ஆன்ம சொரூபமாக இருக்கும் திப்பு மஸ்தான் அவுலியா சூட்சுமமாக என்னைத் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வரும்படி எனது சிந்தையைத் தூண்டினார் என்று புரிந்துகொள்ள முடிகிறது!)
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் 'ரொனால்ட் மாலட்' : 'காலப் பயணம்' (Time Travel) செய்து சிறுவயதில் தான் இழந்த தந்தையை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த ஆய்வில் பல ஆண்டுகள் முன்பு இறங்கியுள்ளார். "எனது ஆய்வு என்பது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. எனது காலத்திற்குப் பிறகு எதிர்காலத்தில் பல கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு காலப் பயணம் சாத்தியப்படலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் ஆய்வின்படி காலப் பயணத்தில் நேரத்தை மடக்க ஒளியை போவதற்கும் திரும்பி வருவதற்குமான பாதையாகப் பயன்படுத்தலாம்(using light as a loop) என்கிறார். குண்டலினியை எழுப்பி பரவசநிலையை அடைந்தவர்கள் இறுதியில் கடவுளைப் பேரானந்தம் தரக்கூடிய ஒளி வடிவமாகப் பார்த்ததாகவே குறிப்பிட்டுகிறார்கள்.அந்த ஒளியை பற்றிக் கொண்டு தான் காலப் பயணம் செய்ய வேண்டுமோ? அப்படியானால் கடவுளைக் காண்பது அல்லது உயிர் உடலை விட்டுப் பிரிவது என்பது இறுதி அல்ல! 'ஒரு கூட்டுப் புழு தனது கூட்டை உடைத்துக்கொண்டு பட்டாம் பூச்சியாக சிறகடித்து அடுத்த கட்ட பயணத்திக்கு செல்வதுபோல்' என்று வைத்துக் கொள்ளலாமா? விளக்கையே பார்த்துக்கொண்டிருந்த ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) ஒரு நாள் தனது உடலோடு மொத்தமாக ஜோதியில் மறைந்த ரகசியம் இது தானோ?
No comments:
Post a Comment