தற்போதைய புள்ளி விவரங்களின்படி, உலகிலேயே மிக அதிகமாக ஹாங்காங்கில் 27 இல் ஒரு குழந்தைக்கு, தென்கொரியாவில் 38 இல் ஒரு குழந்தைக்கு அமெரிக்காவில் 45 இல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள் எல்லாம் வளர்ந்த நாடுகள். இந்தியா இந்தப் பட்டியலிலேயே இல்லை. வேறு தளத்தில் தான் இந்தியா குறித்த தகவலைத் தேடிக் கண்டு பிடித்தேன்! இங்கே குறிப்பிடப்படுவது என்னவென்றால் இந்தியாவில் 100ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது மேலும் 8ல் ஒரு குழந்தைக்கு ஏதோ ஒருவகையான நரம்பியல் பாதிப்பு உள்ளது.உண்மையில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலும், பின்தங்கிய நாடுகளில் இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளிடம் இல்லையா? நிச்சயம் இருக்கும்! ஆனால் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் அவர்களைப் பற்றிய தகவல்கள் பெற்றோர்களின் மூலமாகவோ மருத்துவமனைகளின் மூலமாகவோ அதிகம் இடம் பெறவில்லை. மேலும் ஹைபர்லெக்சியா, சவான்ட் சிண்ட்ரோம் பற்றிய முகநூல் பக்கங்களில் கூட வளர்ந்த நாடுகளை சேர்ந்த பெற்றோர்களே அதிகம் இருக்கிறார்கள். அதிலும் வெளிநாட்டுவாழ் இந்திய பெற்றோர்கள் இருக்கிறார்களே தவிர இந்தியாவில் இருக்கும் என் போன்றவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இதற்கு நேர்மாறாக எனது மகள் இறுதியாகச் சென்ற அந்த தெரப்பி மையத்திற்கு வரும் குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமானவர்கள் மீனாட்சியை போல் பேரறிவைக் கொண்ட குழந்தைகளே! அதனால்தான் அந்த மையத்தின் நிர்வாகி மீனாட்சியை கண்டவுடனேயே அவளை இனம் கண்டுள்ளார்.அங்கே ஒரு சிறுவன் 22க்கும் அதிகமான மொழிகளில் எழுதத் தெரிந்தவன் (யாரும் கற்பிக்கவில்லை அவனும் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை!). மற்றொரு சிறுவன் பேசமாட்டான். ஆனால் பக்திப் பாடல்களை வாய்விட்டு நன்றாகப் பாடுவான். பேசச் சொன்னால் வாயை மூடிக் கொள்வான்.ஒரு சிறுமி உங்களைப் பார்த்தால் அப்படியே தத்ரூபமாக வரைந்து விடுவாள். இன்னொரு சிறுவனின் கதையை சற்றுப் பரிதாபமானது ! அவனுக்கு 15 வயது ஆகும் வரை அவனை எங்கும் அனுப்பாமல் அவனது பெற்றோர் வீட்டிலேயே வைத்திருந்திருக்கிறார்கள். அவன் அனைத்தும் தெரிந்தவன் எழுதப் படிக்கவும் தெரியும் என்று உணர்ந்தவுடன் அந்தத் தெரப்பி மையத்தின் நிர்வாகியின் உதவிகொண்டு அவனை நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வைத்தார்கள். அவன் அதிக மதிப்பெண்களை பெற்றதுடன். மேலும் படிப்பைத் தொடர ஆர்வம் கொண்டிருக்கிறான்.அவன் ஓரளவிற்கு பேசத் தொடங்கி இருக்கிறான். ஆனால் சொந்தமாக பேனா பிடித்து எழுத வராது. அவன் அதிகம் நம்புவது தனது பெற்றோரை விட அந்தத் தெரப்பி மைய நிர்வாகியான அந்தப் பெண்மணியைத் தான். பீச்சுக்கோ திரைப்படத்திற்கோ அவரைத் தான் அழைத்துச்செல்லச் சொல்வான். இப்படியும் சேவை மனப்பான்மை கொண்ட பல நல்ல மனிதர்கள் இந்தத் தொழிலில் இருக்கத்தான் செய்கிறார்கள் !
எனது கருத்து: ஆட்டிசம் பாதிப்புடைவர்களில் 10% சதவீதத்தினர் சவான்ட்கள். உலகளவில் ஆடசம் பாதிப்பு அதிகரித்து வருகிறதென்றால் சவான்ட்சின்ட்ரோம் பாதித்தவர்களும் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள் என்றுதானே அர்த்தம்? அப்படியானால் பிரச்சனையிலும் ஒரு நன்மையாக பேரறிவைக் கொண்ட குழந்தைகளும் இன்று அதிகளவில் பிறக்கிறார்கள் என்பதுதானே உண்மை? எனவே வித்தியாசமான மூளை அமைப்பைக் கொண்டு விசித்திரமான பழக்க வழக்கங்களுடன் இனி வரும் காலங்களில் குழந்தைகள் அதிகம் பிறக்கப் போகிறார்கள். அவர்களை கையாள அரசும்,பெற்றோர்களும், பள்ளிகளும் தயாரா? இல்லை அனைவரையும் "சிறப்புக் குழந்தைகள்" என்று முத்திரையிட்டு அவர்களை சிறப்பு பள்ளிகளுக்கு அனுப்பிவிடப் போகிறோமா?
நான் இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு தெரிந்தவர்களிடம் இந்த பிரச்சனையை பற்றி வெளிப்படையாக சொல்லி வந்திருக்கிறேன். என்னை அனைவரிடமும் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எனது நலம் விரும்பிகள் சொல்லியிருக்கிறார்கள். நான் பேசுவதற்கு காரணம் நாம் நமது விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது பிறர் நமக்குத் தேவையான கருத்துக்களை (இதில் பெரும்பாலும் தேவையற்ற மற்றும் முரண்பாடான கருத்துக்களும் வரலாம்!) பதிலுக்கு கூறலாம். மேலும் நமது அனுபவம் பிறருக்குப் பயன்படலாம். பிறருடைய அனுபவங்களையும் நாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் நான் அறிந்த விஷயங்கள் அனைத்தையும் உங்களுடனும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
எங்களிடம் வேலை பார்க்கும் கன்சல்டன்ட் ஒரு நாள் என்னிடம் கேட்டான் "சார்! நீங்கள் உங்கள் மகளைப் பற்றி பெருமையாக பேசுகிறீர்களா? இல்லை அழுது புலம்புகிறார்கள்?" என்று கேட்டான். நல்ல கேள்விதான்! அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் தான் இருக்கிறார்கள் ஹைபர்லெக்சியா மற்றும் சவான்ட்சின்ரோம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்.எனது உதவி இல்லாமலேயே யார் வேண்டுமானாலும் இதே விஷயங்களை ஆய்வு செய்து புரிந்து கொள்ளலாம்.ஆனால் இதுவரை நான் செலவிட்ட நேரமும் முயற்சியும் இந்த நேரத்தில் உலகத்தின் வேறொரு மூலையில் இருக்கும் யாரோ ஒருவருக்கு நிச்சயம் பயன்படலாம். எனது தொழில் மற்றும் நண்பர்கள் வட்டத்தின் மூலம் பல நாடுகளிலிருந்தும் கண்டங்களிலிருந்தும் அவர்களுக்கு தெரிந்த இதுபோன்ற பிரச்சினைகளை உடைய குழந்தைகளின் பெற்றோர் என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.இதில் பெரும்பாலானவர்களுக்கு நான் கூறும் விஷயங்கள் ஆறுதலாக நம்பிக்கை அளிப்பதாக இருப்பதுடன், பிரச்சனையை வேறு கோணத்திலிருந்து பார்க்க உதவுகிறது. பலர் நான் பேசிய பிறகே தங்களது குழந்தையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டதாக என்னிடம் உணர்ச்சிப் பெருக்குடன் கூறியிருக்கிறார்கள். என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு இந்த பிளாக் பயன்படட்டுமே!
என்னுடைய இயல்பைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், வெகுளித்தனமாக மனதில் இருப்பதை பிறரிடம் கொட்டுவதற்கும், மனதிற்கு சரி என்று பட்டதை எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் நேர்மையாக பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. இதில் நான் இரண்டாவது வகை.
இதை சமுதாயத்தில் புரிந்து கொள்ளக் கூடியவர்களின் மனநிலையும் இரு வேறாக இருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்தது கொண்டேன். ஒரு சாரார் நான் கூறுவதில் உண்மை இல்லை என்று நினைப்பதோடு நான் என் மகளைப் பற்றி இல்லாத விஷயங்களை கற்பனை செய்து கொண்டு கூறி வருவதாக நினைக்கிறார்கள். இது போன்ற வினோத பிரச்சனைகளைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பெரிய மருத்துவர்களுக்கும் இதே அவப்பெயர் தான் ஏற்படுகிறது என்பதை நான் பிறகு தெரிந்து கொண்டேன். முதன்முதலில் உலகம் 'உருண்டை' என்று சொன்னவனை "முட்டாள்" என்ற உலகமல்லவா இது! இதில் நானெல்லாம் எம்மாத்திரம்?
நான் இப்பொழுதும் சொல்கிறேன் என் மகளுக்கு ஒன்றுமே தெரியாது என்றால் நான் அவளுக்குப் புரியாத பாடங்களை வற்புறுத்தி படிக்கவைத்து பள்ளிக்கு அனுப்பி தலையில் ஏற்றி நிச்சயம் துன்புறுத்த மாட்டேன்.இதை நான் எழுதுவதன் நோக்கமே சில நேரங்களில் நமது கண்ணே நம்மை ஏமாற்றலாம். விஞ்ஞானத்திற்கும் மருத்துவத்திற்கும் சவால் விடக்கூடிய பிரச்சனைகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி சவாலான விஷயங்கள்தான் சவான்ட் சின்ட்ரோமும் ஹைப்பர்லெக்சியாவும். சில ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் ஒரு குழந்தையின் உடலில் தானாகவே அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது என்ற செய்தியை ஒரு தமிழ் செய்தித்தாளில் படித்த நான் அதைப்பற்றி இணையத்தில் அலசி அந்த பிரச்சனைக்குப் பெயர் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஸ்ஷன் (Spontaneous Human Combustion), வெகு சிலருக்கு அரிதாக உடலில் சுரக்கும் திரவங்கள் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்பதைக் கண்டறிந்து அந்த நாளேட்டின் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதோடு அதன் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு தொலைபேசியிலும் தெரிவித்தேன். (அதுவரை அந்த குழந்தையின் பெற்றோர் பொய் சொல்கிறார்கள் அல்லது அவர்களே குழந்தையின் உடலுக்கு தீ வைக்கிறார்கள் என்ற ரீதியில் விசாரணை சென்றுகொண்டிருந்தது).நான் மின்னஞ்சல் அனுப்பிய இரண்டு நாட்களில் நான் கூறிய அதே கருத்தை அந்த குழந்தைக்கு வைத்தியம் பார்த்த அரசு மருத்துவக் குழுவினரும்,தமிழக சுகாதாரத்துறையும் கூறியது அதே செய்தித்தாளில் வெளியானது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் சொன்னதைதான் அவர்கள் அந்த நாளேட்டின் ஆசிரியரின் வாயிலாக அறிந்து வழிமொழிந்தார்களா என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. எனக்கு பாராட்டோ,பணமோ, நற்சான்றிதழோ தேவையில்லை.உண்மை புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் போதும்!
அதே வேளையில் நான் கூறியவற்றை கேட்ட மற்றொரு சாரார் தீவிர ஆன்மிகவாதிகளாக இருக்கிறார்கள்.அதில் பெரும்பாலானவர்களுக்கு இந்த விஷயங்களை ஆன்மீகத்தோடு தொடர்புபடுத்தி புரிந்துகொள்ள முடிந்தாலும் அதிலும் சிலருக்கு அவர்களின் மதமும் அவர்கள் குருமார்களின் வழியும் பிறருடைய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. இன்னும் சொல்வதானால் இந்தப் பிரச்சனையை நீங்கள் புரிந்து கொள்வது கிட்டத்தட்ட கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ரீதியில் மனிதர்களைப் பிரிக்கிறது.ஆனால் நான் ஒரு வகையில் கொடுத்து வைத்தவன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் எனது கர்வமோ சுயசிந்தனையோ எனது கண்களை மறைக்காமல் மனதை நடுநிலையுடன் வைத்துக் கொண்ட ஒரே காரணத்தால் தான் எனக்கு பெரும்பாலான விஷயங்கள் நன்கு புரிந்தன.நான் இனி உங்களுடன் இங்கே பகிரப் போகும் கருத்துக்கள் இன்று புரியாததாகவும் உண்மைக்குப் புறம்பானதாகவும் தோன்றலாம்.ஆனால் சில ஆண்டுகளில் இதைப் பற்றிய உண்மைகள் நிச்சயம் விஞ்ஞானத்தால் அறிந்து கொள்ளப்படும். அப்பொழுது விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்திற்கும் உள்ள தொலைவு குறைந்துவிடும்!
Monday, June 01, 2020
10. சவான்ட் சிண்ட்ரோம் (Savant Syndrome):
இப்பொழுது சவான்ட் சிண்ட்ரோம் (கற்றறிந்தவர் அல்லது ஞானி) பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்!
1). பிறவி ஞானிகள்(congenital Savants ): பிறப்பிலேயே மிகுந்த அறிவோடு பிறந்த ஞானிகளென்றால் நாம் முன்பே பார்த்த கிம்பீக், நம்முடைய "கணித மேதை" ராமானுஜம் அவர்களையும், ஐன்ஸ்டீன் அவர்களையும் உதாரணங்களாகக் கூறலாம்.
2). விபத்தால் அல்லது திடீர்ஞானியானவர்கள் (accidental Savants):
1). பிறவி ஞானிகள்(congenital Savants ): பிறப்பிலேயே மிகுந்த அறிவோடு பிறந்த ஞானிகளென்றால் நாம் முன்பே பார்த்த கிம்பீக், நம்முடைய "கணித மேதை" ராமானுஜம் அவர்களையும், ஐன்ஸ்டீன் அவர்களையும் உதாரணங்களாகக் கூறலாம்.
2). விபத்தால் அல்லது திடீர்ஞானியானவர்கள் (accidental Savants):
இவர்கள் சாதாரண மனிதர்களாக இருந்து திடீரென பக்கவாதத்தினாலோ அல்லது தலை மற்றும் முதுகுப்பகுதியில் அடிபட்ட பிறகு (CNS injury) சவான்டாகி (ஞானியாகி) விடுவார்கள். இதை கீழ்க்கண்டவாறு புரிந்து கொள்ளலாம்; அதாவது செடிகளில் கொழுந்தாக இருக்கும் இலைகளைக் கிள்ளிவிடுங்கள். சில நாட்களில் செடியின் பக்கவாட்டிலிருந்து புதிதாக இலைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ளலாமென்றால், நமக்கு மூளையில் பக்கவாதம் அல்லது விபத்து போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது பிறவியிலேயே கட்டமைப்பு வித்தியாசமாக இருந்தாலோ மூளை தன்னைத் தானே சீராக்கிக் கொள்ள அல்லது தற்காத்துக் கொள்ள மாற்று முயற்சிகளை மேற்கொள்ளும்.இதற்க்கு "நியூரோ பிளாஸ்டிசிட்டி" (neuroplasticity) என்று பெயர். இதில் மூளையின் ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நியூரான்கள் தனது வழியை மாற்றிக்கொண்டு புதுப்புது தடங்களில் பயணித்து மூளையின் மற்ற பகுதிகளோடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். இந்த "நியூரான் பின்னலை"(brain wiring or neuron wiring) தகவல் தொழில்நுட்பத்தில் web (வலைப் பின்னலோடு) ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நமக்கு சில சமயங்களில் இன்டர்நெட் மூலம் வரவேண்டிய தகவல் நேரடியாக வராவிட்டால் அது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்து சேரும்.
விபத்தால் ஞானியானவர்
உதாரணம்-1: ஜேசன் பேட்ஜெட் (Jason Padgett)
என்ற மெத்தை மற்றும் சோஃபா விற்பனைப் பிரதிநிதி தனது விவாகரத்துக்குப் பின் வாழ்க்கையின் பெரும் பகுதியை குடியும் கூத்துமாக கும்மாளம் அடித்துக் கழித்து வந்துள்ளார்.அவருக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ளதுபோல் தானாம். ஆனால் ஜேசனின் உடமைகளைத் திருட வந்த இருவர் குடி போதையில் இருந்த அவரின் தலையிலும் வயிற்றிலும் தாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். இந்த பிரச்சனையிலிருந்து தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டு வந்த அவருக்கு சில மன ரீதியான மாறுபாடுகளுக்குப் பின் பார்க்கும் இடங்களிலெல்லாம் நீள்வட்டமும் அதற்குள் சிறு புள்ளிகளும் தென்படத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பகுவியலில் (Fractal) அவருக்கு அளவு கடந்த ஈடுபாடு ஏற்பட்டது. திடீரென இது தொடர்பான படங்களாக வரைந்து தள்ளத் தொடங்கியுள்ளார்.இவரது படங்களின் உண்மை அர்த்தத்தை உணர்ந்த ஒரு கல்வியாளர் அது வானியல் தொடர்பான நுட்பமான ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது என்பதை அறிந்து இவரை ஒரு சமூகக் கல்லூரியில் சேர்ந்து முறையாக கணிதத்தைப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.நடந்த விபத்து இன்று இவரின் வாழ்க்கையையே மாற்றி எழுதியிருக்கிறது.
உதாரணம்-2: எனக்கு உடனே மலையாளத்தில் திரு.மம்மூட்டி அவர்கள் நடித்த "ஐயர் த கிரேட்" திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. அதில் அவருக்கு ஒரு விபத்திற்குப் பிறகு நடப்பதை முன்கூட்டியே அறியும் தன்மை வந்துவிடும்.
உதாரணம்-3: மேலும் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி படித்தேன்! ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு சமையல் கலைஞர் தனது மனைவி இறந்த பாதிப்பில் ஒரு வகையான மன நோய்க்கு ஆட்பட்டதாகவும், கணிதத்தில் எந்தவித முன்னறிவும் இல்லாமல் அல்ஜீப்ரா போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டதாகுவும், மேலும் இராமானுஜம் விட்டுச்சென்ற தேற்றங்களை இவர் முடிக்கும் முனைப்புடன் செயல்படுவதாகவும் படித்தேன்.
சவான்ட் சிண்ட்ரோம்-சில முக்கியத் தகவல்கள்!
ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் 10 சதவீதத்தினர் சவான்டாகப் (ஞானியாகப் )பிறக்கிறார்கள். மேலும் வளர்ச்சிநிலை குறைபாடுகள் மட்டுமின்றி தலை மட்டும் முதுகுத் தண்டில் ஏற்படும் பாதிப்பு (CNS injury) மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களாலும் இந்நிலை ஏற்படலாம். திடீரெனத் தோன்றும் திறமையானது ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபட்டதாக தனித்துவம் மிக்கதாக பாதிக்கப்பட்டவரின் பிரச்சனைகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமையலாம். ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இப்பிரச்சனை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் நினைவுத்திறன் அபாரமான கொள்ளளவைக் கொண்டதாக இருக்கும்.
சவான்ட்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆண்களே அதிகம் சவான்ட்களாகப் பிறக்கிறார்கள்.
சவான்ட்களில் 50 சதவீதத்தினருக்கு ஆடிசமும், ஆடிசமற்ற மீதமுள்ள 50 சதவீதத்தினருக்கு மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான வேறு பாதிப்புகள் இருக்கலாம்.
விபத்தால் ஞானியானவர்
உதாரணம்-1: ஜேசன் பேட்ஜெட் (Jason Padgett)
என்ற மெத்தை மற்றும் சோஃபா விற்பனைப் பிரதிநிதி தனது விவாகரத்துக்குப் பின் வாழ்க்கையின் பெரும் பகுதியை குடியும் கூத்துமாக கும்மாளம் அடித்துக் கழித்து வந்துள்ளார்.அவருக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ளதுபோல் தானாம். ஆனால் ஜேசனின் உடமைகளைத் திருட வந்த இருவர் குடி போதையில் இருந்த அவரின் தலையிலும் வயிற்றிலும் தாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். இந்த பிரச்சனையிலிருந்து தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டு வந்த அவருக்கு சில மன ரீதியான மாறுபாடுகளுக்குப் பின் பார்க்கும் இடங்களிலெல்லாம் நீள்வட்டமும் அதற்குள் சிறு புள்ளிகளும் தென்படத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பகுவியலில் (Fractal) அவருக்கு அளவு கடந்த ஈடுபாடு ஏற்பட்டது. திடீரென இது தொடர்பான படங்களாக வரைந்து தள்ளத் தொடங்கியுள்ளார்.இவரது படங்களின் உண்மை அர்த்தத்தை உணர்ந்த ஒரு கல்வியாளர் அது வானியல் தொடர்பான நுட்பமான ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது என்பதை அறிந்து இவரை ஒரு சமூகக் கல்லூரியில் சேர்ந்து முறையாக கணிதத்தைப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.நடந்த விபத்து இன்று இவரின் வாழ்க்கையையே மாற்றி எழுதியிருக்கிறது.
உதாரணம்-2: எனக்கு உடனே மலையாளத்தில் திரு.மம்மூட்டி அவர்கள் நடித்த "ஐயர் த கிரேட்" திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. அதில் அவருக்கு ஒரு விபத்திற்குப் பிறகு நடப்பதை முன்கூட்டியே அறியும் தன்மை வந்துவிடும்.
உதாரணம்-3: மேலும் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி படித்தேன்! ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு சமையல் கலைஞர் தனது மனைவி இறந்த பாதிப்பில் ஒரு வகையான மன நோய்க்கு ஆட்பட்டதாகவும், கணிதத்தில் எந்தவித முன்னறிவும் இல்லாமல் அல்ஜீப்ரா போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டதாகுவும், மேலும் இராமானுஜம் விட்டுச்சென்ற தேற்றங்களை இவர் முடிக்கும் முனைப்புடன் செயல்படுவதாகவும் படித்தேன்.
சவான்ட் சிண்ட்ரோம்-சில முக்கியத் தகவல்கள்!
ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் 10 சதவீதத்தினர் சவான்டாகப் (ஞானியாகப் )பிறக்கிறார்கள். மேலும் வளர்ச்சிநிலை குறைபாடுகள் மட்டுமின்றி தலை மட்டும் முதுகுத் தண்டில் ஏற்படும் பாதிப்பு (CNS injury) மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களாலும் இந்நிலை ஏற்படலாம். திடீரெனத் தோன்றும் திறமையானது ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபட்டதாக தனித்துவம் மிக்கதாக பாதிக்கப்பட்டவரின் பிரச்சனைகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமையலாம். ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இப்பிரச்சனை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் நினைவுத்திறன் அபாரமான கொள்ளளவைக் கொண்டதாக இருக்கும்.
சவான்ட்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆண்களே அதிகம் சவான்ட்களாகப் பிறக்கிறார்கள்.
சவான்ட்களில் 50 சதவீதத்தினருக்கு ஆடிசமும், ஆடிசமற்ற மீதமுள்ள 50 சதவீதத்தினருக்கு மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான வேறு பாதிப்புகள் இருக்கலாம்.
வரலாற்றில் முதல் சவான்ட்யென அறியப்பட்டவர் ஜெடிடியாபக்ஸ்டன் (Jedediah Buxton) என்ற மின்னல் வேகத்தில் கணக்கிடக்கூடியவரைப் பற்றிய தகவல் 1783ஆம் ஆண்டு 'க்னோடி சாடன்' என்ற மனநலம் சம்பந்தமான ஜெர்மன் மருத்துவ நாளேட்டில் வெளியானது.நமது "கணித மேதை" ராமானுஜத்தைப்போல் பிறர் கற்பிக்காமலேயே கணிதம் இவருக்குக் கைவந்த கலையாக இருந்திருக்கிறது!
முட்டாள் அறிஞன்:ஆனால் 1887ல் லண்டன் மருத்துவ சமூகம் நடத்திய கூட்டத்தில் மனநல மருத்துவர் J.L.டவுன் (இவரே "டவுன் சின்ட்ரோம்" என்ற வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்தவர்.தனது முப்பதாண்டு அனுபவத்தில் தான் கண்ட வியக்கத் தகுந்த திறமையுடன் கூடிய பிரச்சனையுள்ள இவர்களை "முட்டாள் அறிஞன்" (idiot savant) என்று பெயரிடுகிறார். அக்காலத்தில் திறன் அளவு (IQ) 25க்கும் குறைவாக இருந்ததால் "முட்டாள்" என்ற சொல்லி வந்துள்ளார்கள். ஆனால் பிற்காலத்தில் நடந்த ஆய்வுகளில் இப்பிரச்சனை உள்ள அனைவருக்கும் திறன் அளவு 40க்கும் மேல் என்ற காரணத்தால் "முட்டாள்" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'சவான்ட்' என்று மட்டும் குறிப்பிடுகிறார்கள். டவுனின் காலம் தொட்டு இன்றுவரை இப்பிரச்சனை உள்ளவர்கள் கணிதம், இசை, கடிகாரத்தின் உதவியின்றி காலத்தை கணக்கிடும் அறிவு போன்ற சிறப்பு திறன்களோடு கூடிய அபார நினைவாற்றலும் கொண்டே தான் இன்றுவரை பிறந்து கொண்டிருக்கிறார்கள். இது தவிர ஓவியம், சிற்பம் போன்றவற்றில் உள்ள திறமைகளும் இதில் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் டாக்டர் டவுன் குறிப்பிட்ட முக்கிய விஷயம் "வளர்ச்சி பாதிப்பு" (developmental disorder -இன்று இதுவே "ஆட்டிசம் குறைபாடு" என்று அழைக்கப்படுகிறது).அவர் மேலும் மனநல பாதிப்பு என்பது பிறவியிலோ அல்லது திடீரென்றோ ஏற்படக்கூடியது என்று குறிப்பிடுகிறார். அதேவேளையில் "மூன்றாவது பிரிவினர்" என்று அவர் குறிப்பிடும் குழந்தைகள் வெளியில் மனநல பாதிப்புக்கு உள்ளாகாவிட்டாலும் நன்றாக வளர்ந்து வரும் வேளையில் திடீரென ஒரு பின்னடைவைச் சந்திக்கிறார்கள் (regression). அவர்களிடம் தென்படும் அறிவுத் திறன் திடீரென மங்கும், பேச்சு நிற்கும், மூளை வளர்ச்சி நின்று விட்டதோ என்றே எண்ணத் தோன்றும். இவர்கள் தனக்குள்ளேயே வாழத் தொடங்குவார்கள், நம் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது நபருடன் பேசிக்கொண்டிருப்பார்கள், செய்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பார்கள். மேற்கூறிய "வளர்ச்சி பாதிப்பு" (developmental retardation) என்று டாக்டர் டவுனால் அழைக்கப்பட்ட இவையே 93 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து மனநல மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படும் DSM (Diagnostic and Statistical Manual of Mental Disorders) என்ற மனநல பரிசோதனை மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் படி"வளர்ச்சி நிலை மாற்றம்" (developmental disorder) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
1944ல் இதையே டாக்டர்.லியோ கென்னர் "குழந்தைகளின் ஆரம்ப கால மன இறுக்கம்" (early infantile autism) என்று குறிப்பிடுகிறார். இவரே "ஆடிசம்" என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் (டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட்டின் பேராசிரியர்).
ஹில்லின் 1977 கணக்கீட்டின்படி இரண்டாயிரத்தில் ஒருவர் சவான்டாகப் பிறப்பதாக கூறுகிறார். சால்வோவீடாவின் 2000ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 10000த்தில் 1.4% சதவீதத்தினர் சவான்டாக பிறக்கிறார்கள்.
ஆண் பெண் விகிதாச்சாரம் ஆட்டிசத்தில் 4:1 என்று இருந்தால், சவான்ட் சிண்ட்ரோமில் 6:1 என்ற கணக்கில் இருக்கிறது. கெஷ்விண்ட் மற்றும் கேலாபர்டாவின் 1987ன் ஆய்வு முடிவின்படி கருவளர்ச்சியில் எற்படும் சில மாற்றங்களால் குழந்தைகளின் இடது மூளையின் வளர்ச்சி வலது மூளையை ஒப்பிடுகையில் தாமதப்படலாம். இது மேலும் ஆண் குழந்தையாக இருந்தால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் (Testosterone)காரணமாக இடது மூளையின் வளர்ச்சியை மேலும் தாமதப்படுத்தலாம். இதை ஈடுகட்ட இயற்கை வலது மூளையை வலுவூட்டுகிறது.அதாவது மொழி வளர்ச்சிக்கு உதவ வேண்டிய இடது மூளையின் திறன் வலது மூளைக்கு இடம்பெயர்கிறது. இதேபோல் இடது பக்கமாக தலையில் அடிபட்டாலும் அதை ஈடுகட்டும் வகையில் வலது மூளை செயல்படத் தொடங்குகிறது.
இதேபோல் சவான்ட் திறமையுள்ளவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் முதல் நிலை உறவினர்கள் 23 பேரை சோதிக்கும் போது அதில் ஒருவருக்கு சவான்ட் திறமை இருப்பதாகவும் (லா ஃபான்டெய்ன் 1974).மற்ற ஆய்வுகளில் அப்படி குறிப்பிட்ட திறமையுடன் யாரும் இருப்பதாக முடிவு ஏதும் வெளியாகவில்லை.
சவான்ட்களின் திறமைகள் என்றும் மங்குவதில்லை மாறாக வயது மற்றும் வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் மென்மேலும் வலுப்பெறுகிறது மெருகேறுகிறது.
சவான்ட்களுக்கு அபார நினைவாற்றலுடன் கற்பனைத் திறனும் உண்டு! டாக்டர் டெரால்ட் டிரெஃபர்ட் தனது முந்தைய புத்தகமான "வியத்தகு மனிதர்கள்" (Extraordinary People) என்ற புத்தகத்தில் சவான்ட்களுக்கு கற்பனைத் திறன் குறைவு என்று கூறியதை பின்னர் வாபஸ் பெறுகிறார்.
உதாரணம்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவியர் ஸ்டீபன் வில்ட்ஷயர் (Stephen Wiltshire).ஆட்டிஸ்டிக் சவான்டாக அறியப்படும் இந்த ஓவியர், ஒரு ஹெலிகாப்டரில் அமர்ந்து 20 நிமிடங்கள் நியூயார்க் நகரை வானிலிருந்து கண்காணித்தால், அவரால் அவர் கண்ட வானளாவிய அனைத்து கட்டணங்களையும் நிலப்பரப்புகளையும் அப்படியே ஓவியமாக வரைய முடியும். இதற்கு அவரது "போட்டோகிராஃபிக் மெமரி"யே காரணம் என்று கூறுகிறார்கள். மேலும் தான் கண்ட காட்சிகளுடன் கூடுதலாக சில விஷயங்களையும் தனது கற்பனையால் சேர்த்து அவர் அதை அழகுபடுத்தியும் காட்டியுள்ளார். இதைத்தான் டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் "சுய கற்பனைத் திறனும்" உண்டென பிறகு குறிப்பிடுகிறார்.
ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து சவான்ட்களையும் பற்றி குறிப்பிடுவது இயலாத காரியம்.
இது தவிர மிகவும் அரியதாக சில குணாதிசயங்கள் சிலரிடம் இருப்பதாக விவரிக்கப்படுகின்றன.
அவைகள்: பன்மொழிப் புலமை, தொடுவது, நுகர்வது, பார்ப்பது ஆகிய உணர்ச்சிகளை உணர்வதில் பிரச்சனை. இதை சினஸ்தீசியா (synesthesia) என்று குறிப்பிடுவார்கள். இது தவிர மேற்கண்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு கடிகாரம் இல்லாமல் நேரத்தை உணர்வது, இவை தவிர நரம்பியல், கணக்கியல், மற்றும் திசை அறிவது போன்றவற்றில் உள்ள வியத்தகு அறிவு ஆகியவையும் குறிப்பிடப்படுகின்றன. இதேபோல் குழந்தைகளுக்கு எழுத்துக்களிலும் எண்களிலும் உள்ள வயதுக்கு மீறிய திறமையை "ஹைப்பர் லெக்சியா" என்றே குறிப்பிடப்படுகிறது.
(மேற்கண்ட அனைத்து குணாதிசயங்களும் நாம் மீனாட்சியிடம் கண்டதே!)
உதாரணம்: இங்கிலாந்தை சேர்ந்த 'டேனியல் டாமட்' (Daniel Tammet )என்ற இளைஞர் இவரும் மின்னல் வேகத்தில் நேரடியாக கணக்குகளுக்கு விடை எழுதுபவர். சிறுவயதில் அடிக்கடி காக்கா வலிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். மற்ற ஆட்டிசம் பாதித்தவர்கள் தங்களுக்கு என்ன நிகழ்கிறது, தங்களது செயல்பாடுகளை எது வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில்; திரு.டாமட் அவர்களால் சினஸ்தீசியாவைப் (synesthesia) பற்றியே விவரிக்க முடிகிறது. அவர் சொல்கிறார் மணங்களுக்கும் நிறங்கள் உண்டு (நான் முதலிலேயே கூறியுள்ளேன் "மீனாட்சி வாசனை உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து முகர்ந்து பார்க்கிறாள்" என்று. குறிப்பாக: சோப்புக்கட்டிகள், தரையை துடைக்கும் திரவங்கள்!).
மேலும் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட குணாதிசமும், செயல்பாடும் உள்ளது என்கிறார் டாமட். உதாரணத்திற்கு '2' என்ற எண் அவருக்கு நகர்வதாக தோன்றுகிறது. '5' என்ற எண் அவருக்கு இடிபோல் கேட்கிறது. இந்த இரண்டு எண்களும் சேர்ந்து கொண்டால் அவருக்கும் மூன்றாவதாக ஒரு உருவம் தோன்றுகிறது! அதுவே விடையாகிறது. இப்படி தான் சிந்திக்காமலே விடைகள் தனக்குக் கிடைப்பதாக டானியல் குறிப்பிடுகிறார்.கன மூலம் (cube root) போன்ற கணக்குகளுக்கு ஒரு கணிப்பானைவிட (calculator) வேகமாக விடையளிக்க இவரால் முடியும். π(Pi)ன் மதிப்பிற்கு 22,514 தசமஸ்தானங்களில் (decimal places) விடையளிக்கிறார். அவரால் 377ஐ 795துடன் பெருக்கி, பார்த்த மாத்திரத்தில் விடையெழுத முடியும். இது தவிர பன்மொழிப் புலமை கொண்ட திரு.டானியல் சொந்தமாக ஒரு புது மொழியும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு இன்றும் கார் ஓட்டுவது, கையைக் காட்டி திசையைச் சொல்வது, ஊசியில் நூல் கோர்ப்பது போன்ற நுட்பமான வேலைகள் செய்வது கடினமே. அவர் எழுதிய புத்தகங்கள் தலைசிறந்த புத்தகங்களாகக் கருதப்படுகின்றன.
(மீனாட்சியும் இதைத் தானே செய்கிறாள்?எதிர்காலத்தில் அவள் சந்திக்கப்போகும் பிரச்சினை என்ன? அனைத்தையும் புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்து 'ஸ்டெப் மார்க்' வாங்கியே மதிப்பெண்களை குவிக்கப் பழகிக் கொண்ட மாணவ சமுதாயத்திற்கு மத்தியில், மெய்யறிவுடன் கணக்குகளுக்கு நேரடியாக ஒரே வரியில் விடை எழுதினால் ஏற்றுக்கொள்வார்களா? மதிப்பெண் வழங்குவார்களா? இல்லை, ஏதோ தில்லுமுல்லு செய்து ஏமாற்றிவிடயளிக்கிறாள் என்று கூறி நுழைவுத் தேர்வுகளிலிருந்து வெளியேற்றி "நீட்டாக" (neat) வீட்டிற்கு அனுப்பி வைக்கப் போகிறார்களா? நான் இப்பொழுதே தலையைப் பிய்த்துக்கொள்ளத் தொடங்கிவிட்டேன்!)
சினஸ்தீசியாவிற்கு நான் கூறும் முக்கிய உதாரணங்கள் :
- பிறர் கற்பிக்காமலேயே பார்த்த மாத்திரத்தில் எவ்வளவு பெரிய கணக்கிற்கும் நேரடியாக இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகவோ விடை எழுதத் தெரிந்த நம் நாட்டின் கணிமேதை சமீபத்தில் மறைந்த சகுந்தலாதேவி. இவரின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் படமாக வெளிவந்ததே!
- நோபல் பரிசு பெற்ற "கணிதமேதை"ஜான் நாஷ் (John Nash). இவரைப் பற்றிய ஆங்கிலத் திரைப்படம் "பியூட்டிபுல் மைண்ட்" (A Beautiful Mind). ஆஸ்கர் விருதும் பெற்றது! சமிக்ஞைகளாக எதிரிகள் பயன்படுத்தும் எண்வரிசைகளை (encrypted code), பார்த்தமாத்திரத்தில் அவற்றை உடைக்கும் தன்மையைப் பெற்றவராக காட்டியிருப்பார்கள் (natural decrypting ability).இவருக்கு உள்ள பிரச்சனை 'சீக்ஷோபீனியா' (schizophrenia); அதாவது 'உண்மைக்கும் கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்பவர்கள்' என்று குறிப்பிடப்பட்டாலும், இவருக்கு அடிப்படை பிரச்சனை "சினஸ்தீசியா" என்று தான் கூறுவேன். அதாவது, இன்று நவீன போர் விமானங்கள் பயன்படுத்தப்படும் ஹெட்டப் டிஸ்ப்ளே(HUD) மற்றும் ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட் மவுண்டட் டிஸ்ப்ளே போல் பார்க்கின்றவற்றிலெல்லாம் அதன்மீது தனியாக எழுத்துக்களும் எண்களும் உருவங்களும் பொறிக்கப்பட்டது போல் தெரிகின்றன என்றே எண்ணுகிறேன்.
(சீக்ஷோபீனியாவும்,ஆட்டிசமுன் பிரிக்கப்படாமல் இருந்த காலமும் உண்டு!)
ஆட்டிஸம் இல்லாமல் மற்ற வளர்ச்சி ரீதியான பிரச்சனைகளுடன் சவான்டாக இருப்பவர்களைவிட, அதிக அளவில் இருக்கிறார்கள் சவான்டாக இருப்பவர்களுக்கு ஆட்டிஸமும் சேர்ந்திருந்தால். மேலும் அவர்கள் பன்முகத் திறமை கொண்டவர்களாகவும் விளங்குகிறார்கள்-சொல்கிறார்கள் ரிம்லாண்ட் மற்றும் ஃபீன் (1988).
திறமைவாய்ந்த சவான்ட்கள் (Talented Savants): பெரும்பாலும் மனநலக் குறைபாடோ (cognitive impairment) அல்லது ஏதேனும் சில சிறப்பு திறன்களை மட்டும் பெற்றிருக்கும் சவான்ட்களை 'திறமைவாய்ந்த சவான்ட்கள்' என்பர்.
உதாரணம்#1: அமெரிக்காவைச் சேர்ந்த அலன்சோ க்ளிமோன். இவருடைய திறனறிவு (IQ) 40-50 என்ற அளவில் சராசரிக்கும் குறைவானது. ஆனால் இவரால் மிருகங்களைப் பார்த்தால், அவற்றை நினைவில் கொண்டு மிகத் தத்ரூபமாக சிலைகளாக வடிக்க முடிகிறது. ஒவ்வொரு சிலையும் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விலை போகிறது!
உதாரணம்#2: இதேபோல், நான் கல்லூரியில் படித்த காலத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தின் சுற்றுச் சுவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டதாக அறியப்பட்ட ஒரு நபர் கையில் கிடைக்கும் கரித்துண்டு, செங்கல் துண்டு ஆகியவற்றைக் கொண்டு மிக அழகான படங்களை வரைவார். நான் கல்லூரிக்குச் செல்லும் பல நாட்கள் அவற்றை நின்று ரசித்துச் செல்வதுண்டு. சமீபத்தில் கூட கேரளாவின் கொல்லத்தில் இதுபோன்ற ஒரு ஓவியர் தென்பட்டுள்ளார். இவரது வரையும் பாணியையும், வரைந்த ஓவியங்களையும் பார்த்தால் தாம்பரத்தில் வரைந்த நபர் தான் இவரோ என்று எனக்கு தோன்றுகிறது. காணொளி இங்கே!
அதிமேதைகளான சவான்ட்கள்(Prodigious Savants): இவர்களிடம் இருக்கும் சிறப்பு திறமையானது சாதாரண மனிதர்களுக்கு சிறப்பு திறமை வாய்த்தால் அவர்கள் பரிமளிப்பதைவிடவும் பன்மடங்கு உயர்ந்ததாக இருக்கும். உலகம் முழுவதும் பார்த்தால் மொத்தமும் 100 பேர் என்ற கைவிட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இவர்கள் இருக்கிறார்கள்.
உதாரணம்: சென்னைச் சேர்ந்த சிறுவன் விஷால் ஆனந்த் . விஷாலைப் பற்றி ஹார்வர்டு நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர் பேராசிரியை டயானா ஹின்னசி பவல் தன்னுடைய வலைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விஷாலுக்கு யாரும் கற்பிக்காமலேயே பல விஷயங்களும் தெரியும்! பிறவி ஆங்கிலேயர்கள் எழுதுகின்ற அளவிற்கு சிறப்பான ஆங்கிலப் புலமையுடன் கதைகளும்,கவிதைகளும் ஆறு வயதிலேயே எழுதி, புத்தகங்களாக வெளியிடத் தொடங்கி விட்டான். இவனது உதவி கொண்டு சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாசி போன்ற தாவரங்களிலிருந்து எரிபொருள் (algae fuel) தயாரித்துப் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.மேலும் சிறுவன் விஷால் தன்னிச்சையாக சமஸ்கிருத மொழியில் க்ருதிகள் எழுதி, பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடி சமீபத்தில் ஒரு மேடைக் கச்சேரி நிகழ்ந்துள்ளது.
டாக்டர்.டெம்பிள் கிராண்டின் அம்மையார்: ஆட்டிஸம் பாதிப்புடன் சவான்டாக அறியப்படும் கொலராடோ பல்கலைக்கழக விலங்கியல்துறை பேராசிரியை டாக்டர். டெம்பிள் கிராண்டின் அம்மையார் அவர்கள், விலங்கியல் சம்பந்தமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இறைச்சிக் கூடங்களில் கொல்லப்படும் விலங்குகளை வதைக்காமல் கொல்வது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 2010ஆம் ஆண்டில் இவர் பெயரிலேயே ஒரு ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகியுள்ளது.இவர் டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்டின் நெருங்கிய நண்பரும் கூட. அடிக்கடி டிரெஃபர்டின் கருத்தரங்குகளில் பங்கேற்கிறார். இவரது படைப்புகளாக "படங்களாக சிந்திப்பது" (1995) மற்றும் "விலங்குகளுடன் சம்பாஷனை"(2005) ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர "திறமையை மேம்படுத்துதல்: உயர்நிலை ஆட்டிசம் மற்றும் அஸ்பர்ஜர் சின்ட்ரோம் பாதிக்கப் பட்டோருக்கு" என்ற பெயரில் ஒரு புத்தகத்தை டஃப்பியுடன் இணைந்து 2004ல் வெளியிட்டுள்ளார்.
டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட் மற்றும் டாக்டர்.டெம்பிள் கிராண்டின் அம்மையார் (டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்டின் சிறப்பு அனுமதியுடன் உங்களுக்காக!)
இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களென்ன?
டெம்பிள் கிராண்டின் அம்மையார் அவர்கள் மாடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவை தான் காணும் காட்சிகள் அனைத்தையும் புகைப்படங்களாக மனதில் வைத்துக்கொள்ளும் என்று குறிப்பிடுகிறார். இதைத்தான் "போட்டோகிராஃபிக் மெமரி" என்கிறார். இதை நான் கீழ்கண்டவாரு புரிந்துகொள்கிறேன், கிராமங்களில் மாட்டுக்காரன் தான் எப்பொழுதும் பயன்படுத்தும் வழியில் இரவு நேரங்களில் பயணிக்கும்போது சற்று கண்ணயர்ந்து தூங்கி விட்டாலும் மாடு தானாகவே பயணத்தைத் தொடர்ந்து வீட்டிற்கு சரியாகச் சென்று நிற்க வேண்டிய இடத்தில் நின்று விடும்.
மேலும் அந்த அம்மையாரின் மூளையை விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அதில் அவர் இடது மூளையின் பின்பகுதி குறிப்பாக இடது உச்சிக்குழி (left ventricle) அளவில் பெரியதாக உள்ளது. இதனால் மொழி வளர்ச்சிக்கு தேவையான இடது மூளையில் சேதம் ஏற்பட்டு (அல்லது) வளர்ச்சி குன்றி அவரது பேசும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில் இங்கே நான் கவனித்த மற்றொன்று, பாதிப்படைந்த பகுதிகளில் மூளையின் நீர்/திரவம் (Cerebrospinal Fluid) சராசரி மூளையில் இருப்பதை விட அதிக அளவில் தேங்கி உள்ளது. மீனாட்சியின் மருத்துவ அறிக்கையும் கிட்டத்தட்ட இதே பிரச்சனைதான் அவளுக்கும் உள்ளதாகக் காட்டுகிறது.
மீனாட்சி அதிக நேரம் எதையும் தொடர்ந்து பார்ப்பதில்லை அவளுக்கு கற்றல் குறைபாடு (learning disability) இருப்பதாக அவளுடைய ஏபிஏ (ABA )தெரப்பிஸ்ட் முன்பு கூறியதாக சொல்லியிருந்தேன். அவளுக்கு இருப்பதும் "போட்டோகிராஃபிக் மெமரி"தான் என்பதை மேற்கண்ட விஷயங்களை படித்தபிறகு தெரிந்துகொண்டேன்.நான் ஒருநாள் அவளுக்கு பிடித்த விஷயமான ஒரு தரை துடைக்கும் திரவ பாட்டிலை (floor cleaning liquid) இரண்டு நொடிகள் காட்டிவிட்டு மறைத்துக் கொண்டு விட்டேன்.எனது மனைவியிடம் மீனாட்சியின் கையில் பேனாவைக் கொடுத்து பிடித்துக்கொள்ளச் சொல்ல, நான் அவளிடம் பார்த்ததை எழுதச் சொன்னேன். அந்த பாட்டிலில் இருந்த விவரங்கள் அனைத்தையும் வரி விடாமல் சிறு பிழையும் இல்லாமல் மீனாட்சியால் எழுத முடிந்தது. இதைப் படித்து புரிந்துகொண்டு திருப்பி எழுதுவதாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு சராசரி மனிதனுக்கே இரண்டு நிமிடங்களாவது ஆகும். எனவே ஒரு குழந்தை அதிகநேரம் எதையும் கண்கொண்டு கவனிக்கவில்லை (short attention span) என்றால் அதை குறை என்று நினைப்பது நமது தவறே. பார்த்த விஷயங்களை புகைப்படம் போல் மனதில் பதித்து வைத்துக் கொள்ள முடிந்தவர்கள் அதிகநேரம் எதையும் பார்க்கத் தேவையில்லை போலும். அதேவேளையில் உண்மையிலேயே கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிக நேரம் எடுத்து எதையும் பார்க்க மாட்டார்கள். இதில் பிரச்சனை என்னவென்றால் 'எல்லாம் தெரிந்தவர்கள், எதுவும் தெரியாதவர்கள்' என்று இருவேறு துருவங்களாக இருப்பவர்கள் வெளி உலகிற்கு பார்ப்பதற்கு ஒன்று போல் தோன்றுவதால் நிகழும் குழப்பமே இது!
இதையேதான் டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்டின் ஹைப்பர்லெக்சியா கையேட்டில் (Hyperlexia Manual) ஐந்து நிமிடங்கள் ஸ்டீபன் கமரட்டாவுடன் (Five minutes with Stephen Cammarata) என்ற பகுதியில் திரு.ஸ்டீபன் கமரட்டரா (பேராசிரியர்-வான்டர்பில்ட் மருத்துவ மையம்-பேச்சு மற்றும் கேட்டல் துறை) '"ஹைபர் லெக்சியா-பிரிவு#3 (சிறுவயதில் ஆட்டிசம் போன்ற அறிகுறிகளைக் கொண்டு பின்னாளில் பேரறிவுடன் சாதாரணமாக மாறிவிடும் குழந்தைகள்) மற்றும் சவான்ட் சின்ட்ரோம் பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். அதாவது, ஒருவருக்கு அதிக தாகம் எடுக்கிறது என்றால் நாம் அவருக்கு உடனே நீரிழிவு நோயாகத் தான் இருக்குமென முடிவெடுத்து; அதனை உறுதிப் படுத்தத் தேவையான சோதனைகளை மேற்கொள்கிறோம். அதேவேளையில், அந்த நபருக்கு அதிக நீர் வெளியேற்றம் மற்றும் சோர்வின் காரணமாகவும் தாகம் எடுக்கலாம். அறிகுறி ஒன்று தான் ஆனால் பிரச்சினைகள் வெவ்வேறு. எனவே அறிகுறிகளை மட்டும் வைத்து ஆட்டிசம் பாதிப்பு தான் என்று அனைத்து குழந்தைகளையும் கூறுவதற்கு முன் அதிக கவனம் தேவை என்கிறார்.மேலும் பெரும்பாலான பள்ளிகளும் குழந்தைகள் சற்று வித்தியாசமாக செயல்படத் தொடங்கினால், அவர்களுக்கு "ஆட்டிசம்" முத்திரையைக் குத்தி விடுவது தவறு என்றும் சொல்கிறார். அதேபோல், அக்குழந்தைகளுக்கு "ஆடிசத்தை உறுதிசெய்ய மேற்கொள்ளும் திறன் தொடர்பான (IQ Test-பேசுகின்ற குழந்தைகளுக்கு, Development Quotient Test -பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு) சோதனைகள் குழப்பக் கூடியதாக அமையலாம். ஏனென்றால் இக் குழந்தைகளுக்கு இருக்கும் வேறுசில பிரச்சனைகள் உண்மை முடிவுகளை மறைக்கக் கூடியதாக அமையும் என்கிறார்.
மீனாட்சி அதிக நேரம் எதையும் தொடர்ந்து பார்ப்பதில்லை அவளுக்கு கற்றல் குறைபாடு (learning disability) இருப்பதாக அவளுடைய ஏபிஏ (ABA )தெரப்பிஸ்ட் முன்பு கூறியதாக சொல்லியிருந்தேன். அவளுக்கு இருப்பதும் "போட்டோகிராஃபிக் மெமரி"தான் என்பதை மேற்கண்ட விஷயங்களை படித்தபிறகு தெரிந்துகொண்டேன்.நான் ஒருநாள் அவளுக்கு பிடித்த விஷயமான ஒரு தரை துடைக்கும் திரவ பாட்டிலை (floor cleaning liquid) இரண்டு நொடிகள் காட்டிவிட்டு மறைத்துக் கொண்டு விட்டேன்.எனது மனைவியிடம் மீனாட்சியின் கையில் பேனாவைக் கொடுத்து பிடித்துக்கொள்ளச் சொல்ல, நான் அவளிடம் பார்த்ததை எழுதச் சொன்னேன். அந்த பாட்டிலில் இருந்த விவரங்கள் அனைத்தையும் வரி விடாமல் சிறு பிழையும் இல்லாமல் மீனாட்சியால் எழுத முடிந்தது. இதைப் படித்து புரிந்துகொண்டு திருப்பி எழுதுவதாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு சராசரி மனிதனுக்கே இரண்டு நிமிடங்களாவது ஆகும். எனவே ஒரு குழந்தை அதிகநேரம் எதையும் கண்கொண்டு கவனிக்கவில்லை (short attention span) என்றால் அதை குறை என்று நினைப்பது நமது தவறே. பார்த்த விஷயங்களை புகைப்படம் போல் மனதில் பதித்து வைத்துக் கொள்ள முடிந்தவர்கள் அதிகநேரம் எதையும் பார்க்கத் தேவையில்லை போலும். அதேவேளையில் உண்மையிலேயே கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிக நேரம் எடுத்து எதையும் பார்க்க மாட்டார்கள். இதில் பிரச்சனை என்னவென்றால் 'எல்லாம் தெரிந்தவர்கள், எதுவும் தெரியாதவர்கள்' என்று இருவேறு துருவங்களாக இருப்பவர்கள் வெளி உலகிற்கு பார்ப்பதற்கு ஒன்று போல் தோன்றுவதால் நிகழும் குழப்பமே இது!
இதையேதான் டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்டின் ஹைப்பர்லெக்சியா கையேட்டில் (Hyperlexia Manual) ஐந்து நிமிடங்கள் ஸ்டீபன் கமரட்டாவுடன் (Five minutes with Stephen Cammarata) என்ற பகுதியில் திரு.ஸ்டீபன் கமரட்டரா (பேராசிரியர்-வான்டர்பில்ட் மருத்துவ மையம்-பேச்சு மற்றும் கேட்டல் துறை) '"ஹைபர் லெக்சியா-பிரிவு#3 (சிறுவயதில் ஆட்டிசம் போன்ற அறிகுறிகளைக் கொண்டு பின்னாளில் பேரறிவுடன் சாதாரணமாக மாறிவிடும் குழந்தைகள்) மற்றும் சவான்ட் சின்ட்ரோம் பற்றிக் குறிப்பிடுகையில், ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். அதாவது, ஒருவருக்கு அதிக தாகம் எடுக்கிறது என்றால் நாம் அவருக்கு உடனே நீரிழிவு நோயாகத் தான் இருக்குமென முடிவெடுத்து; அதனை உறுதிப் படுத்தத் தேவையான சோதனைகளை மேற்கொள்கிறோம். அதேவேளையில், அந்த நபருக்கு அதிக நீர் வெளியேற்றம் மற்றும் சோர்வின் காரணமாகவும் தாகம் எடுக்கலாம். அறிகுறி ஒன்று தான் ஆனால் பிரச்சினைகள் வெவ்வேறு. எனவே அறிகுறிகளை மட்டும் வைத்து ஆட்டிசம் பாதிப்பு தான் என்று அனைத்து குழந்தைகளையும் கூறுவதற்கு முன் அதிக கவனம் தேவை என்கிறார்.மேலும் பெரும்பாலான பள்ளிகளும் குழந்தைகள் சற்று வித்தியாசமாக செயல்படத் தொடங்கினால், அவர்களுக்கு "ஆட்டிசம்" முத்திரையைக் குத்தி விடுவது தவறு என்றும் சொல்கிறார். அதேபோல், அக்குழந்தைகளுக்கு "ஆடிசத்தை உறுதிசெய்ய மேற்கொள்ளும் திறன் தொடர்பான (IQ Test-பேசுகின்ற குழந்தைகளுக்கு, Development Quotient Test -பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு) சோதனைகள் குழப்பக் கூடியதாக அமையலாம். ஏனென்றால் இக் குழந்தைகளுக்கு இருக்கும் வேறுசில பிரச்சனைகள் உண்மை முடிவுகளை மறைக்கக் கூடியதாக அமையும் என்கிறார்.
உண்மைதான்! நாங்கள் மீனாட்சிக்கு மேற்கொண்ட வருடாந்திர சோதனைகளில் (DQ Test) முதலாம் ஆண்டு அவளுக்கு மிகக் குறைந்த அளவு ஆட்டிசம் (mild autism), இரண்டாம் ஆண்டு மிதமான அளவு ஆட்டிசம் (modrate level) என்றே முடிவுகள் வந்தது. இதன் முக்கிய காரணம், வயதிற்கு ஏற்ப பேச்சுத்திறன் வளராததால் அவளது பெரும்பாலான மதிப்பீடுகள் அதை ஒட்டியே அமைந்ததால் அவளுக்கு மதிப்பெண்கள் குறையத் தொடங்கின.
அதேவேளையில் அவள் எழுதத் தெரிந்த குழந்தை என்று நாங்கள் கூறினாலும், அவர்களுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டாள். இதில் நான் உணர்ந்த முக்கியமான காரணம் இக்குழந்தைகளை சோதித்து ஒரே நாளில் மதிப்பிடுவது மிகவும் சிரமம்; அவர்கள் பழகியவரிடம் ஒரு மாதிரியும், தெரியாதவர்களிடம் ஒரு மாதிரியும் நடந்துகொள்வார்கள். இதை சோதித்த தெரப்பிஸ்களே ஒப்புக் கொள்கிறார்கள். மேலும், வீட்டில் இருப்பது ஒரு போல் வெளியிடங்களில் நடந்து கொள்ள மாட்டார்கள். இது பொதுவாக அனைத்து குழந்தைகளுமே பொருந்தக்கூடிய குணம் தானே? என்ன சாதாரண குழந்தைகள் சற்று சமாதானம் செய்தால் சொல் பேச்சுக் கேட்பார்கள்.ஆனால் இவர்களை சமாதானம் செய்வது அத்தனை சுலபமல்லவே!
ஐன்ஸ்டின் சின்ட்ரோம் (EINSTEIN SYNDROME): என்னைப்போலவே மருத்துவத்துறைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர் பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான தாமஸ் சொவல் (Thomas Sowell).என்ன செய்வது! நான் பள்ளியில் படித்த காலத்திலேயே பிற்காலத்தில் என் மகளுக்கு இது போன்ற வினோதமான பிரச்சினை வரும் என்று தெரிந்திருந்தால் அப்பொழுதே சோம்பேறித் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒழுங்காக மருத்துவம் படித்து நரம்பியல் துறையில் மேற்படிப்பு மேற்கொண்டு நிச்சயம் ஒரு தீர்வைக் கண்டிருப்பேன். எங்கள் வீட்டில் கூட அடிக்கடி சொல்வார்கள் "கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமென்று!".
சரி... விஷயத்துக்கு வருவோம்! தாமஸ் சொவலின் மகனுக்கும் மேற்கண்ட பாதிப்புகள் இருந்துள்ளது. மேலும் பேச்சும் தாமதமாகத்தான் வந்துள்ளது. இதைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர் இளம் வயதிலேயே மிகுந்த அறிவைக் கொண்டிருப்பது, வளர்ச்சி நிலைகளில் தாமதம் ஏற்பட்டிருப்பது மற்றும் பேச்சு தாமதமாக வந்தது போன்ற குணாதிசயங்கள் இளம் வயது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை ஒத்திருப்பதால்; இந்தப் பிரச்சனைக்கு "ஐன்ஸ்டீன் சின்ட்ரோம்"என்று பெயரிட்டு புத்தகமும் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளது, படித்த குடும்பங்களில் குறிப்பாக பொறியியல், டாக்டர் பட்டம், கணிதம், இசை, அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் உயர்கல்வி படித்த பெற்றோர்-ஆகியோருக்கே பெரும்பாலும் சவான்ட் சின்ட்ரோம் (பேரறிவு) கொண்ட குழந்தைகள் பிறக்கிறார்களாம்.
ஆம்! எங்கள் குடும்பத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் அதிகம். இதேபோல் இசையிலும் இசைக் கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவர்களும் அதிகம். எனக்குக் கூட மூன்று நான்கு வயதிலேயே 40க்கும் மேற்பட்ட ராகங்களை அடையாளம் காணத் தெரிந்திருந்தது. என்னை "மழலை மேதை"(child prodigy) என்று சொல்லியிருக்கிறார்கள் (இன்று என்னைப் பார்த்தால் சொன்னதற்கு வருத்தம் தெரிவித்து "வாபஸ்" பெற்றுக் கொள்வார்கள்!). அதேபோல் நான் அதிக சுட்டித்தனம் செய்வேன். வெகு சீக்கிரத்திலேயே பேசியிருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் பிறந்திருந்தால் எனக்கும் "ஹைபர் ஆக்டிவ் குழந்தை" என்ற முத்திரை விழுந்திருக்கும். அதேபோல் எனக்கு சிறுவயதில் OCD (Obsessive Compulsive Disorder) இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது!வீட்டைப் பூட்டினாலோ அல்லது காரைப் பூட்டினாலோ நான் ஐந்தாறு முறை சென்று 'பூட்டியுள்ளது' என்பதை உறுதி செய்து கொள்வேன்.பிறர் கிண்டல்செய்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக வெளியிடங்களில் சற்று குறைத்துக் கொள்வேன். இதே பிரச்சனை மீனாட்சிக்கும் உள்ளது. அடுத்தகட்ட பரிமாணமாக!
அதேபோல் என்னிடமிருந்து அவளுக்கு மரபு வழியாகப் புகுந்த நல்ல விஷயம்: ரைம்ஸ்களையும் குத்துப் பாடல்களையும் மட்டுமே யூடியூப்பில் கேட்டு வளர்ந்த மீனாட்சிக்கு என்னைப் போலவே கர்நாடக சங்கீத ராகங்களை அடையாளம் காணத் தெரிகிறது.அதைவிட எங்களுக்கே தெரியாத மேற்கத்திய இசைக் குறிப்புகளையும் எழுதத் தெரியுமென்கிற விஷயம் நான் அவளுக்கு சமீபத்தில் மேற்கொண்ட கைரேகை சோதனை(Dermatoglyphic Test) மூலம் தான் வெளிப்பட்டது.
ஐன்ஸ்டீனின் திருடப்பட்ட மூளை சொல்லும் ரகசியங்கள்: ஐன்ஸ்டீன் இறந்தபிறகு அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் தாமஸ் ஹார்வி (Thomas Harvey) அவரது குடும்பத்தாருக்கு தெரியாமல் ஐன்ஸ்டீனின் மூளையைத் திருடி, பல சிறு துண்டுகளாக வெட்டி, பதப்படுத்தி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தன்னகத்தே ஆய்விற்காக வைத்திருந்திருக்கிறார். ஐன்ஸ்டீனின் மூளையில் சில மடிப்புகள் இயற்கையிலேயே தோன்றவில்லை என்றும், அதை சமன் செய்யும் விதமாக சராசரி மனிதர்களை விட 17 சதவீதம் அவர் மூளையில் அதிக அளவிலான நியூரான்கள் தோன்றி இருந்ததாகவும் கூறுகிறார். இதுதான் அவரின் பேரறிவிற்குக் காரணமோ?
அதேபோல், ஐன்ஸ்டீனின் வலது மற்றும் இடது மூளையின் மின் சமிக்ஞைகளை பரிமாற உதவும் இணைப்பான கார்பஸ்கலோசம் (corpuscollosum) பகுதி; அளவில் மிகப்பெரியதாக கிட்டத்தட்ட மூளையின் முன் பகுதியிலிருந்து கழுத்துப் பகுதி வரை நீண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.செய்தி இங்கே!
கவனிக்க: நான் முதலில் குறிப்பிட்ட கிம் பீக்கிர்க்கு (Kim Peek)கார்பஸ்கலோசமே இல்லாததால் அவரது மூளையின் வலது மற்றும் இடது பகுதிகள் தனித்தனியாக இரண்டு மூளைகள் போல் செயல்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தேன்.இந்தப் பிரச்சனைக்கு 'அக்னஸிஸ் ஆஃப் கார்பஸ்கலோசம்'(Agenesis of corpus callosum) என்று பெயர்.
- ஆட்டிசம், ஹைபர்லெக்சியா, சவான்ட்சின்ரோம், ஹைபர் ஆக்டிவிட்டி, டவுன் சின்றோம் போன்ற நரம்பியல் மற்றும் வளர்ச்சி நிலை குறைபாடுகள் தனியாகவும் வரலாம், ஒன்றுடன் ஒன்று கலந்தும் வரலாம். பெரும்பாலும் 2-3 வயதில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக அறியப்படும் குழந்தைகளை ஆறு ஏழு வயதில் பரிசோதிக்கும்போது ஏதேனும் ஒரு பிரச்சினையுடன் மட்டும் தான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் மூளையின் வளர்ச்சிக்கு ஏற்ப பிரச்சனைகளின் தீவிரம் குறைகிறது.
- பெரும்பாலும் ஆட்டிசம் மற்றும் ஹைபர் ஆக்டிவிட்டி உள்ள குழந்தைகள் காய்ச்சல் போன்ற நேரங்களில் மட்டும் சொல்பேச்சு கேட்டு எல்லாக் குழந்தைகளையும் போல் சாதாரணமாக செயல்படுகிறார்கள். இதை மீனாட்சி விஷயத்தில் நானும் கவனித்திருக்கிறேன்.
- அதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும் எம்.எம்.ஆர் (MMR )போன்ற தடுப்பூசிகள்தான் ஆட்டிஸமும் ஹைப்பர் ஆக்டிவிட்டியும் ஏற்படக் காரணம் என்று நம்பப்படுவது மிகப்பெரிய தவறு. தடுப்பூசி வழங்கப்படாத குழந்தைகளுக்கு பின்னர் சில பிரச்சனைகள் வந்தால் கையாள்வது மிகவும் கடினமே!
- ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் கண்பார்வையை சோதிப்பது மிகவும் அவசியம். இவையெல்லாம் நரம்பியல் தம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்பதால் கண் நரம்புகளையும் பாதிக்கலாம்.
- பெரும்பாலான தெரப்பிஸ்டுகள் குழந்தைகளுக்கு அதிக இனிப்புள்ள மிட்டாய்கள், பிஸ்கட்டுகள் மற்றும் சர்க்கரையுள்ள பானங்களை தவிர்க்கச் சொல்கறார்கள்.சர்க்கரையானது ஏற்கனவே உடலில் அதிக சக்தியுள்ள 'ஹைப்பர் ஆக்டிவ்' குழந்தைகளுக்கு மேலும் சக்தியை அதிகரிக்கிறது.எனவே தவிர்க்க வேண்டுமென்கிறார்கள். அதேபோல் க்ளூட்டன் நிறைந்த மாவுப் பொருட்களையும், ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தவிர்க்கச் சொல்கிறார்கள்.
- மேலும் 'வைட்டமின் டி' குறைபாடே ஆன்ட்டிஸ் அதற்கு காரணம் என்றும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் அது போன்ற வைட்டமின்களை கொடுப்பதாக இருந்தால் கண்டிப்பாக தங்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்கவும்.
- சமீபத்தில் நான் படித்த ஓர் ஆய்வறிக்கையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவிட்டி போன்ற பாதிப்புகள் குறைவென்றும். மேலும் பால் பவுடர் மற்றும் சமன் படுத்தப்பட்ட பாக்கெட் பால்களை (toned milk) தவிர்த்தல் நலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
வளர்பிறை தேய்பிறைக்கும்- மனநல மற்றும் நரம்பியல் பாதிப்புகளுக்கும் உள்ள தொடர்பு:
சந்திரமா மனஸோ ஜாத - ஒருவரின் மனநிலைக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் ஸ்லோகம்.
பொதுவாக மனநல பாதிப்பு உள்ளவர்கள் பௌர்ணமி போன்ற நாட்களில் உக்கிரம் அடைவதாக பழங்காலம் தொட்டு நமது நாட்டில் சொல்வதுண்டு.
நவீன விஞ்ஞானம் சொல்வதென்ன? அதாவது கடலானது பௌர்ணமி போன்ற தினங்களில் பொங்குவதற்கு காரணம் சந்திரனின் ஈர்ப்பு விசையே. அதேபோல் 75% நீராலான மனித உடலில் "கிரிப்டோக்ரோம்" என்ற புரதம் உள்ளது.இதுவே உடலின் சுழற்சி கடிகாரத்தை (circadian rhythm) இயங்கச் செய்யவல்லது. நமக்கு இரவையும், பகலையும் உணரச் செய்கிறது. இந்தப் புரதம் ஃபிளாவின்(flavin) என்ற ஒளியை இழுக்கக் கூடிய மூலக்கூறுடன் சேரும்போது அதற்கு காந்தங்களுடன் சேரக் கூடிய தன்மை கிடைக்கிறது. இதுவே இரவையும், பகலையும் உடலுக்கு சொல்கிறது.
பௌர்ணமி போன்ற நாட்களில் உடலில் இருக்கும் திரவங்கள் சந்திரனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் பொழுது, உடலின் சுழற்சி கடிகாரத்தை பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கிறது.
பௌர்ணமி போன்ற நாட்களில் உடலில் இருக்கும் திரவங்கள் சந்திரனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் பொழுது, உடலின் சுழற்சி கடிகாரத்தை பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு பிரச்சனைகள் அதிகரிக்கிறது.
ஏன் எல்லாம் தெரிந்தும் மீனாட்சி போன்ற சில குழந்தைகளால் தனியாக எழுத முடியவில்லை?
நான் முன்பே குறிப்பிட்டதுபோல் மீனாட்சி வளர்ச்சி நிலைகளில் நீஞ்சிவிட்டு தவழாமல் ஒரு வயதிற்கு மேல் நேரடியாக நடக்கத் தொடங்கிவிட்டாள்.
நான் இதுபற்றி புரிந்து கொண்டது: எழுதுவதற்கு தோள்களில் பலம் வேண்டும். தவழாத குழந்தைகளுக்கு தோள் பலம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு எழுதுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இன்றுவரை மீனாட்சிக்கு தோள் வலிமை சேர்க்க நாங்கள் சிறப்புப் பயிற்சிகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அவள் தனியாக எழுதினாலொழிய அவளது திறமையை யாரும் புரிந்து கொள்ள போவதில்லை. நாங்களே எழுதிவிட்டு அவள் எழுதுவதாக பொய் சொல்கிறோம் என்றே சொல்வார்கள்!
அதே நேரத்தில் இக்குழந்தைகளை தனியாக எழுத வைக்க பயிற்றுவிக்கும் பொழுது மேஜையில் அமர்ந்தால், இவர்களின் கால்களை தொங்க விடாமல் கீழே ஒரு பலகையை வைத்தால் முன்னேற்றம் ஏற்படும் என்றும், மேலும் செங்குத்தாக கரும்பலகையில் (black board) எழுதும்போது தன்னிச்சையாகவே எழுதுகிறார்கள் என்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தாய்மார்கள் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
9. ஹைபர்லெக்சியா (Hyperlexia)-பிறர் கற்பிக்காமலேயே எழுதப்படிக்கத் தெரிவது!
"ஹைபர்லெக்சியா" (Hyperlexia) என்பது குழந்தைகளிடம் காணப்படும் மிக அரிதான ஒரு பிரச்சனை என்றும், அது டிஸ்லெக்சியா (dyslexia) என்ற பொதுவான கற்றல் குறைபாடுள்ள பிரச்சனைக்கு நேர் எதிரானது என்று தெரிந்துகொண்டேன். அதாவது அதீதமான அறிவுடன் எழுத்துக்களையும் எண்களையும் அறியக்கூடிய தன்மை என்பதே அதன் பொருள்.
இது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
பிரிவு-1: இந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆட்டிஸம் போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சாதாரணமாக (neurotypical) இருப்பதுடன் அதீத அறிவுடன் எழுத்துக்களையும் எண்களையும் கையாளக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் கூட செய்தித் தாள்களிலும் தொலைக் காட்சிகளிலும் 4 வயதுடைய சிறுவன் திருக்குறளின் எந்த அதிகாரத்திலிருந்து எந்தக் குறளைக் கேட்டாலும் ஒப்பிப்பதைப் பார்த்திருப்போம். சில குழந்தைகள் அனைத்து நாடுகளின் தலைநகரங்களையும் தலைகீழாக ஒப்பிப்பார்கள்.
இது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
பிரிவு-1: இந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆட்டிஸம் போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சாதாரணமாக (neurotypical) இருப்பதுடன் அதீத அறிவுடன் எழுத்துக்களையும் எண்களையும் கையாளக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் கூட செய்தித் தாள்களிலும் தொலைக் காட்சிகளிலும் 4 வயதுடைய சிறுவன் திருக்குறளின் எந்த அதிகாரத்திலிருந்து எந்தக் குறளைக் கேட்டாலும் ஒப்பிப்பதைப் பார்த்திருப்போம். சில குழந்தைகள் அனைத்து நாடுகளின் தலைநகரங்களையும் தலைகீழாக ஒப்பிப்பார்கள்.
பிரிவு -2: இந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆட்டிஸம் போன்ற பிரச்சனைகளுடன் முதல் பிரிவில் கூறியது போல் அதீத அறிவுடன் செயல்படக்கூடியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிவு-3: இப்பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் ஆட்டிஸம் போன்ற பிரச்சனைகளின் அறிகுறி தென்பட்டாலும், வளர வளர முதல் பிரிவினரைப் போல் பிரச்சனை ஏதும் இல்லாமல் சாதாரண குழந்தைகள் போல் (neurotypical) ஆகிவிடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்குழந்தைகள் கடிகாரத்தை பார்க்காமலேயே நேரத்தை கடைபிடிப்பவர்கள் என்றும், ஒரே ஒரு முறை ஒரு இடத்திற்கு சென்று வந்தாலே அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு; மீண்டும் அதே இடத்திற்கு செல்ல நேர்ந்தால் செல்ல வேண்டிய திசையையும் வழிகளையும் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர பிறருடன் கண்ணோடு கண் பார்ப்பது, அன்பை வெளிப்படுத்துவது ஆகியவற்றில் ஹைபர்லெக்சியா இரண்டாவது பிரிவினரை விட இவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பிரிவு மீனாட்சிக்கு மிகச் சரியாகப் பொருந்தும் என்றே எனக்குத் தோன்றியது. காரணம் நான் முன்பு குறிப்பிட்டது போல் அவள் ஞாயிற்றுக்கிழமையானாலும் சரியாக பள்ளிக்குச் செல்லும் நேரம் தாண்டும்போது ஸ்கூல் பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவாள். அவளுக்குப் பள்ளி விடுமுறை என்பதை சொல்லி புரிய வைக்க தான் நாங்கள் படாதபாடு படுவோம். அதேபோல் பள்ளி நேரம் முடிந்து நாங்கள் என்றாவது அவள் பள்ளி இருக்கும் திசை பக்கம் சென்றால், அவள் பள்ளி வரும் 2 தெருக்களுக்கு முன்பே அழத் தொடங்கி விடுவாள்.(நாங்கள் வேறு வழியில் வந்தால் கூட கண்டுபிடித்து விடுவாள்!). எங்களுக்குத் தான் காரணம் புரியாது. அதேபோல் அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் கடை, பீட்சா கடை என்று அனைத்தையும் நினைவில் வைத்திருப்பாள் போலும்! நாங்கள் அந்தப் பக்கம் செல்லும்போது திடீரென வண்டியிலிருந்து குதிக்க முற்படுவார்கள். நாங்கள் அவளை அதட்டி மீண்டும் வண்டியில் உட்கார வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும். சில சமயங்களில் நாங்கள் நடந்து வரும் பட்சத்தில் அவள் எங்களை பிடித்துத் தள்ளி கடையை நோக்கி திருப்பி விடுவாள். அதேபோல் நான் முன்பே குறிப்பிட்டதுபோல் எங்கள் வீட்டின் 'லிப்ட்' எந்த தளத்தில் உள்ளது, எனது கம்ப்யூட்டர் மானிட்டரின் லோகோவை இவள் பிய்த்து எடுத்தது, தொலைக்காட்சியின் சேனலை மாற்றச் சொல்லி அடம்பிடித்தது, டிவியில் திரைப்படங்கள் முடியும்போது அதில் ஓடும் பெயர்களை வரிவிடாமல் அருகில் சென்று பார்ப்பது என்று தனக்கு எழுதப்படிக்கத் தெரியும் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கிறாள். நமக்கு தான் அவளது செயல்பாடுகள் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது! அதேபோல் நான் முதலில் குறிப்பிட்டது போல் அமெரிக்காவிலிருந்து எனது தாயார் வாங்கி வந்த 'ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பால்' என்று எழுதிய புத்தகங்களை அவள் தூக்கி எறிந்ததை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அவளது செயல்களுக்கு காரணம் புரியாமல் நாம் முழிக்கும் போது அவளால் அதை பேசி புரிய வைக்க முடியாத காரணத்தால் அது கடும் கோபமாக வெளிப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால் அவளுக்கு பிறந்தது முதலே எழுதவும் படிக்கவும் தெரியும். அவளின் அறிவிற்கு A,B,C,D எல்லாம் சிறுபிள்ளைத் தனமாக தெரிந்திருக்கிறது. அவளுக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகள் தெரியும் என்ற உண்மை எனக்கு போகப் போகத்தான் தெரிந்தது. அவை இந்திய மொழிகள் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மிகத் தொன்மையான மொழிகளையும் அதன் பழைய எழுத்து வடிவங்களையும் கூட அவள் நன்கு அறிவாள் என்ற உண்மை புரிய தொடங்கியபோது எனக்கும் என் மனைவிக்கும் பயத்தில் உடல் நடுங்கியது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் இரவு நேரங்களில் துங்காமல் இதுபற்றி இன்டர்நெட்டில் நான் தேடத் தேடப் பல ஆச்சரியங்கள் எனக்குக் காத்திருந்தது. அதுவரை நொந்து அழுத எனது கண்கள் முதல் முறையாக ஆனந்தக் கண்ணீரைக் கண்டது. அவளைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த 'ஆட்டிஸம்' என்ற மாயபிம்பம் சுக்கு நூறாக உடையத் தொடங்கியது. இதையெல்லாம் அவளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? சொல்லிக் கொடுத்தால் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடிய குழந்தையா அவள்? அவளிடம் மேற்கொண்டு கூட்டல் கழித்தல் என்று கேட்டுப் பார்த்தால் இரண்டு இலக்கக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாம் பார்த்த மாத்திரத்தில் நேரடியாகவே விடைகளை எழுதுகிறாள். ஆனால் அவளது கையை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். தனியாக விட்டு விட்டால் அவள் கிறுக்கத் தொடங்கி விடுவாள் (இந்த சவால் இன்றுவரை எங்களைத் தொடர்கிறது!). இவளுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பதைத் தாண்டி சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களைப் பெற்றிருக்கிறாள் என்ற விஷயங்களை உணரத் தொடங்கினோம். எது? நான் முன்பு சொன்னது போல் 'அவள் கையைப் பிடித்தால் நான் என்ன நினைக்கிறேனோ அதை கேட்டு முடிப்பதற்குள்ளேயே அதற்கான விடையை எழுத தொடங்கி விடுவாள் 'என்று குறிப்பிட்டிருந்தேனே? அது தான்! இதுபோன்ற ஆற்றல்களைப் பெற்றவர்களை சவான்ட் (savant )என்று சொல்கிறார்கள். சவான்ட் என்ற பிரென்ஞ்சு வார்த்தைக்கு "கற்றறிந்தவர்" என்று பொருள். "ஞானி" என்ற பொருளும் பொருந்தும். எனவே சில குழந்தைகளுக்கு ஹைப்பர்லெக்சியா(Hyperlexia)வோடு சவான்ட் சின்ட்ரோம்(Savant syndrome) பிரச்சனையும் சேர்ந்து கொள்கிறது. இனி இவற்றையெல்லாம் பிரச்சனைகள் என்றுதான் சொல்ல வேண்டுமா? என்ன செய்வது ஒரு குழந்தைக்கு ஒன்றுமே தெரியாவிட்டால் அது எவ்வளவு பெரிய பிரச்சனையோ, அதேபோல் அளவுக்கு அதிகமாக எல்லாமே தெரிந்திருந்தால் அதுவும் பிரச்சனை தானே?!
டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்(Dr.Darold Treffert): சரி, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று இன்டர்நெட்டை அலசிய போது கிடைத்த பெயர் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், மனநல மருத்துவருமான டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்(Dr.Darold Treffert). இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹைப்பர்லெக்சியா(Hyperlexia) மற்றும் சவான்ட் சின்ட்ரோம்(Savant syndrome) பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 300க்கும் மேற்பட்ட இப்பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளை சந்தித்து; அவர்களைப் பற்றிய தகவல் களஞ்சியமே வைத்திருக்கிறார். மேலும் "ஆட்டிஸம்" என்ற பிரச்சனையை கண்டறிந்த மருத்துவர் டாக்டர்.லியோ கானரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர். இது தவிர அமெரிக்க மனநல மருத்துவர் சங்க தலைவராகவும் இருந்திருக்கிறார். இவரது முக்கிய நோயாளியான கிம் பீக்(Kim Peek) என்பவரைப் பற்றி ஹாலிவுட் இயக்குனர் பேரி லெவிசன் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் டஸ்டின் ஹஃப்மேன் மற்றும் டாம் குரூஸை வைத்து அவர் இயக்கிய ரெயின் மேன் (Rain Man) என்ற திரைப்படம் 1988ல் ஆஸ்கர் விருது பெற்றதாகவும் அறிந்தேன். உடனே அந்த மருத்துவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு மீனாட்சி பற்றிய முழுக் கதையையும், ஸ்கேன் செய்த ரிப்போர்ட்களுடன் அவருக்கு எழுதி அனுப்பியிருந்தேன். ஓரிரு நாட்களுக்குள் எனக்கு அவரிடமிருந்து மிக விரிவான ஒரு மின்னஞ்சல் வந்தது. மீனாட்சிக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அந்த மருத்துவர் எனக்கு ஒருசில முக்கியமான விஷயங்களைக் கூறினார். எடுத்ததுமே "நீ தெரிந்தோ தெரியாமலோ ஒரு விஷயத்தை மிகச்சரியாக செய்திருக்கிறாய்! நான் அனைவரிடமும் சொல்வது என்னவென்றால் நீங்கள் ஒரே நேரத்தில் பேச்சு பயிற்சி(Speech), ஆக்குபேஷனல் தெரப்பி(OT) மற்றும் ஏபிஏ(ABA)என்று மூன்றையும் ஒரே நேரத்தில் கொடுக்கும்படி பரிந்துரைப்பேன்" என்றார் (மேற்கண்ட விஷயங்களை நான் ஒரே நேரத்தில் செய்ததற்காக நம்மூர் தெரப்பிஸ்டிடம் திட்டு வாங்கியது எனக்கு நினைவுக்கு வந்தது!).
டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட் (புகைப்படம் அவரது சிறப்பு அனுமதியுடன் உங்களுக்காக!)
மேலும் "நீ இதுவரை கூறியது மிகவும் குறைவு. அவள் வளர வளர அவளது மூளையும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது! இனிமேல் தான் உனக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. இனி நான் செய்யப்போவது பிரச்சனையை அதன் போக்கிலேயே விட்டு விட்டு கண்காணிக்கப் போகிறேன். என்னென்ன அதிசயங்கள் நடக்கப்போகிறது என்று நீயும் பார்க்கத்தான் போகிறாய்" என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் யாருக்கெல்லாம் மூளையின் அமைப்பில் வேறுபாடுகள் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் மூளையின் செயல்பாடுகளிலும் வேறுபாடு இருக்கும். இதன் காரணம் மூளையில் இருக்கும் நியூரான்களின் கட்டமைப்பு இவர்களுக்கு சிக்கல்கள் நிறைந்ததாக வித்தியாசமான இணைப்புகளை கொண்டதாக இருக்கும். உன் மகளுக்கு தலையிலுள்ள கால்போகஃபாலி (colphocephaly) போன்ற பிரச்சனைகள் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். (அதாவது மீனாட்சிக்கு மூளையில் நீர் (Cerebropinal Fluid) சுரக்கும் உச்சிக் குழி [rear ventricle] இயல்பைவிட அளவில் பெரிதாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது). எனது நோயாளி கிம் பீக்கிற்கு மூளையின் அமைப்பு மிகவும் வித்தியாசமானது. அவரது மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளை இணைக்கும் பாலமான "கார்ப்பஸ் கொலோசம்" (corpuscollosum) என்ற பகுதி விடுபட்டிருந்தது. அவரது நடவடிக்கைகள் ஆட்டிஸம் போலக் காட்சியளித்தது. உண்மையில் அவருக்கு ஆட்டிஸம் கிடையாது. ஆனால் சில நுட்பமான வேலைகளைச் (fine motor issue) செய்வதில் அவருக்கு இறுதிவரை பிரச்சனை இருந்தது. அதாவது கிம் பீக்கிற்கு மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளை சேர்க்கும் இணைப்பு இல்லாததால் அவருக்கு மூளையே இரண்டு தனித்தனி மூளைகள் போல் இயங்கும் திறனைப் பெற்றிருந்தது. அவரால் ஒரே நேரத்தில் 'சிவாஜி' திரைப்பட ரஜினிபோல் இரண்டு புத்தகங்களை இரண்டு கண்களாலும் தனித்தனியே படித்து, அதிலுள்ள விஷயங்கள் அனைத்தையும் மொத்தமாக மூளையில் சேர்த்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் இவரிடம் அமெரிக்காவின் எந்த ஊரின் அஞ்சல் குறியீட்டு எண்ணைச் (Zip Code) சொன்னாலும் ஊரின் பெயரைச் சொல்லிவிடுவார்.
இப்பொழுது எனக்கு தெரிந்த ஹைப்பர் லெக்சியா பிரிவு -1க்கு உதாரணம் பார்க்கலாம் (பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் அதிக அறிவுடன் செயல்படும் சாதாரணக் குழந்தைகள்). நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சென்னையில் உள்ள மாதர் அரிமா சங்கத்தின் (Lioness Club) சார்பில் நடத்தப்பட்ட ஒரு பேச்சுப்போட்டியில் பங்கெடுத்து கொள்ள நான் சென்றபோது, அங்கே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் முன்பு குடியிருந்தவரின் மகள் காயத்ரி என்ற மூன்றரை வயதுக் குழந்தை. அந்த குழந்தையின் அப்பா என்னிடம் சொன்னார் "அவள் தானாகவே எழுதப்படிக்கக் கற்றிருக்கிறாள். அதுதான் மாதர் அரிமா சங்கத்தின் சார்பில் அவளை கௌரவிக்க இங்கே அழைத்து வந்திருக்கிறோம்" என்றார். அதே நேரத்தில் அந்த குழந்தையைப் பற்றி பிரபல தொலைக்காட்சி சேனலிலும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அப்பொழுது அக்குழந்தையை ஆய்வு செய்த பிரபல நரம்பியல் நிபுணர் 'அமரர்' திரு.B .ராமமூர்த்தி அவர்கள் அந்தக் குழந்தையின் தலையில் உள்ள கெமிக்கல்களின் அளவுகள் சராசரி மனிதர்களிலிருந்து மாறுபட்டு இருப்பதாகக் கூறியிருந்தார்.
இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்! டாக்டர் டிரெஃபர்ட் சொல்லுகிறார் மூளையின் அமைப்பிலுள்ள வித்தியாசமே (திடப் பொருள்) இதற்கு காரணமென்று. நம்மூர் மருத்துவர் சொல்கிறார் மூளையில் உள்ள கெமிக்கல்கள் தான் (திரவங்களின் அளவே) காரணமென்று. எது சரி என்று கேட்கிறீர்களா?! சற்று பொறுங்கள்! எனது ஆய்வின் நோக்கமே உண்மைக் காரணத்தை அறிவது தான்.
மேலும் அந்தக் குழந்தையின் தந்தை சில நாட்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்த போது அவருடைய கொள்ளுத் தாத்தா இதேபோல் பெரிய மேதையாக வாழ்ந்தவர் என்றும் அவர்தான் தனக்கு மகளாகப் பிறந்திருப்பதாக ஒருஜோசியர் சொன்னதாகச் சொன்னார். மேலும் குழந்தையை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதை தாம் முற்றாக நிறுத்தி விட்டதாகவும், பெரிய மேடைகளில் அதிக ஒளி உமிழும் விளக்கங்களுக்கு (floodlight) முன்னால் குழந்தையை நிறுத்துவது குழந்தையை பாதிக்கிறது என்பதால் இந்த முடிவெடுத்திருப்பதாகக் கூறினர்.இப்பொழுது காயத்ரி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் தந்தையின் தொடர்பும் எங்களுக்கு இல்லை.
இப்பொழுது மீண்டும் மீனாட்சிக்கே வருவோம்! மீனாட்சியின் கையை பிடித்துக்கொண்டு நான் எனது பெயரைக் கேட்டேன். அவள் எனது பெயரையும் எனது செல்லப் பெயரையும் சேர்த்தே தமிழ் ஆங்கிலமென இரண்டிலும் எழுதிக் காட்டினாள். இதில் என்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், 4 வயது குழந்தை அதுவும் தனது பெயரை கூப்பிட்டாலே சரியாகத் தெரியாத குழந்தை எப்படி எனது இரண்டு பெயரையும் அறிந்திருக்க முடியும் அவளுக்கு 'அப்பா' என்று சொன்னால் என்னை சுட்டிக்காட்டத் தெரியுமா? அம்மா என்று சொன்னால் அவளையாவது தெரியுமா? உங்களுக்கு மேலும் காத்திருக்கிறது அதிர்ச்சி! அவளிடம் என்னுடைய அலைபேசி எண் என்னவென்று நான் கேட்க, அவள் எனக்கே எனது எண்ணை எழுதிக் காட்டினாள். அதேபோல் நாங்கள் இருக்கும் தெருவின் பெயர் மற்றும் ஏரியாவின் பெயர் என அனைத்தையும் சிறு பிழை கூட இல்லாமல் இரு மொழிகளிலும் எழுதி காட்டினாள். இது மட்டுமா? எனது பைக் மாடல், அதன் எண், எங்கள் கார், அதன் மாடல், பெயர், கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்கில் சி++ (C++) கூட தெரிந்து வைத்திருக்கிறாள், இது தவிர அணுவினுள் புரோட்டான், எலக்ட்ரான் தவிர மூன்றாவதாக
என்ன இருக்கும் என்றால், 'நியூட்ரான்' என்று ஆங்கிலத்தில் எழுதிக் காட்டினாள். பிறகு ராக்கெட் நியூட்டனின் எந்த விதியை அடிப்படையாகக் கொண்டது என்று கேட்டால் "3rd" என்று எழுதினாள். இது தவிர நாங்கள் கேட்ட வேதியியல் (உதாரணத்திற்கு சல்பியூரிக் ஆசிடின் வேதியல் பெயர் என்றதும் 'H2SO4 ' என்று எழுதினாள்) மற்றும் புவியியல் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதிக் காட்டினாள். டாக்டர் டெரால்ட் டிரெஃபர்ட் கூறியதுபோல் "கேலண்டர் எபிலிட்டி", அதாவது எந்த ஒரு தேதி, மாதம் ஆண்டைக் குறிப்பிட்டாலும் மிகச்சரியாக கிழமையை எழுதுகிறாள். உதாரணத்திற்கு, 'ஆகஸ்ட் 15,1947 அன்று என்ன கிழமை?' என்று கேட்டால் "வெள்ளி" என்று எழுதுவாள்.
அப்பொழுது தான் வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்பிய எனது அண்ணனிடம் நடந்ததை கூறி, 'முடிந்தால் நீயும் சோதித்துப் பார்' என்று கேட்டேன். அவர் எடுத்ததுமே தான் சென்று வந்த நாட்டின் தலைநகரின் பெயரை எழுதும்படி அவளிடம் கேட்டுவிட்டு அவளது விரல்களை பிடித்துக் கொண்டார். அவள் எழுதிய விடை ‘Belgrade’. இது எனது அண்ணன் சென்று வந்த 'செர்பியா' (Serbia) நாட்டின் தலைநகரமாகும். இதில் சற்றே அதிர்ச்சி அடைந்த அவர், மீனாட்சியிடம் கேட்ட அடுத்த கேள்வி "திருப்பதியில் என்ன கிடைக்கும்?" உடனே மீனாட்சி "லட்டு" என்று எழுதிக் காட்டினாள். இதற்கடுத்து அவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனது நெருங்கிய நண்பனின் பெயர் என்ன என்று கேட்க, இவள் "பான" என்று பதில் எழுதினாள். அவரது பெயர் P. ஆனந்த். சுருக்கமாக "பான" (பானை கிடையாது!) என்றே கூப்பிடுவார்கள். இப்பொழுது எனது அண்ணன் அவளிடம் கேட்ட கேள்வி சற்று சிக்கலானது! அதன் விடை அவரைத் தவிர வீட்டில் எங்கள் யாருக்கும் தெரியாது. அவர் கேட்டார் "குட்டி! Universe (பிரபஞ்சம்) பற்றி ஆய்வு மேற்கொள்ளும் ஸ்விட்சர்லாந்து நாட்டில் செயல்படும் அமைப்பின் பெயரென்ன?" அவள் உடனே எழுதிய பதில் 'CERN'. ஒரு நொடி என் அண்ணனுக்கு இருதயம் நின்று திரும்பியது. ஆம்! அது மிகச் சரியான விடையே. அது எப்படி உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் உலகின் மிகப் பெரிய அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாள்? இந்த வயதுடைய குழந்தைகள் தனக்கு நாலு சினிமாப் பாட்டு தெரிந்தாலே பெருமை பொங்க 'டிக் டாக்'கில் ஆடிப்பாடி வீடியோ போடும் இந்தக் காலத்தில் எப்படி ஒன்றும் அறியாத ஊமைப் பெண்போல் இருக்கிறாளே இந்தக் "கல்லுளிமங்கி" என்று நான் இன்றுவரை யோசிப்பதுண்டு. பிறகுதான் தெரிந்து கொண்டேன் இவளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்று (அது என்ன என்பதை பிறகு பார்க்கலாம்!). பிரபஞ்சத்தைப் பற்றியே தெரிந்தவளுக்கு இந்த உலகிற்குள் நடக்கும் விஷயங்கள் தெரியாதா என்ன?!
அப்பொழுது தான் வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்பிய எனது அண்ணனிடம் நடந்ததை கூறி, 'முடிந்தால் நீயும் சோதித்துப் பார்' என்று கேட்டேன். அவர் எடுத்ததுமே தான் சென்று வந்த நாட்டின் தலைநகரின் பெயரை எழுதும்படி அவளிடம் கேட்டுவிட்டு அவளது விரல்களை பிடித்துக் கொண்டார். அவள் எழுதிய விடை ‘Belgrade’. இது எனது அண்ணன் சென்று வந்த 'செர்பியா' (Serbia) நாட்டின் தலைநகரமாகும். இதில் சற்றே அதிர்ச்சி அடைந்த அவர், மீனாட்சியிடம் கேட்ட அடுத்த கேள்வி "திருப்பதியில் என்ன கிடைக்கும்?" உடனே மீனாட்சி "லட்டு" என்று எழுதிக் காட்டினாள். இதற்கடுத்து அவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனது நெருங்கிய நண்பனின் பெயர் என்ன என்று கேட்க, இவள் "பான" என்று பதில் எழுதினாள். அவரது பெயர் P. ஆனந்த். சுருக்கமாக "பான" (பானை கிடையாது!) என்றே கூப்பிடுவார்கள். இப்பொழுது எனது அண்ணன் அவளிடம் கேட்ட கேள்வி சற்று சிக்கலானது! அதன் விடை அவரைத் தவிர வீட்டில் எங்கள் யாருக்கும் தெரியாது. அவர் கேட்டார் "குட்டி! Universe (பிரபஞ்சம்) பற்றி ஆய்வு மேற்கொள்ளும் ஸ்விட்சர்லாந்து நாட்டில் செயல்படும் அமைப்பின் பெயரென்ன?" அவள் உடனே எழுதிய பதில் 'CERN'. ஒரு நொடி என் அண்ணனுக்கு இருதயம் நின்று திரும்பியது. ஆம்! அது மிகச் சரியான விடையே. அது எப்படி உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் உலகின் மிகப் பெரிய அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாள்? இந்த வயதுடைய குழந்தைகள் தனக்கு நாலு சினிமாப் பாட்டு தெரிந்தாலே பெருமை பொங்க 'டிக் டாக்'கில் ஆடிப்பாடி வீடியோ போடும் இந்தக் காலத்தில் எப்படி ஒன்றும் அறியாத ஊமைப் பெண்போல் இருக்கிறாளே இந்தக் "கல்லுளிமங்கி" என்று நான் இன்றுவரை யோசிப்பதுண்டு. பிறகுதான் தெரிந்து கொண்டேன் இவளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்று (அது என்ன என்பதை பிறகு பார்க்கலாம்!). பிரபஞ்சத்தைப் பற்றியே தெரிந்தவளுக்கு இந்த உலகிற்குள் நடக்கும் விஷயங்கள் தெரியாதா என்ன?!
ஹைப்பர்லெக்சியா சில முக்கியத் தகவல்கள்:
ஹைபர்லெக்சியா பிரிவு-3ஐச் சேர்ந்த குழந்தைகளுக்கு பிரிவு-2ஐச் சேர்நத குழந்தைகளைப்போல் சிறப்புப் பள்ளிகளில் சேர்க்காமல் சாதாரண குழந்தைகளுடன் கலந்து படிக்கக் கூடிய பள்ளிகளில் (inclusion schools) சேர்த்தால் குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். (நான் மீனாட்சியை சேர்த்திருப்பது கூட இது போன்ற ஒரு பள்ளியில் தான்!).
அதேபோல், ஹைபர்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி மற்றும் கற்பித்தல் என்பது வாழ்வின் ஓர் அங்கமாக (ஏபிஏ முறையும் அதுவே!) இருக்க வேண்டும் என்பதையே டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் போன்றவர்கள் சொல்கிறார்கள். நம்மூரில் "ஆடுகின்ற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்" என்ற சொல்லுக்கு ஏற்ப "ஓடுகின்ற குழந்தையை உட்காரவைத்து கற்பிக்க முயற்சிக்காதீர்கள்!அதோபோல் உட்கார்ந்து கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி ஓடி ஆடி விளையாடும்படியான பயிற்சிகளைக் கொடுக்காதீர்கள்!" என்கிறார்கள். குழந்தையின் மனநிலையை அறிந்து உட்காரும் நேரத்தில் புதிர் போன்ற பயிற்சிகளையும், அதிக ஆற்றலுடன் இருக்கும் நேரத்தில் அந்த ஆற்றலைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளையும் கொடுத்தால் அவர்களை கையாள்வது எளிதாக இருக்குமென்று சொல்கிறார்கள். இதை விடுத்து பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளிடம் கண்டிப்பு காட்டி வற்புறுத்தி செயல்படுத்த முற்பட்டால், பிறகு அவர்களை ஒத்துழைக்க வைப்பது மிகக் கடினமாகிவிடும்.
- ஹைப்பர்லெக்சியா பிரிவுகள் 2 மற்றும் 3ஐச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆக்குபேஷனல் தெரபி (OT ), பேச்சுப் பயிற்சி மற்றும் ஏபிஏ (ABA)ஆகியவற்றை சேர்த்துக் கொடுப்பது அதிகப் பயனளிக்கும். பிரிவு-1ஐச் சேர்ந்த குழந்தைகள் எந்த பிரச்சனையும் இல்லாத குழந்தைகள் என்பதால் நாம் அவர்களை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை.
- பிறவியிலேயே எழுதப்படிக்கத் தெரிந்த குழந்தைகள் என்ற காரணத்தால் ஹைபர்லெக்சியா உள்ள குழந்தைகளை அதிகமாக எழுத ஊக்குவிப்பது நல்லது .
- பெரும்பாலான ஹைபர்லெக்சியா பிரிவு 2 மற்றும் பிரிவு3- பாதிப்புள்ள குழந்தைகள் தாமதமாகப் பேசக்கூடிய குழந்தைகளாக இருப்பார்கள். அதேவேளையில் செவித்திறன் குறைபாடு மற்றும் மனநல பாதிப்புள்ள குழந்தைகளும் தாமதமாகப் பேசலாம். எனவே மற்ற பிரச்சனை உள்ள குழந்தைகளோடு ஹைபர்லெக்சியா உள்ள குழந்தைகளை பிரித்துப் பார்ப்பதில் அதிக கவனம் வேண்டும்.
- ஹைபர்லெக்சியா குழந்தைகள் 5 வயதிற்குள் தங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமென்பதை நிச்சயம் வெளிக்காட்டி விடுவார்கள்.
- அதேபோல் ஹைப்பர்லெக்சியா உள்ள குழந்தைகள் ஆரம்பகட்டத்தில் 'ஒலி' வடிவத்தில் மொழியைக் கேட்டு மற்றவர்கள் கூறும் கட்டளைகளை பின்பற்ற சற்று சிரமப்படுவார்கள். ஏனென்றால் அவர்களது மூளை ஒலியையும் எழுத்து வடிவமாகவே வாங்கி சிந்திக்கக் கூடியது. அதனால்தான் அவர்களுக்கு முதலில் நன்கு பழகியவர்களின் குரலில் கட்டளைகள் புரியத் தொடங்கும். போகப்போகத்தான் மற்றவர்கள் பேசுவது புரியும். அதேபோல் நேரடியான கட்டளைகளை (concrete language) மட்டுமே அவர்களால் புரிந்து கொள்ள முடியும். மறைமுகமான கட்டளைகளை புரிந்து கொள்ள சற்று சிரமப்படுவார்கள். உதாரணம்: "டிவி ரிமோட்டை எடுத்து வா" என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள். "டிவி பாக்கணும்னா முதல்ல 'ஆன்' பண்ண வேண்டாமா? போயி எடுத்துட்டு வா"என்று சொன்னால் குழம்பிவிடுவார்கள். ஆரம்பகட்டத்தில் மீனாட்சியை பெயர் சொல்லி அழைத்தாலே திரும்ப மாட்டாள், சுட்டிக் காட்டிய இடத்தை பார்க்க மாட்டாள். மேலும் எளிய வார்த்தைகளுடன் கூடிய கட்டளைகளை பின்பற்றுவதே மிகக் கடினமாக இருந்தது அவளுக்கு. அவர்கள் வளர வளரத் தான் இதுபோன்ற பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரியும்.
- அதேபோல் எண்களாலும் எழுத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட ஹைபர்லெக்சியா குழந்தைகள் பொதுவாக மளிகைக் கடைக்கோ அல்லது பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கோ செல்லும்போது, அங்கு அவர்களுக்குப் பிடித்த குறிப்பிட்ட பிராண்ட் சாக்லேட்டோ அல்லது மற்ற பொருட்களோ அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டால் அவர்களால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது (overstimulation). வினோதமாக குதித்தும், வித்தியாசமான ஒலிகளை எழுப்பியும் சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். அதிக கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு சென்றாலும் இதுவே ஏற்படும்! அதிக ஒலியும் இரைச்சலும் அவர்களது சமநிலையை பாதிக்கும்.
முக்கிய குறிப்பு: "கவனக் கலை" (multi tasking) மிகப் பழமையானது நமது தமிழ்ப் பாரம்பரியத்தில். இதில் சிறந்து விளங்கியவர்களை 'அஷ்டாவதானி ' (8 விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பவர்), 'தசாவதானி' (10 விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பவர்) என்பார்கள். இதனை இன்றும் மதுரையைச் சேர்ந்த "கவனகர்" திரு.இராம.கனகசுப்புரத்தினம் பழகுகிறார், கற்பிக்கவும் செய்கிறார். மற்றொருவர் திரு.கலைச் செழியன்.
சில ஹைப்பர்லெக்சியா குழந்தைகளுக்கு எகோலாலியாவும் (echolalia) இருக்கலாம். அதாவது அவர்கள் பார்த்த அல்லது கேட்ட வார்த்தைகளை இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்ப்பார்கள். இதுவும் ஒரு வகையான கற்றல் முறை தான் என்றும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் இது பெரும்பாலும் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. இது அதிகமாக ஆட்டிஸம் மற்றும் ஆடிஸத்துடன் கூடிய ஹைப்பர்லெட்சியா பிரிவு-2ல் காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் பிரிவு-3ஐச் (ஆரம்பத்தில் ஆட்டிஸம் போல தோன்றும்) சேர்ந்த குழந்தைகள் தாமதமாகப் பேசத் தொடங்குவதால் இந்த வளர்ச்சி நிலையை பெரும்பாலும் கடந்து சென்று விடுகிறார்கள்.
ஹைப்பர்லெக்டசியா பிரிவு-3ஐ பற்றி டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் மட்டுமே சொல்லிவருகிறார். அவருடைய ஆய்வின்படி இப்பிரிவைச் சேர்ந்த குழந்தைகள், பின்னாளில் ஹைப்பர்லெக்சியா பிரிவு-1ஐ போல் எந்த பிரச்சனையும் இல்லாத குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்கிறார். ஆனால் ஏபிஏ(ABA)வும், ஓடி(OT)யும்,பேச்சுப் பயிற்சியும் (Speech ) சரியாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமென்கிறார். அவர் கண்காணித்து வரும் பல குழந்தைகள் பிரிவு-3ல் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள் .
ஆனால் மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் மனநல பரிசோதனை மற்றும் புள்ளிவிவரக் கையேடான DSM-5ன் படி (Diagnostic and Statistical Manual of Mental Disorders) ஹைப்பர்லெக்சியா சேர்க்கப்பட்டாலும். சவான்ட் சிண்ட்ரோம் (Savant Syndrome) இன்னும் சேர்க்கப்படவில்லை. அதே நேரம் வழக்கத்தைப் பொருத்தவரையில் பெரும்பாலான மருத்துவர்களும், தெரப்பிஸ்ட்களும் அனைத்துக் குழந்தைகளையும் 'ஆட்டிஸம்' என்ற ஒற்றைக் குடையின் கீழ் தான் வைத்துள்ளார்கள். பெரும்பாலும் சிறப்பாக செயல்படும் குழந்தைகளை 'உயர்திறன் ஆடிஸம்' (High functioning autism) அல்லது ஆஸ்பர்ஜர் சிண்ட்ரோம் (Asperger Syndrome) என்றும், கற்றல் குறைபாடு, டவுன் சின்ட்ரோம் போன்ற பிரச்சனைகளுடன் ஆடிஸம் உள்ள குழந்தைகளை 'குறை திறன் ஆட்டிஸம்' (Low functioning autism) என்றே குறிப்பிடுகிறார்கள். இவற்றை மொத்தமாக 'ஆட்டிஸம்' என்று சொல்லாமல், தனித் தனிப் பிரச்சனைகளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல் இன்று உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. DSM-6ல் இதற்கான தீர்வு கிடைக்கலாம் என்று நான் பலமாக நம்புகிறேன்!
ஜெனிடிக் மெமரி மற்றும் டெலிபதி (நுண்ணறிவு ): எனது அடுத்த மின்னஞ்சலில் மீனாட்சிக்கு எப்படி கற்றுக் கொடுக்காமலேயே எல்லாம் தெரிந்திருக்கிறது என்று டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறிய காரணம் "ஜெனிடிக் மெமரி" (மரபு வழி அறிவு) தூண்டப்பட்டதன் காரணமாகவே உன் மகள் அனைத்தையும் அறிந்துள்ளாள் என்று கூறினார்(போதிதர்மனின் வழித்தோன்றலின் ஜெனிடிக் மெமரியை தூண்டுவதன் மூலம் அவருக்கு போதிதர்மனின் அறிவும் திறமையும் கிடைக்கும் என்று "ஏழாம் அறிவு" என்று தமிழில் கூட ஒரு திரைப்படம் வந்திருக்கிறதே?!). அவர் மேலும் கூறினார் "உன் மகளுக்கு "டெலிபதி" (நுண்ணறிவு-பிறர் மனதில் நினைப்பதை உணரும் திறமை) தெரியும் என்று சந்தேகிக்கிறேன். இங்கே என்னிடம் சிகிச்சைக்கு வரும் இன்னும் பேச்சு வராத ஒரு குழந்தையிடம் தெரபிஸ்ட் எந்த கணக்கை கொடுத்தாலும் சரியாக விடை எழுதிவிடுகிறாள். நாங்கள் அவளை 'கணிதமேதை' என்று தான் முதலில் நினைத்தோம்.பிறகு தான் தெரிந்தது அந்தக் குறிப்பிட்ட கணக்கின் விடையை தெரப்பிஸ்ட் முன்கூட்டியே அறிந்து வைத்ததை இந்த குழந்தை அவரின் மனதைப் படிப்பதன் மூலம் எளிதாக தெரிந்து வைத்திருந்திருக்கிறாளென்று.
மேலும் துபாயில் வாழும் கேரளாவைச் சேர்ந்த நந்தனா என்ற சிறுமி இதேபோல் "டெலிபதி" தெரியும் என்றும், அந்தப் பெண்ணின் பெற்றோர் தன்னுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருந்ததாகவும், ஆனால் தற்பொழுது அவள் என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடியவில்லையென்றும் கூறினார். நான் மேலும் அவளை பற்றி தெரிந்து கொள்ள 'கூகுள்' செய்து பார்க்குமாறு கூறினார்.
(மேலே நான் வழங்கியுள்ள இணைப்பில் நந்தனாவைப் பற்றி கலீஜ் டைம்ஸில் வெளியான முழு பேட்டி இடம்பெற்றுள்ளது. நந்தனா எப்படி தனது தாயின் மனதை படிக்கிறாள், இவளுக்காக தாய் சந்தியா ஏபிஏ (ABA )-வில் சிர்டிபிகேட்டும், பெங்களூர் பல்கலைக் கழகத்திலிருந்து சமூக மறுவாழ்வுத்துறை படிப்பில் பட்டயமும் பெற்று அவளுக்கு நிழல் ஆசிரியையாக (shadow teacher) பள்ளியில் அவளுடன் அமர்ந்து பரிட்சை எழுதுவது, அவளை சோதித்த வல்லுநர் குழுவினர் வியப்பில் ஆழ்ந்தது என அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன).
நான் கண்ட மற்றொரு யூடியூப் காணொளி ஒன்றில் பேசிய ஆட்டிஸம் பாதித்த ஒரு சிறுவன் தான் ஏன் பிறரது கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதில்லை என்பதற்கும் பதிலளித்துள்ளான். அவன் சொல்கிறான் "நான் பிறரைப் பார்த்து அவர்களது கண்களை நோக்கும்போது அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் எனது எண்ணங்களோடு குறிக்கிடுகின்றன. எனவேதான் நான் நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கிறேன்" என்கிறான்.
"ஹைப்பர்லெக்சியா" குழந்தைகளை சரியான முறையில் ஊக்கப்படுத்தி வளர்ப்பதற்கு டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் வழங்கியுள்ள பெற்றோருக்கும் , பயிற்சியாளர்களுக்குமான இலவசக்கையேடு! அனைவரும் இங்கிருந்து படித்துப் பயன்பெறுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
முக்கிய குறிப்பு: டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் (88) அவர்கள் 14/12/2020 அன்று இயற்கை எய்தினார். உலகெங்கிலும் என் போன்ற பெற்றோர்கள் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து தவிக்கிறோம். அன்னாரது பிறந்த நாளை சவான்ட் சின்ட்ரோம் மற்றும் ஹைப்பர்லெக்சியா விழிப்புணர்வு தினமாக கொண்டாடவேண்டுமென்ற கோரிக்கையை மற்ற பெற்றோரிடமும் டாக்டரின் குடும்பத்தாரிடமும் தெரிவித்துள்ளேன். இதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்த முடிவெடுத்துள்ளேன்.
8. வெளிப்பட்டது மீனாட்சியின் சுயரூபம்!
இது நடந்த மறுநாள், மீனாட்சி படிக்கும் பள்ளியின் நிர்வாகியை சந்தித்து பெரும்பாலான வகுப்புகளை நிறுத்தி இருப்பதாகச் சொல்லி அதனால் புதிதாக ஏதேனும் பிரச்சனைகள் அவளிடம் தென்படுகிறதா என்று வினவினோம்.அதற்கு அவர் தனக்குத் தெரிந்த ஒரு பயிற்சி மையத்தில் ஆக்குபேஷனல் தெரபி,ஸ்பீச், ஸ்பெஷல் எஜுகேஷன் என அனைத்தும் தரப்படுவதாகவும், அதை நடத்தும் பெண்மணியை ஒருமுறை சந்தித்து வரும்படியும் சொன்னார். நானும் என் மனைவியும் வழக்கம்போல் எல்லா இடத்திலும் சொல்வதுபோல் அவள் பிறப்பதற்கு முன்னால் தலையிலிருந்த கால்ஃ போகபாலி (colpocephaly) பிரச்சனை, பிறந்த பிறகு பின்னந் தலையில் தோன்றிய hemangioma (ரத்தக் குழல் கட்டி), நாங்கள் சென்று கொண்டிருந்த வகுப்புகள் என ஒவ்வொன்றையும் வரிசை மாறாமல் எடுத்துச் சொன்னோம். அந்தப் பெண்மணி அனைத்து பயிற்சிகளையும் ஒரு குடையின்கீழ் தங்கள் இடத்திலேயே தருவதாகச் சொல்லி எங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசி அனுப்பி வைத்தார். அந்தப் பெண்மணி நாங்கள் அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில், மீனாட்சியின் பள்ளி நிர்வாகியை அழைத்து "நீங்கள் அனுப்பி வைத்த அந்தக்குழந்தை மீனாட்சியும் அவளது பெற்றோரும் இப்பொழுது தான் இங்கு வந்து சென்றார்கள். அந்தக் குழந்தைக்கு நீங்கள் நினைப்பதுபோல் "ஆட்டிஸம்" பிரச்சனை எல்லாம் கிடையாது.அவள் யாரென்று சில நாட்களில் அவளுடைய பெற்றோரே வந்து செல்வார்கள். அதுவரை நீங்கள் பொறுத்திருங்கள்" என்று சொல்லியிருக்கிறார். இதை பள்ளி நிர்வாகி மூலம் தெரிந்து கொண்ட எனது மனைவி ரேவதி அதை என்னிடம் சொல்ல "ஆட்டிஸம் மட்டுமல்ல இன்னும் நிறைய பிரச்சனைகள் சேர்ந்தே இருக்கிறது என்று சொல்லி நம் வயிற்றில் புளியைக் கரைக்க போகிறார். அதுதான் நடக்கப் போகிறது பார்" என்றேன்.
அதேவேளையில் எனது பெற்றோரும் நாடு திரும்பி விட, ஒரு நாள் நானும் எனது தாயாரும் தி.நகர் ரங்கநாதன் தெருவிற்கு சென்றோம். நான்காவது பிறந்தநாளை நெருங்கிக்கொண்டிருக்கும் குழந்தை படிப்பில் என்ன செய்யப்போகிறாளோ என்ற பயத்தில் நான் எனது பள்ளிப்பருவத்தில் பயன்படுத்திய ஸ்லேட்டையும், குச்சியையும் தேடினேன். வீட்டிற்கு வந்து எனது மனைவியிடம் அதை கொடுத்து "தயவுசெய்து அவளுக்கு அ, ஆ-விலிருந்து ஆரம்பித்தது எழுதப் பழக்கு. நாம் பார்க்கும் நிறைய குழந்தைகளைப் போல் தனியாக எழுத சிரமப்பட போகிறாள்" என்றேன். மீனாட்சி அழைத்துக்கொண்டு எனது மனைவி ஸ்லேட்டுடன் எங்கள் ரூமிற்குச் சென்றாள். வழக்கம்போல் மீனாட்சியின் அழுகையும், அலறலும் கேட்டது. சிறுது நேரம் கழித்து வெளியே வந்த எனது மனைவி ரேவதி, "மீனாட்சி தானே நன்றாக எழுதுகிறாள்" என்றாள். "நீ கையைப் பிடித்தால் நீ எழுதிய எழுத்துக்களின் மேல் எழுதுகிறாளா?" என்று கேட்டேன். ரேவதி சொன்னாள் "இல்லை! அவளே எழுதுகிறாள்"என்று சொன்னாள். எனக்கு அது சரியாக புரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நான் அந்த ஸ்லேட்டை வாங்கிக் கொண்டு, மீனாட்சியை என் மடியில் அமர்த்தி அவளின் கையை பிடித்துக்கொண்டு அ, ஆ எழுதச் சொன்னேன். ரேவதி சொன்னதன் அர்த்தம் எனக்கு இப்பொழுது தான் புரிகிறது! நான் கையை பிடித்திருக்கிறேன். ஆனால் எழுதுவது நானல்ல! அது மீனாட்சி தான்! எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. இப்பொழுது அ, ஆ தாண்டி 1 , 2 என்று எண்களைக் கேட்க நான் கேட்டு முடிக்கும் முன்பே 1,2,3 என்று கிறுக்கலாக எழுதத் தொடங்குகிறாள். எனக்கு குழப்பம் இப்போது அதிகமானது. நாம் தான் எழுதுகிறோமா அல்லது அவள் எழுதுகிறாளா அது எப்படி நாம் கேட்கும் முன்பே பதில் எழுத ஆரம்பிக்கிறாள். எனக்கு உண்மையிலேயே தலைசுற்றியது .எனது லேப்டாப் முன்பு அமர்ந்த நான் கூகுளில் தேட தொடங்கினேன். எனக்குத் தேவையான பதில்கள் ஹைபர்லெக்சியா(Hyperlexia), சவான்ட் சின்ரோம் (savant syndrome) என்ற தலைப்புகளில் கிடைத்தன.
அதேவேளையில் எனது பெற்றோரும் நாடு திரும்பி விட, ஒரு நாள் நானும் எனது தாயாரும் தி.நகர் ரங்கநாதன் தெருவிற்கு சென்றோம். நான்காவது பிறந்தநாளை நெருங்கிக்கொண்டிருக்கும் குழந்தை படிப்பில் என்ன செய்யப்போகிறாளோ என்ற பயத்தில் நான் எனது பள்ளிப்பருவத்தில் பயன்படுத்திய ஸ்லேட்டையும், குச்சியையும் தேடினேன். வீட்டிற்கு வந்து எனது மனைவியிடம் அதை கொடுத்து "தயவுசெய்து அவளுக்கு அ, ஆ-விலிருந்து ஆரம்பித்தது எழுதப் பழக்கு. நாம் பார்க்கும் நிறைய குழந்தைகளைப் போல் தனியாக எழுத சிரமப்பட போகிறாள்" என்றேன். மீனாட்சி அழைத்துக்கொண்டு எனது மனைவி ஸ்லேட்டுடன் எங்கள் ரூமிற்குச் சென்றாள். வழக்கம்போல் மீனாட்சியின் அழுகையும், அலறலும் கேட்டது. சிறுது நேரம் கழித்து வெளியே வந்த எனது மனைவி ரேவதி, "மீனாட்சி தானே நன்றாக எழுதுகிறாள்" என்றாள். "நீ கையைப் பிடித்தால் நீ எழுதிய எழுத்துக்களின் மேல் எழுதுகிறாளா?" என்று கேட்டேன். ரேவதி சொன்னாள் "இல்லை! அவளே எழுதுகிறாள்"என்று சொன்னாள். எனக்கு அது சரியாக புரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நான் அந்த ஸ்லேட்டை வாங்கிக் கொண்டு, மீனாட்சியை என் மடியில் அமர்த்தி அவளின் கையை பிடித்துக்கொண்டு அ, ஆ எழுதச் சொன்னேன். ரேவதி சொன்னதன் அர்த்தம் எனக்கு இப்பொழுது தான் புரிகிறது! நான் கையை பிடித்திருக்கிறேன். ஆனால் எழுதுவது நானல்ல! அது மீனாட்சி தான்! எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. இப்பொழுது அ, ஆ தாண்டி 1 , 2 என்று எண்களைக் கேட்க நான் கேட்டு முடிக்கும் முன்பே 1,2,3 என்று கிறுக்கலாக எழுதத் தொடங்குகிறாள். எனக்கு குழப்பம் இப்போது அதிகமானது. நாம் தான் எழுதுகிறோமா அல்லது அவள் எழுதுகிறாளா அது எப்படி நாம் கேட்கும் முன்பே பதில் எழுத ஆரம்பிக்கிறாள். எனக்கு உண்மையிலேயே தலைசுற்றியது .எனது லேப்டாப் முன்பு அமர்ந்த நான் கூகுளில் தேட தொடங்கினேன். எனக்குத் தேவையான பதில்கள் ஹைபர்லெக்சியா(Hyperlexia), சவான்ட் சின்ரோம் (savant syndrome) என்ற தலைப்புகளில் கிடைத்தன.
7. இந்தக் குருட்டுப் பிச்சைக்காரனுக்கு பிச்சையிடப்போவது யார்?
சரி, குழந்தைக்கு என்னதான் பிரச்சனை என்று தெரிந்துகொள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று காட்டினோம். அவர் குழந்தையை முழுமையாக சோதித்து விட்டு குழந்தை இப்படி நினைத்த இடத்திலெல்லாம் சிறுநீர் கழிப்பதற்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்தார். அப்படியானால் நாங்கள் பின்பற்றும் பாதையில்தான் எங்கோ பிரச்சனை உள்ளது என்று அறிந்து ஸ்பீச், ஆக்குபேஷனல் தெரபி இரண்டையும் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டோம். ஏபிஏ மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தோம். இம்முறை எனது பெற்றோர் மீண்டும் வெளிநாடு செல்ல, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை எங்களை வாட்டியது.எனக்கு துவக்கத்திலிருந்தே பெரிதாக கடவுள் நம்பிக்கை கிடையாது. அதே நேரத்தில் கடவுள் இல்லை என்றும் நான் சொன்னது இல்லை.கும்பிட வேண்டுமென்று தோன்றினால் கோவிலுக்குச் செல்வேன். இல்லையென்றால் விட்டு விடுவேன்.
திப்பு மஸ்தான் அவ்லியா தர்கா, ஆற்காடு
இந்த நேரத்தில் சிறுவயதிலிருந்தே மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்த எனக்கு, ஒரு ஆண் வாரிசு வேண்டி அப்போது மைசூரின் தளவாயாக இருந்த ஹைதர் அலியும், அவரது மனைவி ஃபக்ருநிசாவும் ஆற்காட்டில் இருந்த "சூஃபி" ஞானி திப்பு மஸ்தான் அவுலியா (சூஃபி-என்றால் அரபியில் கம்பளி ஆடை அணிந்த துறவி என்று பொருள்.மஸ்தான்- என்றால் "இறைப் பித்தர்" என்று பொருள். இது போன்றவர்களை இந்து மதத்தில் "பிரம்ம ஞானிகள்"என்று குறிப்பிடுவார்கள்) தர்காவிற்கு சென்று, தொழுது, அவரது ஆசிர்வாதத்துடன் 1750ஆம் ஆண்டு மகன் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு அந்த ஞானியின் நினைவாக 'திப்பு சுல்தான்' என்று பெயரிட்டதாக அறிவேன். இது தவிர ஆற்காடு நவாப் குடும்பத்தாருக்கும் அவர்கள் வேண்டியதை நிறைவேற்றித் தந்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன். இப்பொழுது அங்கே அந்த தர்கா இன்னும் இருக்கிறதா என்பதை கூகுள் உதவியுடன் தெரிந்துகொண்டு, மீனாட்சியை அழைத்துக்கொண்டு நானும் எனது மனைவி ரேவதியும் காரில் ஆற்காடு நோக்கிப் பயணித்தோம்.
கண்ணிழந்த ஒரு யாசகனுக்கு யார் பிச்சையிட்டார்கள் என்று தெரியுமா? அவன் இருக்கும் நிலைக்கு அவன் தட்டில் விழும் காசு தான் அவனுக்குக் கடவுள். கிட்டத்தட்ட நானும் அதே நிலையில் தான் இருந்தேன். எது உதவும்? யார் உதவுவார்கள்? இந்தப் பிரச்சனைக்கு தீர்வென்ன? எங்கே முடியப் போகிறது? எதுவும் தெரியாது! ராணிப்பேட்டை பாலம் கடந்த உடனேயே இடதுபுறம் ஆற்காடு வந்தது. உள்ளே நுழைந்த சில கிலோமீட்டர்களிலேயே இடம் வந்து சேர்ந்தது. மிக எளிமையாகக் காட்சி அளித்த அந்த தர்காவை திப்பு மஸ்தான் அவ்லியாவின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்னும் நிர்வாகித்து வருகிறார்கள். நான் சென்ற அன்று மதிய நேரம் என்பதால் தர்கா மூடியிருந்தது. இரண்டு கட்டடங்கள் தாண்டி அருகிலேயே அதன் நிர்வாகிகளின் வீடு இருந்ததால் அங்கிருந்த ஒரு இளைஞன் எங்களுக்காக தர்காவை திறந்து, மந்திரம் ஓதி, மயிலிறகால் குழந்தையை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தான். வழக்கம்போல் மீனாட்சி அங்குமிங்கும் ஓடிக் கொண்டும் அழுதுகொண்டும் தனி உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.அந்த இளைஞன் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பி இருப்பதாகவும் கூறினான். அந்த தர்கா அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் இடமென்று தெரிந்துகொண்டேன். நான் சில நிமிடங்கள் கண்மூடிப் பிரார்த்தனை செய்தேன். பிறகு அங்கிருந்து சென்னை நோக்கிக் கிளம்பினோம்.
Subscribe to:
Posts (Atom)